தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நான் மகான் அல்ல, சிறுத்தை, மாஸ், பாண்டிய நாடு, ஜீவா, பாயும்புலி, நோட்டா, அயோக்யா, சக்ரா, ஈஸ்வரன் போன்ற பல படங்களுக்கு நிர்வாக தயாரிப்பாளராக பணி புரிந்தவர் அந்தோணி சேவியர். இவருக்கு வயது 51.
சுசீந்திரன் இயக்கத்தில் “நெஞ்சில் துணிவிருந்தால்” படத்தை தயாரித்தார்.
பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.
குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துகுடிக்கு சென்ற இடத்தில் ஹார்ட் அட்டாக் ஆகி நேற்று மரணமடைந்தார்.
அவரது உறவினர்கள் பெரும்பாலும் மதுரை புதூரில் வசித்து வருவதால் அவரது உடலை அங்கு எடுத்து செல்கிறார்கள். இன்று மதியம் நல்லடக்கம் நடைபெறுகிறது.
Lourdhu nagar 7th street, Alagar Kovil main road, K.Pudur, Tamil Nadu 625007.
இவருக்கு, மனைவி ஜோஸ்பின் ஜெயா, கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மகள் அபி, 18 வயதில் ஜெய்சன் என்ற மகனும் இருக்கிறார்கள் .
இவரது மறைவுக்கு சுசீந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Nenjil Thunivirundhaal producer Anthony Xavier passed away