சினிமா ஸ்டிரைக் கூட ப்ளஸ்தான்; ராதா மகள் கார்த்திகா ஏன் இப்படி சொன்னார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீவா நடித்த கோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் கார்த்திகா.

இவர் முன்னாள் நடிகை ராதாவின் மகள் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இவர் தற்போது நடைபெற்று வரும் சினிமா ஸ்டிரைக் குறித்து தன் ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார்.

வருகிற மார்ச் 30ஆம் தேதி கமல், அம்பிகா நடித்த காக்கி சட்டை படம் ரி-ரிலீஸ் ஆகிறது.

அப்பட போஸ்டரை பதிவிட்டு இந்த சினிமா ஸ்டிரைக்கால் மற்றொரு பக்கம் நல்லது நடக்கிறது.

மிகச்சிறந்த படங்கள் மீண்டும் வெளியாகிறது என பதிவிட்டுள்ளார்.

நடிகை அம்பிகா இவரது பெரியம்மா என்பது குறிப்பிடத்தக்கது.

Karthika Nair‏Verified account @KarthikaNair9 2h2 hours ago
The plus side of the Tamil film strike.. re-release of some golden movies

Some Golden hit movies releasing in Cinema Strike is plus says Karthika

ராம்சரணின் ரங்கஸ்தலம் படத்தில் ரஜினி-சிரஞ்சீவி ஸ்டைல்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா, சமந்தா மற்றும் பலர் நடித்துள்ள ‘ரங்கஸ்தலம்’ படம் வரும் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

தெலுங்கு ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘ரங்கஸ்தலம்’.

சுகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் ராம்சரண் தேஜா, சமந்தா இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.

சிட்டிபாபு என்ற கிராமத்து இளைஞராக ராம்சரணும், ராமலட்சமி என்ற கிராமத்துப் பெண்ணாக சமந்தாவும் நடித்துள்ளனர்.

இந்த வாரம் மார்ச் 30ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.

80களில் நடக்கும் கதையாக கிராமத்துப் பின்னணியில் இந்தப் படம் தயாராகியுள்ளது.

இப்படத்தில் நடிப்பதற்காக 1980களில் வெளியான இவரது தந்தை சிரஞ்சீவியின் ‘ஊரிக்கிச்சின மாட்டா, மன ஊரி பாண்டவலு, ஆபத்பாந்தவடு” ஆகிய படங்களை பார்த்தாராம்.

மேலும் ரஜினிகாந்த் படங்களையும் பார்த்துள்ளதாகவும் அவர்களின் சில ஸ்டைல்களை அதில் பின்பற்றியுள்ளதாகவும் ராம்சரண் தெரிவித்துள்ளார்.

Ramcharan followed Rajini Chiranjeevi styles in Rangasthalam movie

ரசிகரின் காதல் கடிதத்தால் ஆடிப்போன ஆடுகளம் டாப்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்த ‘ஆடுகளம்’ படத்தில் நாயகியாக நடித்தவர் டாப்சி.

இதனையடுத்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா-2, வைராஜா வை ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

அதன் பின்னர் தெலுங்கு, ஹிந்தி சினிமாக்களில் நடிக்கத் தொடங்கினார்.

இந்நிலையில் தனக்கு வந்த காதல் கடிதங்களிலேயே ஒரு கடிதம் தன்னை மிகவும் கவர்ந்துவிட்டதாக டாப்சி கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-

“பல ரசிகர்களிடமிருந்து காதல் கடிதங்கள் வருகின்றன.

ஒவ்வொரு கடிதத்திலும் ஒவ்வொருவரின் ஆழமான அன்பை காண்கிறேன்.

அதில் ஒரு ரசிகர் “நான் மது அருந்த மாட்டேன். மாமிசத்தை தொட மாட்டேன்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக நான் மிகவும் தூய்மையானவனாக வாழ்கிறேன்.

உன்மேல் நான் வைத்திருக்கும் அன்பை நிரூபிக்க தயாராக இருக்கிறேன்.

உண்மை கண்டறியும் சோதனைக்கு கூட தயாராக இருக்கிறேன்.

என் மூளையை பரிசோதிக்க மறந்து விடாதே அன்பே. என் மனது முழுவதும் நீதான் இருக்கிறாய்” என்று எழுதியிருந்தார்.

அந்த கடிதம் என்னை கவர்ந்த ஒன்று” என டாப்சி தெரிவித்துள்ளார்.

27 நாட்களை நெருங்கியது சினிமா ஸ்டிரைக்; தீர்வுதான் என்ன..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தியேட்டர்களில் புதிய படங்களை திரையிட டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதை குறைக்க வலியுறுத்தி திரைப்பட தயாரிப்பாளர்கள் மார்ச் 1 முதல் வேலை நிறுத்தம் போராட்டம் செய்து வருகின்றனர்.

பெரிய படங்களுக்கு அதிக கட்டணமும் சிறிய படங்களுக்கு குறைவான கட்டணமும் வசூலிக்க வேண்டும் என்றும் பட அதிபர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

மேலும் எல்லா தியேட்டர்களிலும் ஆன்லைட் டிக்கெட் முறையை கொண்டு வர வேண்டும், ‘பார்க்கிங்’ கட்டணத்தையும் கேன்டீன்களில் விற்கப்படும் உணவு பண்டங்கள் விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கி இன்றோடு 27 நாட்கள் ஆகிவிட்டது.

மேலும் கடந்த மார்ச் 16-ந்தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளையும் ரத்து செய்து விட்டனர்.

இதனால் சினிமா துறை சார்ந்த அனைத்து தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளனர்..

ஒரு சில நடிகர்-நடிகைகள் வீட்டில் முடங்கியிருந்தாலும் சிலர் வெளிநாடுகளுக்கு பறந்து விட்டனர்.

சீனியர் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை பட அதிபர்கள் நேரில் சந்தித்து வேலை நிறுத்தம் குறித்து விளக்கி உள்ளனர்.

டைரக்டர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், பெப்சி, ஒளிப்பதிவாளர்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.

வேலை நிறுத்தத்தால் திரைப்பட தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று ரஜினிகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

தயாரிப்பாளர்கள் கோரிக்கைகள் குறித்து தியேட்டர் அதிபர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

பட அதிபர்களும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஓரிரு நாளில் மீண்டும் சந்தித்து பேச உள்ளனர்.

அப்போது பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு வேலை நிறுத்தம் கைவிடப்படுமா? என்பது அப்போதுதான் தெரியவரும்.

விஜய் ரசிகர்கள் அதிமுக.வுக்கு ஆதரவு தர வேண்டும் : அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா மற்றும் எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய தமிழக அமைச்சர் தங்கமணி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

அதுபோல் தற்போது தங்களுக்கும் ஆதரவு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு தங்களிடம் ஆதரவு கேட்டுள்ளதை விஜய் ரசிகர்கள் பெருமையாக கூறி வருகின்றனர்.

TN Minister Thangamani request they need Vijay fans support

IPL தொடரில் டான்ஸ் ஆட ரன்வீர் சிங்குக்கு கோடிக்கணக்கில் சம்பளம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

11வது ஐ.பி.எல். தொடர் கிரிக்கெட் போட்டி தொடக்க விழா மும்பையில் ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ரன்வீர் சிங்குக்கு ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் சரிசமமான அளவில் அதிகம் என்பதால் அவரை வைத்தே தொடக்க நிகழ்ச்சி நடத்துவதென ஐ.பி.எல். நிர்வாகமும் திட்டமிட்டுள்ளது.

இதற்காக அவரை அணுகிய போது 15 நிமிட நிகழ்ச்சிக்கு ரூ. 5 கோடி கேட்டதாகவும், இதற்கு ஐ.பி.எல். நிர்வாகமும் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இவர் அண்மையில் வெளியான தீபிகா படுகோனின் பத்மாவத் படத்தில் கொடூர வில்லனாக நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Ranveer Singh demand Rs 5 crores to dance in IPL series

More Articles
Follows