‘தனுஷ்-சிவகார்த்திகேயன்… ரெண்டு பேரும் ஒண்ணுதான்’ – துரை செந்தில்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன்னுடைய தரமான படைப்புகளால் பல தேசிய விருதுகளை தமிழ் சினிமாவுக்கு பெற்றுத் தந்தவர் இயக்குனர் வெற்றிமாறன்.

இவரிடம் உதவியாளராக இருந்த துரை செந்தில்குமார் அவர்கள் எதிர் நீச்சல் மற்றும் காக்கி சட்டை ஆகிய படங்களை இயக்கினார்.

இந்த இரு படங்களையும் தனுஷ் தயாரிக்க சிவகார்த்திகேயன் நடிக்க, அனிருத் இசையமைத்திருந்தார்.

தற்போது தனுஷ் நடிக்க, கொடி படத்தை இயக்கியுள்ளார் துரை செந்தில்குமார்.

இந்நிலையில் இவரை சந்தித்து..

“தனுஷ், சிவகார்த்திகேயன் இருவரையும் இயக்கியிருக்கிறீர்கள்.? என்ன வித்தியாசம்? எப்படி உணர்கிறீர்கள்? என்று கேட்டபோது…

“இருவரும் நடிகர்கள்தான். ரெண்டு பேரும் ஒண்ணுதான். வித்தியாசமில்லை” என்றார்.

‘விஜய் அம்மாவே தனுஷ் ரசிகைதான்…’ கொடி இயக்குனர் துரை பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதன்முறையாக தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் கொடி.

துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் த்ரிஷா மற்றும் இயக்குனர் எஸ்ஏ. சந்திரசேகரன் ஆகியோர் தவிர முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

அப்போது இயக்குனர் துரை செந்தில்குமார் பேசும்போது…

நான் இதுவரை பணிபுரிந்த படங்களில் எல்லாம் தனுஷ் இருந்திருக்கிறார்.

வெற்றிமாறன் அவர்கள் தனுஷ் படத்தை இயக்கியபோது அங்கு உதவியாளராக பணிபுரிந்தேன்.

அதன் பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல், காக்கி சட்டை படங்களை நான் இயக்கியபோது தனுஷ் தயாரிப்பாளராக இருந்தார்.

தற்போது அவரது கொடி படத்தை இயக்கியிருக்கிறேன்.

அரசியல் படங்களுக்கு காட்பாதர் என்று இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் சாரை சொல்லலாம்.

கொடி படத்தில் அவரை நடிக்க வைக்க அணுகியபோது முதலில் மறுத்தார்.

பின்னர் விஜய் அம்மா ஷோபாவிடம் அவர் மறுத்த காரியத்தை தெரிவித்தாராம்.

எனக்கு தனுஷ் ரொம்ப இஷ்டம். அவரோட ரசிகை நாம எல்லாரும்.

அப்புறம் ஏன் முடியாது சொன்னீர்கள். என்று தெரிவித்துவிட்டு, பின்னர் எஸ்ஏசி சாரை நடிக்க சம்மதிக்க வைத்திருக்கிறார்.

அவருடைய கேரக்டர் பெரிய அளவில் ரீச்சாகும்” என்று பேசினார்.

கொடி ட்ரைலர்: தெறிக்க விடும் தனுஷின் பன்ச் டயலாக்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று தனுஷின் கொடி படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது.

கவிஞர் விவேக்கின் வரிகளில், சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் எஸ்கேப் ஆர்ஸ்டிஸ்ட் மதனுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் அண்ணன், தம்பி என இரு வேடம் ஏற்றுள்ளார்.

மேலும் இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த ட்ரைலர் குறித்த தகவல்களை இங்கே தனுஷ் ரசிகர்களுக்காக பகிர்கிறோம்.

வேட்டு போட்டு என்ற பாடலோடுதான் இந்த ட்ரைலர் ஆரம்பமாகிறதாம்.

இதில் தாடி வைத்தவர் அண்ணனாக வருகிறார். அவருக்குதான் த்ரிஷா ஜோடி.

தனுஷின் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடிக்கிறார்.

தனுஷின் அரசியல் ஆசானாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார்.

அரசியல் என்றாலே பல பன்ச் வசனங்கள், அடிதடி, மாஸ் ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும்.

அது இதில் கொஞ்சம் கூட குறைவில்லாமல் இருக்கும்.

இதில் தனுஷ்க்கு நிறையவே பன்ச் டயலாக்குகள் உள்ளது.

எப்பவுமே அலர்ட்டா இருக்கிறவன்தான் அரசியல்வாதி.

சில பேரு பேசிட்டு ஜெயிப்பாங்க. நான் ஜெயிச்சிட்டுதான் பேசுறேன். என்ற அனல் தெறிக்கும் வசனங்களும் உள்ளது.

மேலும் தனுஷின் இளைய ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஆடல் பாடலும் உள்ளது.
தம்பி கேரக்டர் தனுஷ்க்கு ஜோடியாக அனுபமா வருகிறார். இதில் பிரேமம் படம் போல், கூந்தலை விரித்து போடாமல் தலைமுடியை பின்னியபடியே வந்தாலும் அழகாக இருக்கிறார்.

ட்ரைலர் முடியும்போது நம்ம கொடி பறக்குதா? என்ற பன்ச் டயலாக்கோடு தனுஷ் முடிக்கிறார்.

அஜித்துக்கு ஸ்டைலிஷ் லுக் கொடுத்த வெற்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீவா நடித்த தெனாவெட்டு படம்தான் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிச்சாமியின் முதல் படம்.

இதனை தொடர்ந்து தெலுங்கு படங்களில் பணி புரிந்த இவர், இயக்குனர் சிவாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஆகிவிட்டார்.

அஜித்தின் வீரம், வேதாளம் படத்தை தொடர்ந்து தல 57 படத்திலும் இவர்தான் ஒளிப்பதிவாளர்.

அண்மையில் தல 57 படத்தின் படமாக்கப்பட்ட காட்சிகளை பார்த்திருக்கிறார் எடிட்டர் ரூபன்.

அப்போது அஜித்துக்கு ஸ்டைலிஷ்ஷான லுக்குகளை கொடுத்த ஒளிப்பதிவாளர் வெற்றிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

பத்தே படம்தான்; அதற்குள் பவர் காட்டும் ‘ரெமோ’ ஹீரோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2012ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த மெரினா படம் ரிலீஸ் ஆனது.

தற்போது 4 ஆண்டுகளில் பத்து படங்களை நெருங்கியுள்ளார்.

இவரது 10வது படமான ரெமோ நாளை மறுநாள் அக். 7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ஆனால் அதற்குள் டாப் ஹீரோக்களின் இடத்தை நெருங்கி வருகிறார்.

பெரும்பாலும் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்குதான் அதிகாலை காட்சி திரையிடப்படும்.

இந்த வரிசையில் சிவகார்த்திகேயனும் இணைந்து விட்டார்.

சென்னையிலுள்ள பிரபலமான வெற்றி, ராகேஷ் உள்ளிட்ட திரையரங்குகளில் காலை 6 மணிக்கு ரெமோ படம் திரையிடப்படுகிறது.

இரண்டு மாதத்திற்கு முன்புதான் இந்த திரையரங்கில் ரஜினி நடித்த கபாலி படத்தின் அதிகாலை காட்சியை சிவகார்த்திகேயன் காத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரீனிலும் பட்டைய கிளப்பும் ‘பாகுபலி 2’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவையே தன் படைப்புகளால் பிரமிக்க வைத்தவர் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி.

இவரது இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படம் கடந்த ஆண்டு வெளியானது.

இப்படம் உலகளவில் ரூ. 600 கோடிக்கு வசூல் செய்து, உலக சினிமாவேயே திரும்பி பார்க்க வைத்தது.

தற்போது பாகுபலி இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

அடுத்த ஆண்டு 2017 ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

தற்போதை இதன் வியாபாரம் பட்டைய கிளப்ப தொடங்கிவிட்டது.

இதன் வட அமெரிக்க தியேட்டர் உரிமை மட்டும் ரூ.44 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம்.

வட அமெரிக்காவில் உள்ள கிரேட் இந்தியா பிலிம்ஸ் நிறுவனம் பாகுபலி 2 படத்தை 1000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows