SJ சூர்யா வின் #SJ சூர்யா15 படத்தின் படப்படிப்பு துவக்கம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் ‘மான்ஸ்டர்’ மாபெரும் வெற்றிப் படத்தில், குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் நாயகனாக நடித்திருந்தார் SJ சூர்யா.
இந்த நிலையில் ஆச்சர்யம்கூட்டும் கூட்டணியில் தன் அடுத்த படத்தினை இயக்குநர் ராதாமோகனுடன் துவங்கியுள்ளார்

இயக்குநர் ராதாமோகன் இயக்கும் இந்த புதிய படத்தினை ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் (Angel studios MH LLP) சார்பில் தயாரித்து, நடிக்கிறார் SJ சூர்யா. குடும்பங்கள் ரசிக்கும் பல தரமான வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த இயக்குனர் ராதா மோகன், முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக இந்தப் படத்தை இயக்கப் போகிறார். சமீபமாக மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் SJ சூர்யா, முதல் முறையாக இயக்குனர் ராதா மோகனுடன் இணைந்து இப்படத்திலும் ஒரு மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்கு இளைஞர்களின் ஆதர்ஷமான இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகின்றனர்.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், இன்று
நவம்பர் 9ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இது பற்றி SJ சூர்யா…

இன்று எனது அடுத்த பயணம் நண்பர், தொழிலதிபர் சுனில் ரா கேமரா ஆன் செய்ய இனிதே படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது. ராதாமோகன் இயக்கத்தில் , பிரியா பவானி சங்கர் இணைய , யுவன் சங்கர் ராஜா இசையில், ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங்கில் 2020 வரும் காதலர் தினத்தன்று உங்களை சந்திக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி ஒரே கட்டமாக முடித்து வரும் 2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது SJ சூர்யா ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ‘இரவாக்காலம்’ மற்றும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படங்கள் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளன எனபது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 21 புதுச்சேரியில் தேவாவின் பிரம்மாண்ட இசை கச்சேரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை, பாட்ஷா, கமல் நடித்த அவ்வை சண்முகி ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் தேவா.

மேலும் அஜித், விஜய் முதல் பிரபலமான நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

கானா பாடல்களை திரையில் கொண்டு வந்தற்கு இவரின் பங்கு முக்கியமானது.

இந்த நிலையில் இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி வருகின்ற டிசம்பர் மாதம் 21ஆம் தேதி பாண்டிச்சேரியில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், ஸ்ரீகாந்த் தேவா, இயக்குநர்கள் பேரரசு, சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களிடம் இசையமைப்பாளர் தேவா பேசியதாவது…

“வரும் டிசம்பர் 21 ஆம் தேதி பாண்டிச்சேரியில் லைவ் மியூசிக் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில் என்னுடைய பாட்டுக்கு இசை கருவிகளை இசைத்தவர்கள் இசையமைக்கவுள்ளனர்.

நான் வெளி நாடுகளில் இது போன்ற நிகழ்ச்சிகளை செய்துள்ளேன். இங்கு இது தான் முதல்முறை.. தலைமுறை மாற்றத்திற்கு ஏற்ப இசை சிறப்பாக உள்ளது.

ரஜினி அரசியல் குறித்து நான் சொல்ல எதுவுமில்லை. அது அவர் விருப்பம். என் பாடல்களை அனுமதி பெறுகிறார்களா என்று கேட்கிறார்கள். நான் பாடட்டும் என்று தான் சொல்கிறேன்.” என்றார்.

கேப்டன் விஜயகாந்த் படத்தலைப்பில் பிரபுதேவா நடிக்கும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழைய படத்தலைப்புகளை புதிய படத்திற்கு வைப்பது அண்மைக்காலமாக வாடிக்கையாகிவிட்டது.

அந்த வரிசையில் ‛ஊமை விழிகள்’ என்ற படமும் இணைந்துள்ளது.

32 ஆண்டுகளுக்கு முன்பு இதே பெயரில் வெளியான இப்படத்தை ஆர்.அரவிந்தராஜ் இயக்க ஆபாவாணன் தயாரிக்க விஜயகாந்த், கார்த்திக் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு பிறகு தான் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு சினிமாவில் பிரபலமானார்கள்.

தற்போது இதே பெயரில் உருவாகவுள்ள படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்க வி.எஸ் என்ற புதுமுகம் இயக்குகிறார்.

விஷ்ணு ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய காஸிப் இசையமைக்கிறார்.

ஏற்கெனவே பிரபுதேவா நடிப்பில் பொன்மாணிக்கவேல், யங் மங் சங் படங்கள் வெளியாக தயாராகவுள்ளது.

மேலும் சல்மான்கான், சுதீப், சோனாக்ஷி சின்கா நடிப்பில் ஹிந்தியில் தபாங் 3 என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா.

அடுத்த படத்தை தொடங்கிய சிரஞ்சீவி; மோகன்லால் & த்ரிஷா கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் இருந்து அரசியலுக்கு தாவிய சிரஞ்சீவி, பல கட்ட பிரச்சினைகளுக்கு பிறகு (10 வருடங்களுக்கு) மீண்டும் சினிமாவுக்கே திரும்பிவிட்டார்.

2017ல் கத்தி பட ரீமேக்கான ‘கைதி நம்பர் 150’ படத்தில் நடித்தார். இந்தாண்டில் ‘சைரா’ படத்தில் நடித்தார். இந்த படமும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் தன் அடுத்த படத்தை உடனே தொடங்கியுள்ளார்.

கொரட்டலா சிவா இயக்கவுள்ள இந்த படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றது.

இதில் நாயகியாக த்ரிஷா நடிப்பார் என கூறப்படுகிறது. ஏற்கெனவே முருகதாஸ் இயக்கிய ஸ்டாலின் படத்தில் இந்த ஜோடி நடித்திருந்தனர்.

இவர்களுடன் மோகன்லால் மற்றும் நதியா மற்றொரு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

விரைவில் இப்பட சூட்டிங் தொடங்கவுள்ளது.

ஜிப்ஸியை முடித்துவிட்டு ‘யானை டாக்டரரை இயக்கும் ராஜுமுருகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசிய விருதை பெற்ற ஜோக்கர் படத்தை இயக்கியவர் ராஜுமுருகன். இந்த படத்தை ‘ட்ரீம் வாரியர்ஸ்’ நிறுவனம் தயாரித்து இருந்தது.

இந்த நிலையில் இதே கூட்டணி மீண்டும் இணைகிறது.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ள, ‘யானை டாக்டர்’ சிறுகதையை, படமாக்க இருக்கிறார்களாம்.

கால்நடை மருத்துவரான, வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி, தன் வாழ்நாள் முழுக்க, யானைகள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வந்தார். அவர் தற்போது உயிருடன் இல்லை. கடந்த 2002ம் ஆண்டு மறைந்தார்.

இவரின் வாழ்க்கையைத்தான் படமாக்கவுள்ளனர்.

தற்போது ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி என்ற படத்தை இயக்கியுள்ளார் ராஜுமுருகன். அந்த படம் வெளியானவுடன் யானை டாக்டரை இயக்குவார் எனத் தெரிகிறது.

ஜெயலலிதாவின் படத்தில் எம்ஜிஆர் & கருணாநிதி யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பல இயக்குனர்கள் படமாக எடுத்து வருகின்றனர்.

தலைவா பட இயக்குனர் விஜய் ‘தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்கி வருகிறார்.

இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடிக்க உள்ளார். அவர் இதற்கான கடும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராமிடம் நடன பயின்று வருகிறார்.

எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமி நடிக்கவுள்ளாராம்.

கருணாநிதி கேரக்டரில் நடிக்க பிரகாஷ்ராஜிடம் பேசி வருகிறார்களாம். அவரின் பதிலுக்காக படக்குழு காத்திருக்கிறது.

ஏற்கெனவே மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் மோகன்லால் மற்றும் கருணாநிதி கேரக்டரில் பிரகாஷ் ராஜ் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows