செல்வராகவன்-சூர்யா இணைந்துள்ள பட ரிலீஸ் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கவுதம் மேனன் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கியுள்ள படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’.

எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் சார்பாக மதன் இப்படத்தை வெளியிட உள்ளார்.

சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் கிடைக்கவே, பின்னர் மீண்டும் சென்சார் செய்யப்பட்டு ‘யு/ஏ’ சர்ட்டிபிகேட் வழங்கப்பட்டது.

அதன்பின்னர் வெளியீட்டுக்கு தயாரானாலும் ரிலீஸ் தேதியில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டது.

தற்போது நவம்பர் 3-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது சந்தானம் நடிக்கும் ‘மன்னவன் வந்தானடி’ படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். இதனை தொடர்ந்து சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார்.

Selvaraghavan directorial Nenjam Marappathillai release date

எல்லா ஜாதியினரும் அர்ச்சகர்; பெரியார் கனவை நிறைவேற்றிய முதல்வருக்கு கமல் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரளா திருவிதாங்கூர் தேவசம் போர்டு, 63 அர்ச்சகர்களைப் புதிதாக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இதில், 36 பேர் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அர்ச்சகர்கள் தேர்வில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டுள்ளதாகவும் தகுதி, திறமை அடிப்படையில் தேர்வு நடைபெற்றதாகவும் கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்திருந்தார்.

அதுபோல் சபரிமலை கோயிலில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் பூசாரிகளாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

நாட்டில் முதன்முறையாக, பிராமணர் அல்லாதோர் திருவிதாங்கூர் தேவசம் போர்டால் அர்ச்சகராக நியமிக்கப்பட்ட சம்பவத்துக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த முறை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த பட வேண்டும் என வைகோ, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பான செய்தியை வெளியிட்டு கேரள முதல்வருக்கு தன் நன்றியினை தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

இதன்மூலம் பெரியாரின் கனவு நிறைவேறியதாகவும் அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Kamal Haasan hails non Brahmin priests appointment in Kerala

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்சகர்கள் நியமனம். நன்றி கேரள முதல்வருக்கும் தேவஸ்தானத்துக்கும். வைக்கம் வீரர்க்கு வணக்கம்.

Bravo Travancore Dewasom board.Salute to Kerala CM Mr. Pinarayi Vijayan.4 appointing 36 non-Brahmin priests. Periar’s dream realized

மாரி 2 இசையமைப்பாளர் தகவல்; அனிருத் ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடிக்கவுள்ள படம் மாரி2.

இப்படத்தில் சாய்பல்லவி, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படத்தின் நாயகி, செகண்ட் ஹீரோ மற்றும் வில்லன் குறித்த அறிவிப்பு வெளியானாலும் படத்தின் இசையைமப்பாளர் யார்? என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

ஆனால் இதில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அனிருத் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷின் ‘யாரடி நீ மோகினி’ படத்துக்கு இசையமைத்திருந்த யுவன், ஒன்பது வருடங்களுக்குப் பிறகு இணைகிறார்.

இதுகுறித்த அதிகாரபூர்வமாக செய்தி தீபாவளி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Yuvan shankar raja may compose music for Maari 2

எந்த ஹாலிவுட் படத்திற்கும் 2.ஓ குறைவானது அல்ல.. ரஜினி உற்சாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 2.0.

லைகா நிறுவனம் இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதன் மேக்கிங் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படம் குறித்து ரஜினிகாந்த் இதன் மேக்கிங்கில் கூறியுள்ளதாவது…

டைரக்டர் ஷங்கர் என்னை வசீகரித்துவிட்டார்.

3டி ஷாட்டுகளை கண்டு வியக்கிறேன். எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை.

எந்தவொரு பெரிய ஹாலிவுட் படத்திற்கும் 2.0 படம் குறைவானது அல்ல.

ரசிகர்களை ரியாக்சனை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.

Rajini praises Shankar direction of 2point0

கார்த்திக்கும் அவரது மகனும் நடிக்கும் படத்தில் இணைந்தார் வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அப்பா கார்த்திக், அவரது மகன் கௌதம் கார்த்திக் ஆகியோர் முதன்முறையாக ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர் என்பதை பார்த்தோம்.

இப்படத்தை திரு என்பவர் இயக்க, கார்த்தியும் கௌதமும் அப்பா & மகனாகவே நடிக்கிறார்களாம்.

கௌதமுக்கு ஜோடியாக நடிக்க ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

தற்போது இன்னொரு ஹீரோயினியாக சரத்குமார் மகள் வரலட்சுமி நடிக்கிறாராம்.

Varalakshmi teams up with Karthik and his son Gautam

விஷால் அறிவிப்பால் லாபம் அடைந்த கருப்பன்; விஜய்சேதுபதி ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரேனிகுண்டா படத்தை தொடர்ந்து பன்னீர் செல்வம் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் கருப்பன்.

இதில் விஜய்சேதுபதி, தன்யா, பாபி சிம்ஹா, பசுபதி, சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் நடிக்க, இமான் இசையமைத்திருந்தார்.

கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி இப்படம் வெளியானது.

இந்நிலையில் தமிழக அரசின் கேளிக்கை வரியை எதிர்த்து புதிய படங்கள் அக்டோபர் 6 முதல் ரிலீஸ் ஆகாது என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்தார்.

எனவே 8 படங்கள் ரிலீஸ்க்கு தயாராக இருந்தும் வெளியாகவில்லை.

எனவே முன்பு ஓடிக்கொண்டிருந்த படங்களையே தியேட்டர்களில் திரையிட்டு வருகின்றனர்.

இதனால் புதிய படங்களுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த தியேட்டர்களிலும் ‘கருப்பன்’ படத்தை திரையிட்டு வருகின்றனர்.

இதனால் கருப்பனுக்கு கூடுதலாக 100 தியேட்டர்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே விஜய்சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருகிறார்களாம்.

Since new movies not released Karuppan screens increased

More Articles
Follows