ரம்ஜான் மோதலில் சிம்பு-ஜெயம் ரவி-எஸ்.ஜே.சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரம்ஜான் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு ஜூன் 23ஆம் தேதி பல படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘வனமகன்’ வெளியாகவுள்ளது.

இதே நாளில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படமும் வெளியாகிறது.

இந்நிலையில் பல மாதங்களாக காத்திருந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படமும் அதே நாளில் வெளியாகிறதாம்.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா கெஸன்ட்ரா ஆகியோர் இப்படத்தில் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தை ஒன்றாக என்டர்டெயின்மென்ட் மற்றும் க்ளோ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க படத்தின் வெளியீட்டு உரிமையை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Simbu Jayam Ravi SJ Suriya movies clash in Ramzan

ஹாலிவுட் படத்தில் தனுஷின் கேரக்டரும் ஸ்டோரியும்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில நாட்களாக ‘தி எக்ஸ்டாடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ என்ற ஹாலிவுட் படத்தின் சூட்டிங்கில் கலந்து கொண்ட நடித்து வருகிறார் தனுஷ்.

இதில் தனுஷுடன் பெரனீஸ் பெஜோ, எரின் மொரயார்டி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்காக தனுஷ் 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.

கனடா நாட்டை சேர்ந்த கென் ஸ்காட் இயக்கும் இப்படமானது ‘The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard’ என்ற ஃப்ரெஞ்சு நாவலை தழுவி எடுக்கப்பட்டு வருவதால் இப்படத்தின் விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:

அஜா (தனுஷ்) இந்தியாவில் இருக்கும் ஏழைமையான குடும்பத்தை சேர்ந்த இளைஞன்! அதே நேரம் திறமையான மாயாஜால வித்தைக்காரன்.

ஒரு சூழ்நிலையில் ஒரு மேஜிக்குக்காக பாரிஸ் நாட்டுக்கு செல்கிறார். அங்கு ஒரு பிரச்சினை ஏற்பட் ஒரு ஃபர்னிச்சர் கடையில் மாட்டிக் கொள்கிறார்.

அங்குள்ள மேரி என்ற பெண் மீது காதல் கொள்கிறார்.

ஒரு முறை பீரோவுக்குள் தனுஷ் ஒளிந்துக் கொள்ள, அந்த பீரோ விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு ஐரோப்பாவையே சுற்றி வருகிறது.

அப்போது நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களே இப்படத்தின் கதை என தெரிவித்துள்ளனர்.

Dhanush character revealed from his movie The Extraordinary Journey Of The Fakir

காலா படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அவரது 164 படத்திற்கு ‘காலா’ என பெயரிட்டுள்ளனர்.

ரஞ்சித் இயக்கவுள்ள இப்படத்தை தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, முரளி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கை கவனிக்கிறார்.

சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்க, ரஜினிக்கு நாயகியாக ஹுமா குரோஷி நடிக்கிறார் என்பதை நாம் பார்த்தோம்.

இந்நிலையில், மற்றொரு நாயகியாக அஞ்சலி பட்டீல் நடிக்கிறாராம்.

நாடக மேடையில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராட்டி, சிங்களம் உள்ளிட் பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

மும்பை தாராவி பகுதியில் வசிக்கும் தமிழ் பெண்ணாக நடிக்கிறாராம் அஞ்சலி.

காலா படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Anjali Patil teams up with Rajini in Kaala movie

ரஜினி தனிக்கட்சி தொடங்குகிறாரா? அண்ணன் சத்யநாராயண ராவ் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் அரசியல் பிரவேச பேச்சு, தமிழக அரசியலில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பல்வேறு ஆதரவு குரல்களும் எதிர்ப்பு குரல்களும் கிளம்பியுள்ளன.

மேலும் பிஜேபி தலைவர் அமித்ஷா முதலில் அவரது கட்சியில் இணைய அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவது அவரது விருப்பம். கட்சியில் இணைய அழைப்பு விடுக்கவில்லை என தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தாக தகவல் வெளியானது.

அதில் அவர், “ரஜினியின் ரசிகர்களும் நலம் விரும்பிகளும் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என விரும்புகின்றனர்.

பெரும்பான்மையான தமிழக மக்களின் விருப்பமும் அதுவே.

அவரும் அதற்கான முயற்சியில் இறங்கி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது தனிக் கட்சியின் கொடி, சின்னம் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும்.
ஒரு ஊழலற்ற நேர்மையான ஆட்சியை கொடுப்பார்.

தமிழக அரசியல் புதிய அத்தியாயத்தை நோக்கி செல்லும்.” என்று அவர் கூறியதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இதுகுறித்து சத்யநாராயண ராவ் கூறியதாவது…

“ரஜினி தனிக்கட்சி தொடங்குகிறார் என்று நான் கூறவில்லை. யாரோ தவறான செய்தியை வெளியிட்டு வருகின்றனர்.

ரசிகர்களுடன், 2-ம், 3-ம் கட்ட சந்திப்புகள் முடிந்த பிறகே இறுதி முடிவு எடுப்பார் ரஜினி.

மேலும், அடுத்தடுத்து சினிமா சூட்டிங் இருப்பதால், உடனடியாக கட்சி குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Rajinikanth Brother Sathyanarayana Rao Gaikwad talks about Rajinis New Political Party

‘புதுமுக இயக்குநர் என்றால் நெஞ்சில் குத்துகிறார்கள்..’ – ‘முன்னோடி’ டைரக்டர் குமார் குமுறல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்வஸ்திக் சினிவிஷன் பி.லிட் மற்றும் சோஹன் அகர்வால்.எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர் வழங்கும் படம் “முன்னோடி”.

இப்படத்தை அறிமுக இயக்குநர் S.P.T.A. குமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

விழாவில் படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி. மதன் பேசும் போது,

“பொதுவான நண்பர் ஒருவர் இந்தப் படம் பற்றிப் பேசினார்.

அப்போது எனக்கு ஆர்வமே இல்லை. ஏற்கெனவே மூன்று படங்கள் போய்க் கொண்டு இருக்கிறது வேண்டாம் என்றேன்.

வேற யாரிடமாவது பேசிப் பாருங்கள் விட்டு விடுங்கள் என்றேன்.

பாடல்கள், ட்ரெய்லரையாவது பாருங்கள் என்றார்கள்.வேண்டா வெறுப்பாக விருப்பம் இல்லாமல்தான் பார்த்தேன். முதலில் ‘அக்கம் பக்கம் ‘பாடல் பார்த்தேன். பிடித்திருந்தது. யாரிடம் வேலை பார்த்தீர்கள்? என்றேன்.
இல்லை என்றார்.

அவரிடம் பேசியபோது பொதுவான விஷயங்கள் பேசினோம். தன் குடும்பம் சம்பாதித்த பணத்தில் எடுத்ததாகக் கூறினார். எனக்கு நம்பிக்கை வந்தது.

அவரது சினிமா ஆர்வம் சாதாரணமானது இல்லை. ‘முன்னோடி ‘ படம் தவிர வேறு இரண்டு கதைகளும் தயாராக வைத்து இருக்கிறார்.

சுதந்திரப் போராட்ட பின்னணியில் ஒரு திரைக்கதை வைத்து இருக்கிறார். பிரமாதமாக இருக்கும். எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்த முன்னோடி படம் வியக்க வைத்தது. சற்றும் யோசிக்காமல் வாங்கி விட்டோம். வெளியிடுகிறோம்.

இப்படம் நன்றாகவே வந்திருக்கிறது. ” இவ்வாறு மதன் பேசினார்.

‘முன்னோடி ‘ படத்தின் இயக்குநர் குமார், பேசும் போது தன் மனக்குமுறலை வெளியிட்டார்.

அவர் பேசும் போது, ” நான் சினிமா பற்றிய எந்தவித பின்னணியும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்திருக்கிறேன்.

என் அப்பா சினிமாவே பார்த்ததில்லை. எனக்கும் சினிமா பார்க்க அனுமதியில்லை. சினிமா இயக்கம் பற்றித் தெரியாது. ஆனால் இயக்க வேண்டும் என்று ஆசை மட்டும் இருந்தது.

18 வயதில் பிலிம் இன்ஸ்டிட்டியூட்டில் சேர ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை. ஆனால் அடுத்த் 18 வருஷம் கழித்து தான் சினிமாவுக்கு அனுமதி கிடைத்தது.

அதற்குள் மனைவி குழந்தைகள் என்று குடும்பம் மாறியிருந்தது. இருந்தாலும் நான் விட வில்லை. ஒரு படம் இயக்க 18 வருஷம் காத்திருந்தேன்.

அப்போது என்னை சினிமாவில் விடவில்லை இப்போது நானே சம்பாதித்து என் காசில் எடுத்து இருக்கிறேன். இப்போதும் கூட குடும்பத்தினர் கவலைப்படுகிறார்கள்.

இந்தப் படத்துக்காக இரண்டு வருஷம் கஷ்டப்பட்டேன். என் கஷ்ட நஷ்டங்களை குடும்பத்தினர் பொறுத்துக் கொண்டார்கள்.

அவர்களின் கவலை நான் சினிமாவுக்கு வந்து சிரமப் படக்கூடாதே என்பது தான். 18 வருஷம் சுமந்து கருவாகி உருவாகி வளர்ந்த குழந்தையை இரண்டு வருஷம் நெஞ்சில் சுமந்த அந்தக் குழந்தையை ஆடல், பாடல், விளையாட்டு எல்லாம் தெரிந்த அந்தக் குழந்தையை சுதந்திரமாக விளையாட திறமை காட்ட அனுமதிக்கிறார்களா ? இல்லை.

இவ்வளவு கஷ்டப்பட்டு ரத்தமும் சதையுமாக வளர்த்து இருக்கிறோம். ஆனால் யாரும் பார்க்கத் தயாரில்லை.

தியேட்டரில் போட்டால் பத்து பேர் வருவானா ? என்கிறார்கள். ஒவ்வொருவரும் இப்படி நெஞ்சில் குத்துகிறார்கள்.

நல்லா இருந்தாலும் பார்க்க எவனும் வர மாட்டான் என்கிறார்கள்.
புதுமுகங்களை வைத்துப் படமெடுத்தால் கடலில் குதித்து சாக வேண்டுமா?

நல்ல வேளை படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் சார் பார்த்தார். எதுவுமே நினைக்கவில்லை. நிஜமான அன்போடு அணுகினார்.ஆதரவு கொடுத்து இருக்கிறார். படத்தை வெளியிடுகிறார். அவருக்கு நான் காலமெல்லாம் கடமைப் பட்டிருக்கிறேன்.

இதில் நிறைய பேர் நடித்து இருக்கிறார்கள் இருந்தாலும் இது ஒரு டெக்னீசியன் படம் என்றுதான் சொல்வேன்.

என் அடுத்தடுத்த படங்களில் நடிகர்கள் எல்லாம் மாறலாம். ஆனால் தொழில் நுட்பக் கலைஞர்களை மாற்ற மாட்டேன். அவ்வளவு உழைத்திருக்கிறார்கள். ” இவ்வாறு இயக்குநர் குமார் பேசினார்.

இந்நிகழ்வில் ‘முன்னோடி ‘ படத்தில் நடித்த நடிகர்கள் அர்ஜுனா, வினு கிருத்திக், நிரஞ்சன், சுமன், சுரேஷ், பாண்டியன், நாயகி யாமினி பாஸ்கர், நடன இயக்குநர் சந்தோஷ், படத் தொகுப்பாளர் என்.சுதா, இசை யமைப்பாளர் கே.பிரபு சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

முன்னதாக மக்கள் தொடர்பாளர் ஏ. ஜான் அனைவரையும் வரவேற்றார்.

Distributors and Theater Owners rejects debut directors says Munnodi director SPTA Kumar

தனது வேட்பாளர்களை அறிவித்தார் வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை 28 படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் வெங்கட்பிரபு.

ஆனால் இம்முறை படத்தை தயாரிக்கவிருக்கிறார்.

இவரது ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ மற்றும் பத்ரி கஸ்தூரி ஆகியோர்கள் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கின்றனர்.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிடும்போது, நாளை முதல் வேட்பாளர் அறிமுகம் என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார் வெங்கட்பிரபு.

தற்போது ஒரு சில வேட்பாளர்களை அதாவது கலைஞர்களை அறிமுகம் செய்துள்ளார்.

சரவணன் ராஜன் என்பவர் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் ‘இதுதாண்டா போலீஸ்’ புகழ் டாக்டர் ராஜசேகர் நடிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

மேலும் மற்ற வேட்பாளர்களை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More Articles
Follows