இந்திய சுதந்திர போராட்ட வீரர் பெயரை தன் மகனுக்கு சூட்டிய சிபிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யராஜின் மகன் சிபிராஜ் நடித்து அண்மையில் வெளியான படம் ‘வால்டர்’.

போலீஸ் அதிகாரியாக சிபிராஜ் நடித்திருந்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதற்குள் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் தியேட்டர்களும் மூடப்பட்டன.

தற்போது பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ‘கபடதாரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சிபிராஜ்.

தயாரிப்பாளர் தனஞ்செயன், ஜான் மகேந்திரன் ஆகியோர் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் சிபிராஜ் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீர மரணம் அடைந்து தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போராளி! இவர் பெயரை என் மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ஈ.டி. பட ஒளிப்பதிவாளர் ஆலன் டாவ்யூ கொரோனாவில் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எத்தனையோ ஹாலிவுட் படங்களை பார்த்திருப்போம். ஒரு சில படங்களில் ஏதாவது ஒரு வைரஸ் திடீரென பரவி மக்களை கொன்று குவிக்கும்.

தற்போது கொரோனா வைரஸ் நாம் பார்த்த சினிமாக்களை கண்முன் கொண்டு வந்துள்ளது எனலாம்.

இந்த வைரஸை கட்டுள்குள் கொண்டு வர இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் போராடி வருகின்றனர்.

இந்த தொற்று நோய்க்கு ஹாலிவுட் கலைஞர்கள் பலியாகி வருகிறார்கள்.

இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஆலன் டாவ்யூ (வயது 77) கொரோனா தொற்றால் மரணம் அடைந்துள்ளார்.

இவர் ஸ்டீவன் ஸ்பில்பெர்க் இயக்கிய ஈ.டி, தி கலர் பர்பிள், எம்பயர் ஆப் தி சன், தி எக்ஸ்ட்ரா டெரஸ்ரியல் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆலன் டாவ்யூ 5 முறை உலக புகழ் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

கொரானா லாக்டவுனில் பிரபலங்களுடன் உரையாடும் இயக்குனர் கேபிள் சங்கர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரானா பரவலை தடுக்க, அனைவரையும் வீட்டிலேயே இருக்க வலியுறுத்திய அரசின் உத்தரவை மதித்து பிரபலங்கள் முதல் சாமானியர் வரை வீட்டில் இருக்க, எழுத்தாளரும் இயக்குனருமான கேபிள் சங்கர் தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை இன்ஸ்டாகிராமில் ( Insta Id: cablesankar ) உள்ள இன்ஸ்டா லைவ் மூலமாய் பிரபலங்களுடன் உரையாடி வருகிறார்.

நடிகை வினோதினி வைத்தியநாதன், லவ் குரு ராஜவேல், தயாரிப்பாளர் தனஞ்செயன், ஓ மை கடவுளே இயக்குனர் அஸ்வத், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, பாரம் இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், நடிகர் மனோபாலா, இயக்குனர் சீனு ராமசாமி என பல பேரிடம் உரையாடி வருகிறார்.

இந்த இன்ஸ்டா லைவிற்கு இணைய தள பார்வையாளர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

லைவ் நிகழ்ச்சியை அவரது யூ ட்யூப் சேனலிலும் வெளியிட்டு வருவதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள்.

லாக்டவுன் நேரத்தில் பிரபலங்களுடனான இந்த உரையாடல் மிகவும் உபயோகமானதாகவும், பொழுது போக்கவும் பயன் படுகிறது என்கிறார்கள் பார்வையாளர்கள்.

அனைவரும் என் நண்பர்கள். இந்த லாக்டவுன் நேரத்தில் அவர்களுடன் உரையாடுவது மனதிற்கு இனிமையாய் இருக்கிறது என்கிறார் இயக்குனர் கேபிள் சங்கர்…
Attachments area

சூப்பர் ஸ்டார் மகள் கால்ஷீட் கேட்டும் நடிக்க மறுத்த மணிரத்னம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட எந்த சமூக வலைத்தளத்திலும் டைரக்டர் மணிரத்னம் அக்கௌண்ட் வைத்துக் கொள்ளவில்லை.

ஆனால் தன் மனைவி நடிகை சுகாசினி அக்கௌண்டில் அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த உரையாடலில் ரசிகர் ஒருவர், ‘நீங்கள் ஏன் படத்தில் நடிக்கல. யாராவது நடிக்க அழைத்தார்களா? என கேட்டுள்ளார்.

அதற்கு மணிரத்னம், ‘ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தான் இயக்கும் படத்திதில் நடிக்க அழைத்தார், ஆனால் நான் மறுத்துவிட்டேன்’

ஒருவேளை நான் சுமாராக நடித்தால் அதன்பின் என் இயக்கத்தில் நடிக்கும் நடிகர்களிடம் வேலை வாங்கும்போது, ‘நீ நடிச்சதை தான் நான் பார்த்தேனே’ என்று சொல்லிவிடுவார்கள்’ என்ற பயம் என நகைக்சுவையாக சொல்லியிருக்கிறார் மணிரத்னம்.

ரஜினி விஜய் விக்ரம் பட நடிகை கணவருக்கு கொரோனா தொற்று

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியுடன் ’சிவாஜி’ விஜய்யுடன் ’அழகிய தமிழ்மகன்’, விக்ரமுடன்’கந்தசாமி’ உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா.

இவர் சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இருவரும் ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா நகரத்தில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஸ்ரேயா கணவர் ஆண்ட்ருவுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்துள்ளதாம்.

எனவே கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர்.

வீட்டிலிருந்தே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்றுவர மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதனை அடுத்து இருவரும் வீட்டிலிருந்தே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்களாம்.

தற்போது ஸ்ரேயாவின் கணவரின் உடல் தேறி வருவதாக சொல்லப்படுகிறது.

கனடாவில் சிக்கிய விஜய் மகன் சஞ்சய் குறித்து விசாரித்தாரா அஜித்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளைய தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் இருக்கிறார்.

அவர் பிலிம் மேக்கிங் படிக்க கனடா நாட்டுக்கு சென்று அங்கேயே தங்கி படித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அவரால் இந்தியா வரமுடியவில்லை.

கனடாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் தன் மகனை நினைத்து வருத்தத்தில் இருக்கிறாராம் விஜய்.

மகனிடம் தினமும் போனில் பேசி நலம் விசாரித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் அஜித், உடனே விஜய்யிடம் செல்போனில் தொடர்பு கொண்டு அவரின் மகன் சஞ்சய் குறித்து விசாரித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

நடிகர் விஜய்யும், அஜித்தும் இதுபோல் அடிக்கடி செல்போனில் பேசுவது வழக்கமான ஒன்றுதான் எனவும் கூறப்படுகிறது.

More Articles
Follows