ஆந்திராவிலும் மணக்கப் போகும் சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கியிருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் சந்தானத்துடன் வைபவி ஷண்டிலியா, நடிகர் நாகேஷின் பேரனான நாகேஷ் பிஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக பி கே வர்மா, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணியாற்றி இருக்கின்றனர்.

இப்படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.

இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு பெருமளவு உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சர்வர் சுந்தரம் தெலுங்கு உரிமத்தை ”லிங்க பைரவி கிரேஷன்ஸ் ” பெற்றுள்ளது.

” எல்லா மொழி மக்களும் ரசித்து மகிழும் படியான படம் சர்வர் சுந்தரம். அதன் கதை அப்படி.

அத்தியாவசிய விஷயமான உணவையும் சமையலையும் பற்றிய கதை என்பதால் இது அனைவராலும் கொண்டாடப்படும்.

மிக பெரிய அளவில் ரிலீஸ் செய்யப்பட போகும் இப்படம் சந்தானம் அவர்களின் ஹீரோ அந்தஸ்தை வர்த்தக ரீதியாக மேலும் உயர்த்தும் என உறுதியாக நம்புகிறேன் ” என கூறினார் இப்படத்தை தயாரித்த ‘கெனன்யா பிலிம்ஸ் ‘ ஜே செல்வகுமார்.

Server Sundaram movie Telugu and Hindi rights procured by Linga bhairavi creations

‘ரஜினியை விமர்சிப்போம்; மன்னிப்பு கேட்டு ஆசி பெறுவோம்’ இது கஸ்தூரி கலாட்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில நாட்களுக்கு முன்பு தன் ரசிகர்களை சந்தித்தபோது, ரஜினி தன் அரசியல் பிரவேசம் பற்றி பேசியிருந்தார்.

போர் வரும்போது சந்திப்போம் தயாராக இருங்கள். ஆண்டவன் முடிவு செய்தால் அரசியலுக்கு வருவேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

ரஜினியின் இந்த பேச்சை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார் நடிகை கஸ்தூரி.

எத்தனை வருடமாக இதையே சொல்லி கொண்டு இருப்பார். ஒரு அதிரடியான முடிவை எடுக்க தெரியாதவர் ரஜினி என விமர்சித்திருந்தார்.

இதனால் ரஜினி ரசிகர்களின் கடுமையான கண்டனத்திற்கு ஆளானார் கஸ்தூரி.

இந்நிலையில் தன் பிறந்தநாளை முன்னிட்டு (ஜீன் 15ஆம்) ரஜினியை அவர் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார் நடிகை கஸ்தூரி.

இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் கூறியுள்ளதாவது…

“சிறந்த பிறந்த நாள் ஆச்சரியம். ரஜினியுடன் நேருக்கு நேராக சந்திக்கும் வாய்ப்பு. உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

ரஜினியின் அரசியல் பார்வை, திட்டங்கள் குறித்து விவாதிக்கும் வாய்ப்பு பெற்றேன். எல்லாம் நல்லபடியாக அமையும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும்… ரஜினி ரசிகர்கள் தன் கருத்தை தவறாக புரிந்து கொண்டதாகவும் அதற்காக கஸ்தூரி மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது.

அரசியல் உலகில் ரஜினியின் வருகை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே அவரது கருத்தை தமிழகமே விவாதித்து கொண்டிருக்கிறது என தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் கஸ்தூரி.

மேலும் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதில் கஸ்தூரி இணைவார் எனவும் கோலிவுட்டில் சொல்லப்படுகிறது.

Actress Kasthuri met Rajinikanth on her birthday and discussed about Current Politics

 

லட்சுமி மிட்டல்-டிஆர்பாலு ஆகியோருடன் கஸ்தூரிக்கு இப்படியொரு தொடர்பா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியை தவிர கமல், பிரபு, உள்ளிட்ட எல்லா டாப் ஹீரோக்களுடன் நடித்தவர் கஸ்தூரி.

அண்மைகாலமாக இவர் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிரடியான அரசியல் கருத்துக்களை பேசி வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஜீன் 15ஆம் தேதி இவர் தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

அப்போது இவரே எனக்கும் தொழிலதிபர் லட்சுமி மிட்டலுக்கும் என்ன தொடர்பு என்று ஒரு ட்வீட்டும், TR பாலுவிற்கும் கஸ்தூரிக்கும் என்ன? தொடர்பு என மற்றொரு ட்வீட்டையும் பதிவு செய்தார்.

இறுதியாக எங்கள் மூவருக்கும் இன்றுதான் பிறந்தநாள் என பதிவிட்டு கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Actress Kasthuri connection with Lakshmi Mittal and TR Balu

நடிகை கஸ்தூரிக்கும் பெரும்பணக்காரர் தொழிலதிபர் லட்சுமி மிட்டலுக்கும் என்ன தொடர்பு? #கிசுகிசு
— kasturi shankar (@KasthuriShankar)

அதே தொடர்பு திரு TR பாலுவிற்கும் கஸ்தூரிக்கு உண்டு. #கிசுகிசு2 கண்டுபிடிங்க . #openchallenge https://t.co/75sOzUg68R
— kasturi shankar (@KasthuriShankar)

அட, இந்த வம்பு #கிசுகிசு வைரலாகிடுச்சே! TR பாலு அவர்களுக்கும் லட்சுமி மிட்டலுக்கும் எனக்கும் இன்று பிறந்தநாள். #அம்புட்டுதேன். @TRBRajaa
— kasturi shankar (@KasthuriShankar)

கமல்-சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்தார் சத்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் நாதம்பாள் நிறுவனம் சார்பாக சத்யராஜ் தயாரித்து அவரது மகன் சிபிராஜ் நடித்துள்ள படம் சத்யா.

இதே பெயரில் உருவான படத்தை கமல், அமலா நடிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படம் 1988ல் வெளியானது.

இப்போது உருவாகும் சத்யா படத்தை சைத்தான் பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ரம்யா நம்பீசன், வரலட்சுமி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

எனவே இப்படத்தின் தலைப்பை கொடுத்த நடிகர் கமல்ஹாசனுக்கும், டிரைலரை வெளியிட்ட சிவகார்த்திகேயனுக்கும் சத்யராஜ் நன்றி தெரிவித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

Sathyaraj says thanks to Kamalhassan and Sivakarthikeyan

தனிவழி ஸ்டைலில் தனிக்கட்சி; ரஜினிக்கு திருமாவளவன் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போர் வரும்போது களத்தில் சந்திப்போம் என ரசிகர்கள் மத்தியில் தன் அரசியல் பிரவேசத்தை சூசகமாக தெரிவித்தார் ரஜினி.

இதனையடுத்து அவரது கருத்து தமிழகத்தின் விவாத பொருளாக மாறிவிட்டது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ரஜினி குறித்து பேசியதாவது…

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் புதிதாக கூட்டணி அமையும்.

என் வழி தனி வழி என்று அவர் சொன்னது போல தனிக்கட்சி தொடங்க வேண்டும்.

அவர் தனிக்கட்சி தொடங்கினால் அது பாஜகவுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

காங்கிரஸ் அல்லது பாஜக கட்சிகளில் ரஜினி இணைந்தால் அவருக்கு எதிர்பார்க்கும் பலன் இருக்காது.” என்றார்.

விஜய் பிறந்தநாளில் அரசியல் குறித்த அறிவிப்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் தன் பயணத்தை தொடங்கிய போது, காதல் ரூட்டில் பயணித்தார் விஜய்.

ஆனால் சமீபகாலமாக சமூகம் சார்ந்த விஷயங்களை தன் படங்களில் கொண்டு வருகிறார்.

கத்தி படத்தில் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினை, பைரவா படத்தில் கல்வி ஊழல் பிரச்சினை என கலக்கி வருகிறார்.

இதனால் அரசியலில் இறங்க விஜய் ஆழம் பார்க்கிறாரோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

மேலும், அண்மையில் விஜய் பேசிய… விவசாயிகளை காக்க நல்லரசு உருவாக வேண்டும் என்று அவர் கூறிய கருத்து அரசியல் உலகில் அதிகம் கவனிக்கப்படுகிறது.

இந்நிலையில், விரைவில் தேர்தல் அரசியலில் கால் பதிப்பதற்கான பணிகளை விஜய், தனது மக்கள் இயக்கத்தின் மூலம் தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

அதன்படி, சமீபத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தியதாகவும், மன்ற உட்கட்டமைப்பை பலப்படுத்துவதற்கான பணிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால், விஜய்யின் 43 பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி அரசியல் குறித்த அறிவிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

நெருப்பில்லாமல் புகையாது என்பது இதுதானோ…??

More Articles
Follows