கடைசி நேரத்தில் ட்விஸ்ட் .. சந்தானம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தானம் நடிப்பில் “டகால்டி” மற்றும் “சர்வர் சுந்தரம்” ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் ஜனவரி 31 வெளியாகவதாக அறிவிக்கப்பட்டது. ஒரே நடிகரின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கும் என திரையரங்கு வட்டாரம் தெரிவித்ததையொட்டி இரு தயாரிப்பாளர்கள் இடையேயும் தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இதனையடுத்து “டகால்டி” மற்றும் “சர்வர் சுந்தரம்” ஆகிய இரு படங்களின் தயாரிப்பாளர்களும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இச்சந்திப்பில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் பாரதி ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பெப்சி சிவா, தயாரிப்பாளர் ராஜன் “சர்வர் சுந்தரம்” படத்தயாரிப்பாளர் செல்வகுமார் மற்றும் “டகால்டி” படத்தயாரிப்பாளர் சௌத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியது…

வரும் 31 ந்தேதி சர்வர் சுந்தரம், டகால்டி படங்கள் வருவதாக விளம்பரங்கள் வெளிவந்தன. இரு படங்களும் ஒரே நாளில் வருவதால் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிவுரையை ஏற்று இப்போது டகால்டி மட்டும் 31ந்தேதி வருகிறது. சர்வர் சுந்தரம் பிப்ரவரி 14 ல் வருவதாக ஒப்புக்கொண்டனர். யாருடைய படத்தையும் இந்த தேதியில் வாருங்கள் என சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை. ஆனால் சினிமாவின் நலம் கருதி எங்களுக்குள் பேசி இந்த முடிவுக்கு வந்தோம். இந்த முடிவுக்கு ஒத்துழைத்த இரு தயாரிப்பாளர்களுக்கும் நன்றி.

மீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி: சந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன்

“சர்வர் சுந்தரம்” படத்தயாரிப்பாளர் செல்வகுமார் பேசியது ….

இரண்டு வருடங்களுக்கு மேலாக போராடி இப்போது இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய முற்பட்டோம். சந்தானம் அவர்களின் மற்றொரு படமான “டகால்டி” படமும் அதே நாளில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. இந்தப்பிரச்சனையில் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இருவருக்கும் நலம் பயக்கும் வகையில் எங்கள் படம் பிப்ரவரி 14 படத்தை ரிலீஸ் செய்ய ஒப்புக்கொண்டோம். இது சினிமாவுக்கும் நல்லது, எங்கள் இருவருக்கும் நல்லது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. படம் வெளியிடுவது சாதாரண வேலையில்லை. எங்கள் படத்தை கண்டிப்பாக பிப்ரவரி 14 திரைக்கு கொண்டு வருவோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.

“டகால்டி” படத்தயாரிப்பாளர் சௌத்ரி அவர்கள் பேசியது…

இங்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. எனக்கு இப்படம் தலைப்பிரசவம் போன்றது. எல்லோருக்கும் முதல் படம் என்பது ஒரு குழந்தை பிறப்பது போன்றது தான். சர்வர் சுந்தரம் தயாரிப்பாளர் எங்களுக்காக விட்டுக்கொடுத்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி. இதில் ஒத்துழைத்த தயாரிப்பாளர் சங்கத்திற்கும் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி

தயாரிப்பாளர் சங்கத்தலைவர் பாரதிராஜா பேசியது…

இது ஒரு ஆச்சர்யமான மேடை. இந்தப்பிரச்சனையில் ஒரு பெரும் கத்திச்சண்டை நடந்து கொண்டிருந்தது. என்னதான் பிரச்சனை எனக் கேட்கலாம் என்று போனால் இருவருமே கத்தியை கீழே போட்டு விட்டார்கள். இருவர் பக்கமும் நியாயம் இருக்கிறது. இருவரும் மிகவும் கஷ்டப்பட்டு படம் எடுத்துள்ளார்கள். இக்காலத்தில் படத்தை எடுப்பதை விட அதை கொண்டு சேர்ப்பது அதை விட கஷ்டமானது. இந்தப் பிரச்சனையில் எங்கள் தீர்ப்பை விட அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் மனது பெருந்தன்மையானது. இருவரும் தங்கமான மனிதர்கள். சர்வர் சுந்தரம் படத்தின் மீது எனக்கு கொஞ்சம் அன்பு அதிகம். அந்த தலைப்பின் மீதிலிருந்தே எனக்கு பல மலரும் நினைவுகள் உண்டு. நாகேஷ் நடித்த அந்தப்படம் முதலில் வந்தபோது நான் உதவி இயக்குநர் கூட இல்லை. தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் செல்வகுமார் விட்டுக்கொடுத்துள்ளார். தங்கமான மனிதர் அவர். இருவரும் ஒரே நேரத்தில் வந்தால் அவர்களுக்கும் நஷ்டம் சினிமாவுக்கும் நஷ்டம். இருவரும் சுமூகமாக ஒத்துக்கொண்டு இப்போது படத்தை வேறு வேறு தேதிகளில் ரிலீஸ் செய்கிறார்கள். இருவருக்கும் எனது நன்றிகள். இரு படங்களும் வெற்றி பெற எனது வாழ்த்துகள்.

BREAKING ரஜினி (எ) சிங்கத்திற்கு ஒன்னும் ஆகாது…. நாட்டையும் ஆளும் – நட்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மேன் Vs வைல்ட் என்ற நிகழச்சிக்காக கர்நாடகாவில் உள்ள பந்திபூர் காட்டுக்கு ரஜினிகாந்த் சென்றிருந்தார்.

இன்று ஒரு நாள் மட்டும் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டார்.

சூட்டிங்கை அவர் முடித்து வருவதற்குள் ரஜினிக்கு காயம் ஏற்பட்டதாகவும் உடனே சூட்டிங் கேன்சல் ஆகிவிட்டதாகவும் ஓரிரு டிவி சேனல்களில் பொய்யான செய்திகளை வெளியிட்டது.

ஆனால் சென்னை திரும்பிய ரஜினி தனக்கு ஒன்றும் ஆகவில்லை. காட்டில் உள்ள சின்ன சின்ன முட்கள் குத்தியது. அவ்வளவுதான். சூட்டிங் முடிந்துவிட்டது என செய்தியாளர்களிடம் கூறினார்.

ரஜினிக்கு விதிக்கப்பட்ட ரூ. 66.22 லட்சம் அபராதம் ரத்து; கோர்ட் அதிரடி

ஆனால் ரஜினிக்கு காயம் என்ற செய்தி காட்டுத் தீயாக பரவியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்ற நட்ராஜ் தன் ட்விட்டரில் இப்படி பதிவிட்டுள்ளார்.

N.Nataraja Subramani @natty_nataraj
ஒன்னும் ஆகாது.. போனது சிங்கம்…. காட்ட மட்டும் இல்ல நாட்டையும் ஆளும்….

Nothing will happen to Lion Rajini Soon he will rule the state says Natraj

ரஜினிக்கு விதிக்கப்பட்ட ரூ. 66.22 லட்சம் அபராதம் ரத்து; கோர்ட் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோடி கோடியாக சம்பாதித்தாலும் முறையான வருமான வரியை இத்தனை ஆண்டு காலம் செலுத்தி வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.

ஆனால் அவர் மீது கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை வருமான வரி கணக்குகளை முறையாக காட்டவில்லை என்றும் வருமான வரியும் முறையாக செலுத்தவில்லை என்றும் ரஜினிக்கு ரூ.66.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, ரூ 66.22 லட்சம் அபராதம் விதித்து ரஜினிக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸை எதிர்த்து ரஜினிகாந்த், வருமான வரித்துறை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் முறையிட்டார்.

அந்த வழக்கில், அமலாக்கத் துறையின் நோட்டீஸை ரத்து செய்து உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

காட்டில் காயம்; சூட்டிங் கேன்சல் என பொய் சொன்ன மீடியாக்களுக்கு ரஜினி பதிலடி

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது நடிகர் ரஜினிக்கு விதிக்கப்பட்ட ரூ.66.22 லட்சம் அபராதம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த வழக்கை வாபஸ் பெறுவதாக, வருமான வரித் துறை இன்று (செவ்வாய்க்கிழமை) உயர் நீதிமன்றத்தில் திடீரென அறிவித்தது.

அண்மையில் பெரியாரை அவமரியாதையாக ரஜினி பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது இங்கே கவனிக்கத்தக்கது.

Income tax depat withdrawn their case on Rajini in high court

BREAKING காட்டில் காயம்; சூட்டிங் கேன்சல் என பொய் சொன்ன மீடியாக்களுக்கு ரஜினி பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விரைவில் டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பாக உள்ள மேன் Vs வைல்ட் என்ற நிகழச்சிக்காக கர்நாடகாவில் உள்ள பந்திபூர் காட்டுக்கு ரஜினிகாந்த் சென்றிருந்தார்.

இந்த நிகழ்ச்சி பியர் கிரில்ஸ் எனப்படும் முன்னாள் பிரிட்டிஷ் பாதுகாப்பு படை வீரரால் நடத்தப்பட்டு வருகிறது.

சில மாதங்களுக்கு இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அதாவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரகாண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் தேசிய வன உயிரியல் பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்த நிலையில் இதன் சூட்டிங்குக்காக இன்று ஒரு நாள் மட்டும் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டுள்ளார்.

எம்ஜிஆர் போல பளபளப்பு இல்லாத ரஜினி எப்படி சாதித்தார்.?; திருமாவளவன் பேச்சு

அதற்குள் இன்று மாலையில் ரஜினிக்கு காயம் ஏற்பட்டுள்தாகவும் சூட்டிங் கேன்சல் ஆகிவிட்டதாகவும் முன்னணி டிவி சேனல்களில் பொய் செய்திகள் வெளியானது.

பிரபலமான ஒரு நபருக்கு என்னானது? என்ற விவரம் கூட முழுமையாக தெரியாமல் செய்திகளை உடனே கொடுப்பதாக நினைத்து வதந்திகளை பரப்புகின்றனர்.

இப்படியிருந்தால் நாளை மக்கள் எந்த செய்தியை நம்புவார்கள். இனியாவது தீர விசாரித்துவிட்டு செய்திகளை பதிவிடுங்கள் என ரஜினி ரசிகர்களும் பொதுமக்களும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

இதற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் சற்றுமுன் சென்னை திரும்பியுள்ளார் ரஜினிகாந்த்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது…

‘Man Vs Wild’ சூட்டிங் நல்லபடியாக முடிந்தது. டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பாகும்.

எனக்கு படப்பிடிப்பின் போது எந்த காயமும் ஏற்படவில்லை. காட்டில் நிறைய முட்கள் இருந்தன. அது குத்திவிட்டது. அவ்வளவுதான்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

குறிப்பு – பொய்யான செய்தியை போட்டதற்கு இன்னும் அவர்கள் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.

Rajini slams fake TV reports about Man Vs Wild event shoot

மீண்டும் படம் இயக்குவேன்; புது டைரக்டர்களுக்கு SP.முத்துராமன் சவால்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தரணி ராசேந்திரன் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஞானச் செருக்கு. ஞானச் செருக்கு என்றால் அறிவுத் திமிர் என்று பொருள்படும்.

ஓவியர் வீரசந்தானம், ஜெயபாலன், வீர எய்னன், பரதமிழ்மாறன் (புது முகங்கள்) ஆகியோர் நடித்திருக்கிறார்கள்

இசை: சக்கரவர்த்தி, படத்தொகுப்பு : மகேந்திரன், ஒளிப்பதிவு: கோபி துரைசாமி, இணைத் தயாரிப்பு : ஜெகத்ரட்சகன்
உலக அளவில் மொத்தம் 40 சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் ஏழு சர்வதேச விருதுகளைக் குவித்து இருக்கிறது.

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் சீனியர் இயக்குனர் எஸ்பி முத்துராமன் கலந்துக் கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது…

இந்த ஞானச் செருக்கு படத்தை பார்க்கும்போது படம் இயக்க வயது முக்கியமில்லை என தோன்றுகிறது. இந்த காலத்தில் சினிமாவில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்படுகிறது.

ரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா படத்தில் நடிகர்களுடன் பொம்மைகளை நடிக்க வைத்தேன். அப்போது கிராபிக்ஸ் என்றால் எதுவுமில்லை.

கிராபிக்ஸ் இல்லாத சமயத்திலேயே அப்படி செய்திருக்கிறேன். இப்போது கிராபிக்ஸ் உள்ளது. அப்படி என்றால் கேட்க வேண்டுமா?

சினிமா இயக்காமல் சும்மா இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இப்போது ஞானச் செருக்கு படம் இயக்கும் ஆசையை சீண்டியுள்ளது.

எனவே விரைவில் படம் இயக்குவேன்” என பேசினார் எஸ்பி முத்துராமன்.

Soon I will direct movies says SP Muthuraman at Gnana Cheruku event

எம்ஜிஆர் போல பளபளப்பு இல்லாத ரஜினி எப்படி சாதித்தார்.?; திருமாவளவன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தரணி ராசேந்திரன் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஞானச் செருக்கு. ஞானச் செருக்கு என்றால் அறிவுத் திமிர் என்று பொருள்படும்.

இதில் ஓவியர் வீரசந்தானத்தின் கதை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

ஓவியர் வீரசந்தானம், ஜெயபாலன், வீர எய்னன், பரதமிழ்மாறன் (புது முகங்கள்) ஆகியோர் நடித்திருக்கிறார்கள்

இசை: சக்கரவர்த்தி, படத்தொகுப்பு : மகேந்திரன், ஒளிப்பதிவு: கோபி துரைசாமி, இணைத் தயாரிப்பு : ஜெகத்ரட்சகன்

உலக அளவில் மொத்தம் 40 சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் ஏழு சர்வதேச விருதுகளைக் குவித்து இருக்கிறது.

MAN Vs WILD நிகழ்ச்சியில் பங்கேற்க காட்டுக்கு சென்ற ரஜினி

இந்த படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துக் கொண்டு பாடல்களை வெளியிட்டு பேசினார்.

அவர் பேசியதாவது…

சினிமாவை யதார்த்தம் மாறாமல் கொடுத்தால் அதுவும் வெற்றி பெறும்.

ஆள் கலரும் இல்லை, எம்.ஜி.ஆர் போல் பளபளப்பாகவும் இல்லை, ஆனால் ரஜினி நடித்த படங்கள் எப்படி ஓடுகிறது?’’ என்ற கேள்விகளை ரஜினி சினிமாவில் அறிமுகமான ரஜினி சாதித்தார்.

சினிமாவில் நாயகன், நாயகி மினுமினுப்பான தோல் கொண்டவராக இருக்க வேண்டும் என்ற நிலையைரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றவர்கள் உடைத்தெறிந்தனர்.

அவர்கள் சினிமா யதார்த்தம் கலந்து இருந்தது. தினம் பார்க்கும் நபர்களை போல் இருந்தனர்.

அதுபோல் இந்த ஞானச் செருக்கு படமும் யதார்த்தம் நிறைந்து இருக்கும். நிச்சயம் இந்த படம் மாபெரும் வெற்றி பெறும்” என பேசினார் திருமாவளவன்.

Thirumavalavan talks about MGR and Rajini in Gnana cheruku event

More Articles
Follows