தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை தொகுப்பாளினி நிஷா தொகுத்து வழங்கினார்.
இப்படத்தில் நடித்துள்ள ராதாரவி விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
படத்தின் கலைஞர்களை பற்றி கூறும்போது நிஷா இவரது பெயரை கூறவில்லை என்பதால், 300 படங்களுக்கு மேல் நடித்துள்ள தன்னை யாரோ ஒருவர் போல நிஷா அழைத்து விட்டார்.
தொகுப்பாளினிக்கு அழகும் வேண்டும் கூடவே அறிவும் வேண்டும்” என்று நிஷாவை மேடையிலேயே திட்டினார்.
ராதாரவியின் இந்தப் பேச்சுக்கு பலத்த தைட்டலும் கிடைத்தது.
இந்நிலையில் இதுகுறித்து நிஷா கூறியதாவது… ”அந்த விழாவில் நான் தொகுப்பாளினி மட்டுமே. படக்குழு கொடுத்த ஸ்கிரிப்ட்டில் ராதாரவியின் பெயர் இல்லை. எனவே நானும் சொல்லவில்லை.
அவர்களின் இறைவி படத்தில் பெண்களை மதிப்பதாக கூறியுள்ளனர். ஆனால் பொது மேடையில் ஒரு பெண்னை இப்படி ஒரு ஆண் திட்டியுள்ளார்” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.