இறைவி சொல்லிட்டு இப்படி செய்யலாமா..? ராதாரவிக்கு நிஷா கேள்வி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் இறைவி. இப்படம் நாளை வெளியாகிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை தொகுப்பாளினி நிஷா தொகுத்து வழங்கினார்.

இப்படத்தில் நடித்துள்ள ராதாரவி விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

படத்தின் கலைஞர்களை பற்றி கூறும்போது நிஷா இவரது பெயரை கூறவில்லை என்பதால், 300 படங்களுக்கு மேல் நடித்துள்ள தன்னை யாரோ ஒருவர் போல நிஷா அழைத்து விட்டார்.

தொகுப்பாளினிக்கு அழகும் வேண்டும் கூடவே அறிவும் வேண்டும்” என்று நிஷாவை மேடையிலேயே திட்டினார்.

ராதாரவியின் இந்தப் பேச்சுக்கு பலத்த தைட்டலும் கிடைத்தது.

இந்நிலையில் இதுகுறித்து நிஷா கூறியதாவது… ”அந்த விழாவில் நான் தொகுப்பாளினி மட்டுமே. படக்குழு கொடுத்த ஸ்கிரிப்ட்டில் ராதாரவியின் பெயர் இல்லை. எனவே நானும் சொல்லவில்லை.

அவர்களின் இறைவி படத்தில் பெண்களை மதிப்பதாக கூறியுள்ளனர். ஆனால் பொது மேடையில் ஒரு பெண்னை இப்படி ஒரு ஆண் திட்டியுள்ளார்” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

தனுஷின் நன்றிக் கடன்… இன்ப அதிர்ச்சியில் இயக்குனர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட்டில் ஒரு யதார்த்த நாயகனாக வலம் வந்த தனுஷை பாலிவுட்டில் அறிமுகப்படுத்தியவர் ஆனந்த் எல் ராய்.

இவரது இயக்கத்தில் ராஞ்சனா படத்தில் நடித்து பாலிவுட் ரசிகர்களையும் தன் நடிப்பால் கவர்ந்தார் தனுஷ்.

இதனையடுத்து அமிதாப்புடன் ஷமிதாப் படத்திலும் நடித்தார். விரைவில் ஹாலிவுட்டிலும் நடிக்கவிருக்கிறார் தனுஷ்.

இந்நிலையில் நிம்மோ என்ற படத்தில் வரும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க தனுஷிடம் கேட்டுள்ளார் இதன் இயக்குனர் ஆனந்த் எல்.ராய்.

தன்னை பாலிவுட்டுக்கு அழைத்து சென்றவர் ஆச்சே. மறுக்கமுடியுமா? என சம்பளம் பெறாமல் நடித்துக் கொடுத்துள்ளார் தனுஷ்.

இதனால் ஆனந்த மழையில் நனைந்த வண்ணம் இருக்கிறாராம் ஆனந்த் எல்.ராய்.

‘கடவுள் காட்டிய இந்த நாளுக்காக காத்திருந்தேன்…’ சிம்பு மகிழ்ச்சி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல எதிர்ப்புகளுக்கும் இடையிலும் பல எதிர்பார்ப்புகளுக்கு இடையிலும் சிம்பு நடித்த இது நம்ம ஆளு வெளியானது.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான் இப்படத்தில் சிம்புவுடன் நயன்தாரா, ஆண்டரியா, சூரி, சந்தானம், ஜெயப்பிரகாஷ், தீபா ராமானுஜம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த வெற்றிக் குறித்து சிம்பு கூறியதாவது…

“ரசிகர்கள் என் படத்தை வெற்றிப்படமாக்கியதற்கு மகிழ்ச்சி. என்னுடைய கஷ்டமான காலத்திலும் நான் நம்பிக்கையை இழக்கவில்லை.

தற்போது எல்லாம் நன்றாக நடந்துள்ளது. இது நடக்கும். இந்த நாள் வரும் என காத்திருந்தேன். கடவுள் அவரது சக்தியை காட்டிவிட்டார். எல்லாருக்கும் நன்றி” என கூறினார்.

காந்தி, பாரதியார், தெரசா, அப்துல்கலாமுடன் செல்ஃபி எடுக்கனுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த மாதம் ஓவியர் ஏ.பி. ஸ்ரீதரின் கலைவண்ணத்தில் இந்தியாவின் முதல் தந்திரகலை அருங்காட்சியகம் துவங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, தற்போது 39வது சென்னை புத்தகக் காட்சியில் இந்தியாவின் 2வது தந்திரகலை அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.

இதனை ஒளிப்பதிவாளர் P.C. ஸ்ரீராம் இன்று துவக்கி வைத்து பேசியதாவது…

“ஸ்ரீதர் எனக்கு நீண்ட கால நண்பர். அவருடைய அனைத்து பயணத்திலும், நான் இருந்திருக்கிறேன்.

தந்திரகலை அருங்காட்சியகம் சர்வதேச அளவில் புகழ் பெற்று வருகிறது. அதனை இந்தியாவுக்கு என் நண்பர் ஸ்ரீதர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதில் உள்ள ஓவியங்களுடன் நாம் செல்ஃபி எடுத்து கொள்வது போன்று அழகாக வடிவமைத்துள்ளார். இது அனைவரையும் கவரும்“ என்றார்

இந்த அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள ஓவியங்கள் சில…

  •  காந்தியடிகள் ராட்டினத்தை கொடுப்பார்.
  • திருவள்ளுவர் திருக்குறள் அறிச்சுவடியை கொடுப்பார்
  • அன்னை தெரசவிடம் ஆசி பெறலாம்.
  • பாரதியாருடன் செல்ஃபி எடுக்கலாம்.
  • அப்துல்கலாம் பூந்தொட்டி கொடுப்பார்.
  • சேகுவேராவுடன் செல்ஃபி எடுக்கலாம்.

இந்த தந்திரகலை அருங்காட்சியகம் இன்று 01.06.2016 முதல் 13.06.2016 வரை தீவுத்திடலில் அமைந்திருக்கும்.

மூன்றாவது தந்திரகலை அருங்காட்சியகம் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள எக்ஸ்ப்ரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும் இன்று முதல் துவங்கப்பட்டிருக்கிறது.

பார்வையை இழக்கும் ரசிகரை சந்தித்த விஜய்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகம் போலவே கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர்கள் இருப்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில், கேரளாவில் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய் ரசிகரான ஜிதின் என்பவர் ஏதோ ஒரு நோயின் காரணமாக பார்வையை இழந்து வருகிறார்.

ஒரு கண்ணில் முற்றும் பார்வையை இழந்த அவருக்கு மற்றொரு கண்ணில் பார்வை 25% மட்டுமே உள்ளது.

இனி தன் கண்கள் முழு பார்வையை இழக்கும் முன்பு, தனக்கு விஜய்யை காண வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதனை ரசிகர் மன்றங்கள் விஜய்க்கு தெரிவிக்கவே, ஜிதினை சென்னைக்கு வரவழைத்து, அவருடன் நீண்ட நேரம் செலவிட்டு ஆறுதல் கூறியுள்ளார் விஜய்.

மேலும் பார்வை முழுவதும் கிடைக்க என்ன சிகிச்சையாக இருந்தாலும் செய்யுங்கள். அதற்கான செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

‘இறைவி’க்காக இணைந்த விஜய்-அஜித்-சூர்யா-சிம்பு-தனுஷ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, ராதாரவி, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பூஜா தேவ்ரியா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் இறைவி.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் நாளை மறுநாள் (ஜீன் 3) ரிலீஸ் ஆகிறது.

பொதுவாக தமிழில் சில வார்த்தைகள் ஆண் பாலை மட்டும்தான் குறிக்கும். அதற்கு பெண்பால் சொற்கள் கிடையாது.

உதாரணத்திற்கு… மனிதன், வாலிபன், இளைஞன், இறைவன்

அதுபோல் சில பெண்பால் சொற்களுக்கு ஆண்பால் சொற்கள் கிடையாது.

உதாரணத்திற்கு… விதவை, மலடி உள்ளிட்டவை.

எனவே, பெண்களுக்கான சில வார்த்தைகளை உருவாக்கி கார்த்திக் சுப்புராஜ் படக்குழுவினர் புதிதாக சில வார்த்தைகளை அறிமுகம் செய்துள்ளனர்.

அதில் மனிதன் சொல்லுக்கு நிகராக மனிதி என்றும், இறைவன் என்ற சொல்லுக்கு இறைவி என்றும் தெரிவித்துள்ளனர்.

தற்போது இறைவி படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக என் இறைவி என் பெயரில் அஜித்-ஷாலினி, விஜய்-சங்கீதா, சூர்யா-ஜோதிகா, தனுஷ்-அவரது அம்மா, சிம்பு-அவரது அம்மா ஆகியோரது படங்களை டிசைன் செய்து உலாவ விட்டுள்ளனர்.

ரசிகர்களும் தங்கள் இறைவி படத்துடன் இதை ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர்.

எனவே இணையங்களில் என் இறைவி ட்ரெண்ட்ங்கில் உள்ளது.

More Articles
Follows