அட… ப்ரியா ஆனந்த் எதையும் விடமாட்டாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாமனன் என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார் ப்ரியா ஆனந்த்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தி என 18 படங்களில் நடித்துவிட்டார்.

தற்போது கூட்டத்தில் ஒருவன், முத்துராமலிங்கம் ஆகிய இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

தென்னிந்தியளவில் பிரபலமானாலும் இதுவரை மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடிக்காமல் இருந்தார்.

தற்போது இந்த இரு மொழி படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மலையாளத்தில் பிருத்விராஜ் உடன் ஈஸ்ரா என்ற படத்தில் நடிக்கிறார்.

இதனையடுத்து, ராஜகுமாரா என்ற கன்னட படத்திலும் நடிக்கவிருக்கிறாராம் இந்த தமிழ் நடிகை.

இவர் அனைத்து மொழிகளிலும் நடித்து வருவதால், இவரு எதையும் விட மாட்டாரு போலவே என மற்றவர்கள் புலம்பி வருகிறார்களாம்.

‘பாகுபலி’யை மிஞ்சும் ‘கபாலி’… சர்வதேச அளவில் விநியோகம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படம் சென்சாருக்கு சென்று வந்த பின்னர்தான் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்த முடியும் என்று தயாரிப்பாளர் தாணு சொன்னாலும், ஜுலை 15ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

அதன்படி கபாலி விநியோக உரிமையும் களை கட்டி வருகிறது.

இப்படம் வெளியாகும் சமயத்தில் கிட்டதட்ட தமிழகத்தில் உள்ள 85% தியேட்டர்களில் இப்படம் ஓடிக் கொண்டிருக்கும் எனத் தெரிய வந்துள்ளது.

மேலும் மதுரை மாவட்ட உரிமையை சாய் சினிமாஸ் நிறுவனம் ரூ. 8 கோடிக்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை எந்த படத்திற்கு இவ்வளவு விலை கொடுக்கப்பட்டது இல்லையாம்.

இவையில்லாமல், இந்தியா முழுவதிலும் இப்படத்தை அதிக தியேட்டர்களில் திரையிடவுள்ளனர்.

இதனிடையில், மலாய் மொழியிலும் டப்பிங் செய்து மலேசியாவில் வெளியிடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, சீன மொழியிலும் படத்தை டப்பிங் செய்யவுள்ளனர்.

அண்மையில் பாகுபலி படம் சீனாவில் அதிக திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், பாகுபலியை மிஞ்சும் வகையில் கபாலி, அதிக எண்ணிக்கையில் ரிலீஸ் ஆகும் எனவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

தளபதி, படையப்பா, குசேலனுக்கு பிறகு கபாலிதான்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேறு எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு ரஜினி படங்களில் அவரது பெயர் வரும்போதே தியேட்டர் ஆர்ப்பரிக்கும்.

டைட்டில் கார்ட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற ஒவ்வொரு எழுத்துக்களாக வந்து சேர்வதற்குள் விசில் சத்தம் விண்ணை பிளக்கும்.

அதுபோல்தான் அவரது அறிமுக காட்சி அமைந்திருக்கும். பெரும்பாலும் பாடல் காட்சிகளில் அவர் தோன்றுவார்.

இந்த காட்சி படம் தொடங்கி 5 நிமிடங்களில் வந்துவிடும்.

ஆனால் தளபதி, படையப்பா மற்றும் குசேலன் ஆகிய படங்களில் ரஜினியின் அறிமுக காட்சி சற்று தாமதமாகத்தான் வரும்.

அதுபோல் விரைவில் வெளியாகவுள்ள கபாலி படத்திலும் ரஜினியின் அறிமுக காட்சி திரையில் வர கிட்டதட்ட 15 நிமிடங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

இம்… அதுவரை தியேட்டர்களில் ஸ்கீரின் கிழியாமல் இருந்தால் ஓகேதான்.

‘கபாலி’க்கும் ‘தல-57’க்கும் இப்படி ஒரு தொடர்பா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் திரையுலகில் வந்து ரஜினியைப் போல் சாதிப்பவர் அஜித்.

மேலும் இவர்களிடையே எளிமை, அமைதி, ஓபன் டாக், வெளித்தோற்ற நம்பிக்கையின்மை என பல விஷயங்கள் ஒற்றுமையாகவே உள்ளன.

இந்நிலையில் இவர்களின் சமீபத்திய படங்களுக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

கபாலி படத்தில் இளமையான ரஜினி, வயதான தாடி வைத்த கேங்ஸ்டர் ரஜினி, தாடியில்லாத ரஜினி என பல தோற்றங்களில் அசத்தியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

இவை அனைத்துக்கும் காரணம் டிசைனர் அனுவர்தன் என்பவர்தான்.

இவர்தான் அஜித்தின் தல 57 படத்திற்கும் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம்.

அஜித்தின் பில்லா, ஆரம்பம், வேதாளம் ஆகிய படங்களுக்கும் இவரே டிசைனராக பணிபுரிந்து இருக்கிறர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பாகுபலி கதாசிரியர் கைவண்ணத்தில் ‘முதல்வன் 2’!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவிலும் அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்திய படம் முதல்வன்.

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன், ரகுவரன் நடித்த இப்படம் கடந்த 1999ம் ஆண்டு வெளியானது.

இந்த வெற்றியை தொடர்ந்து, ஷங்கர் இயக்கத்தில் அனில் கபூர் நடிக்க ‘நாயக்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது ‘நாயக் 2’ பாகத்திற்கான கதையை ராஜேந்திர பிரசாத் எழுதி வருகிறாராம்.

இவர் பிரபல இயக்குனர் ராஜமௌலியின் தந்தை என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இவர்தான் ’நான் ஈ’, ’மகதீரா’, ’பாகுபலி’, ’பஜ்ரங்கி பைஜான்’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்ளின் கதாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் ரீமேக் உரிமையை ஏ.எம்.ரத்னத்திடம் இருந்து பெற்று இருக்கிறாராம் தீபக் முகுட்.

விஜய் பிறந்தநாள்: ‘வெற்றி’ கிடைக்காத அதிருப்தியில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை நடிகர் விஜய் தனது 42வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்.

எனவே அவரது ரசிகர்கள் கொடி, போஸ்டர், பேனர் என தங்கள் உற்சாக கொண்டாட்டங்களை முன்பே ஆரம்பித்து விட்டனர்.

மேலும் இரத்ததானம், அன்னதானம், கல்வி சார்ந்த உதவிகள் உள்ளிட்ட நற்பணிகளையும் செய்யவிருக்கின்றனர்.

இந்நிலையில் இவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் தமிழகத்தில் பல திரையரங்குகளில் விஜய்யின் ஹிட்டடித்த படங்களை திரையிட உள்ளனர்.

சென்னை அம்பத்தூரில் உள்ள ராக்கி தியேட்டரில் நாளை காலை 9 மணிக்கு கத்தி படம் ஸ்பெஷல் காட்சி நடைபெறுகிறது.

ஆனால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னையிலுள்ள வெற்றி திரையரங்கில் திரையிட முடியாத சூழ்நிலை என கூறிவிட்டார்களாம்.

எனவே அந்தப் பகுதி விஜய் ரசிகர்கள் வருத்தத்துடன் இருக்கிறார்கள்.

More Articles
Follows