அமெரிக்காவில் அதிரடி காட்டும் சூர்யாவின் ‘என்ஜிகே’ ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருபவர் சூர்யா. இதனால் இவருக்கு அனைத்து தரப்பிலும் ரசிகர்கள் உள்ளனர்.

இவர் நடிப்பில் வருகிற மே 31ஆம் தேதி வெளியாகவுள்ள படம் என்ஜிகே.

செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைக்க, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் இப்படம் வெளியாக உள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 150க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட உள்ளார்கள்.

ஒரு நாள் முன்னதாக 30ம் தேதியே படத்தின் பிரிமீயர் காட்சியும் நடைபெற உள்ளது.

சூர்யா நடித்த படம் அமெரிக்காவில் இத்தனை தியேட்டர்களில் வெளியாவது இதுவே முதல் முறையாம்.

மேலும் தமிழ் படங்களே வெளியாகாத ஒரு சில நாடுகளிலும் இப்படம் வெளியாகிறது என்பதுதான் ஹைலைட்.

மகத்தான மாமனிதர்களை சந்திக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது இசை அமைத்து கொண்டும் பல படங்களில் நடித்தும் வருகிறார்.

இவரது நடிப்பில் சசி இயக்கத்தில் உருவான படம் ”சிவப்பு மஞ்சள் பச்சை” விரைவில் வெளிவரவுள்ளது. மேலும் இயக்குனர் எழில் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து கொண்டு இருக்கிறார். சூர்யா, தனுஷ் நடிக்கும் படங்களுக்கு இசையமைத்து கொண்டும் இருக்கிறார். இவ்வளவு வேலைகளின் நடுவே சமூகம் சார்ந்த பல பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இசை, நடிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்திய ஜி.வி.பிரகாஷ் குமார் சமூக பணிகளிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி கொண்டிருக்கிறார். என்ன காரணம் என்று கேட்டால், “நானும் சமூகத்தில் ஒன்றான மனிதன்தான்” என்கிறார்.

“சினிமா துறை என்பது டாக்டர், வக்கீல் போன்ற ஒரு தொழில் அவ்வளவு தான். நாங்களும் சாதாரண மனிதர்களை போன்றவர்கள்தான். பயணம் எங்கு தொடங்கிறதோ, புதிய கனவுகள் அங்கு மலரும், அந்த பயணத்தின் தொடர்ச்சியாக தான் இசை. இசைக்கு பின்பு நடிப்பு. தற்போது சமூக பணி. நான் இசை அமைத்த போதிலும், நடித்த போதிலும் கிடைத்த கைதட்டல்களில் கிடைக்காத சந்தோஷம் சமூக சார்ந்த வேலைகள் செய்யும் போது மனதிற்கு மிகவும் ஆனந்ததை கொடுக்கிறது.

என் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வேண்டும், அதற்காக என்னால் முடிந்த உதவிகள் செய்வேன். அது என் கடமையும் கூட. என் பயணத்தின் அனுபங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை, தமிழகத்தில் இன்னும் மழை பெய்து கொண்டு இருகிறது என்றால் நான் சந்தித்த, சந்திக்காத மாமனிதர்களால் தான் என்று சொன்னால் மிகையகாது.

என் சமூகத்தில் இன்னும் அடிபடை தேவைகளில் ஒன்றான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது எனது முக்கிய நோக்கம். அதில் குறிப்பாக ஒரு பெண்ணிற்கு கிடைக்கும் கல்வி, அவள் குடும்பத்திற்கு கிடைக்கும் கல்வி ஆகும்.

நான் பார்த்த சமூக பணி செய்யும் மனிதர்கள் மிகவும் சாதாரணமாக மிகப் பெரிய சமூக சார்ந்த பிரச்சனைகளை எதிர்க் கொண்டு அதற்க்கான தீர்வுகளை கண்டு உள்ளார்கள். அதற்காக உலக அளவில் பெரிய விருதுகள் கூட பெற்று கொண்டு இன்னும் மக்களுடன் மக்களாக சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவை அனைத்தும் செய்தும் மிகவும் தன்னடக்கத்துடன் இருக்கிறார்கள்.

நான் சினிமாவில் இருக்கிறேன் என்பதற்காக என் முகம் வெளியே தெரிகிறது. அதுவும் ஒரு வகை நம்மைக்கு தான் என்று நான் எண்ணுகிறேன், காரணம் என் மூலம் இந்த மாமனிதர்களை வெளியே கொண்டு வந்து மக்களுக்கு காட்ட விரும்புகிறேன்.

வெளிச்சத்துக்கு வராமல் அதே நேரத்தில் சிறப்பாக சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் செற்பாட்டாளர்களை நானே நேரடியாக அவர்கள் இடத்துக்கு சென்று பேட்டி எடுத்து வெளி உலகத்துக்கு காட்ட உள்ளேன். “மகத்தான மாமனிதர்கள்” என்ற பெயரில் என்னுடைய யூடியூப் சேனலில் இது ஒளிபரப்பாகும். சுதந்திரமாக இந்த நிகழ்ச்சி அமையவேண்டும் என்பதற்காக லாப நோக்கு துளிகூட இல்லாமல் யூடியூபில் வெளியிடுகிறேன்.

சமூக பணி பல துறைகளில் இருக்கிறது, என்னால் எல்லா துறைகளிலும் சென்று உதவ முடியாது. ஆனால் பல துறைகளில் சிறப்பாக செயல்படும் மனிதர்களுடன் சேர்ந்து பயணிக்க முடிவு செய்தேன். அது போல நான் சமூகத்தில் சந்திக்கும் மகத்தான மனிதர்களை மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் அவர்கள் செய்யும் மக்கள் நலபணிகள், சாதனைகள் என்று அவர்கள் இடத்திற்கே சென்று களத்தில் நான் பார்த்து தெரிந்து கொண்ட அனுபவங்களின் தொகுப்பாக தான் இந்த “மகத்தான மாமனிதர்கள்”, என்று மகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் கூறுகிறார் ஜி.வி.பிரகாஷ் குமார்.

என் திருமணத்தை பத்தி நானே சொல்றேன்.. வெயிட் பண்ணுங்க.. : சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனது குடும்பத்தார் பார்த்துள்ள சொந்தக்காரப் பெண்ணைத் திருமணம் செய்வதற்கு சிம்பு ஒப்புக்கொண்டுள்ளார் என்று ஊடகங்களில் செய்திகள் பரவின. (நம் தளத்தில் அப்படி எதுவும் பதிவிடவில்லை)

இதுதொடர்பாக சிம்பு ஓர் அறிக்கை அளித்துள்ளார். அதில்…

‘என்னுடைய பயணம் மற்றும் ஊடகங்களுடனான பிணைப்பு என்பது நீண்ட காலமானது. என்னுடைய சினிமா வாழ்க்கையைத் தாண்டி ஊடகங்கள் என்னுடைய வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகிறது.

ஒருவேளை ஊடகங்களில் பங்களிப்பு இல்லாமல் இருந்தால், என்னால் லட்சக்கணக்கான குடும்பங்கள் என்னை அவர்களது சொந்த சகோதரராகவும் மகனாகவும் நினைத்திருக்க மாட்டார்கள்.

என்னுடைய வாழ்க்கையில் நான் மிகவும் பாதகமான நிலைக்குச் சென்றிருந்த காலத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்த ஊடகங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியும், என்னுடைய சினிமா வாழ்க்கைப் பற்றியும் ஏராளமான வதந்திகள் இருக்கின்றன என்பது வெளிப்படையானது. குறிப்பாக, என்னுடைய திருமணம் குறித்து வதந்திகள் பரவுகின்றன.

தற்போது திருமணம் குறித்து எந்த திட்டமும் இல்லை என்பதை விளக்கிக் கொள்கிறேன். அதற்கான உரிய நேரத்தில் இதுகுறித்து நானே தெரிவிப்பேன். என்னுடைய சினிமா வாழ்க்கை குறித்தும் நிறைய வதந்திகள் பரவுகின்றன.

ஒரு சினிமா நடிகராக பல தயாரிப்பாளர்களை, இயக்குநர்களை சந்திக்கவேண்டி இருக்கும். இது இணைந்து படம் இயக்குவதற்கு என்று இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

இத்தகைய வதந்திகளால் என்னுடைய ரசிகர்கள் ஏமாற்றம் மற்றும் மனச்சோர்வு அடைகின்றனர். நான் உறுதியாக இருப்பதற்கு என்னுடன் இணைந்து நிற்கும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Simbu aka STRs statment about his marriage and upcoming Projects

ஆட்டோ டிரைவர்களுக்கு பரிசளித்து உணவளித்த தளபதி விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு மே தினத்தனத்தை முன்னிட்டு பரிசுப்பொருட்கள் & மதிய உணவு வழங்கிய தளபதி விஜய் !

ஆண்டு தோறும் உழைப்பாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு, தளபதி விஜய் அவர்கள் தொழிலாளர் தோழர்களுக்கு தனது சொந்த செலவில் விருந்தளித்து பரிசு பொருட்கள் தருவது வழக்கம் !

இவ்வாண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டமையால், இவ்வாண்டுக்கான விழா, இன்று தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் மே தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தளபதி விஜய் அவர்கள் படப்பிடிப்பில் உள்ளதால், அவரது சார்பாக, தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் விழாவினை மாநில பொறுப்பாளர் புஸ்ஸி N ஆனந்த் EX MLA அவர்கள் தலைமையேற்று ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு பரிசுகள் மற்றும் மதிய உணவை வழங்கினார்.

Thalapathy Vijays auto driver fans were treated with Lunch and gift

‘அன்புள்ள அப்பா’ பட பாணியில் உருவான ‘ஆனந்த வீடு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூவி மேநிலா க்கர்ஸ் தயாரிப்பில் உருவாக்கியுள்ளது ஆனந்த வீடு திருவேங்கடம் குடும்பம் அமைதியான குடும்பம் மகன் மகளுடன் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என வாழ்ந்து கொண்டிருக்கிறார் இந்த சூழ்நிலையில் சமூக விரோதிகளால் மகன் கொலை செய்யப்படுகிறான்.

அதோடு நில்லாமல் மகளையும் கொலை செய்யப்போவதாக மிரட்டுகின்றனர் பாசமான மகளை காக்கும் முயற்சியில் ஈடுபடும் போது திடுக்கிடும் சம்பவங்கள் நடைபெறுகின்றன, பாசமான மகளை சமூக விரோதிகளிடமிருந்து காப்பாற்றுகின்றாரா என்பதன் பின்னணியில் உருவாகி உள்ளது ஆனந்த வீடு.

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நதியா நடித்து வெளிவந்த அன்புள்ள அப்பா படத்திற்கு பிறகு தந்தை மகள் பாசத்தை வலியுறுத்தும் படமாக ஆனந்த வீடு உருவாக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சண்டை காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளது பாடல் காட்சிகள் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்டது, படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி இசை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது மிக விரைவில் திரைக்கு வர உள்ளது,

கதை நாயகனாக சிவாயம். அறிமுக நாயகன் துர்கா பிரசாத். நாயகி ககனதீபிகா சுரபி பிக்சர்ஸ் ஜோதி முருகன் முக்கிய வேடம். தம்பா பாண்டியன் வரதன் மற்றும் பலர் இசை கோபாலகிருஷ்ணன், பாடல்கள் ராஜ முனி, கதை வசனம் இயக்கம் சுகுமார்.

Anandha Veedu movie deals with Father and Daughters affection

மீண்டும் தெலுங்குங்கே செல்லும் ‘அயோக்யா’ விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான அயோக்யா படம் அண்மையில் வெளியானது.

அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இது 2015ல் தெலுங்கில் வெளிவந்த ‘டெம்பர்’ படத்தின் ரீமேக் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். தெலுங்கில் ஜுனியர் என்டிஆர், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தை க்ளைமாக்ஸை மாற்றி தமிழில் ரீமேக் செய்திருந்தனர். இது அனைவராலும் பாராட்டப்பட்டது.

விஷாலுக்கு ஏற்கெனவே தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ளதால் தற்போது அயோக்யா படத்தை மீண்டும் தெலுங்குங்கே கொண்டு செல்கிறார்களாம்.

ஜுன் மாதத்தில் இதே பெயரில் தெலுங்கு ‘அயோக்யா’ வெளியாகவுள்ளது.

More Articles
Follows