தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
எப்போதும் சிரித்த முகத்துடன் அமைதியான காணப்படுபவர் இன்று நடந்த விஜய் ஆண்டனியின் எமன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மிகவும் ஆவேசமாக பேசினார்.
அவர் பேசியதாவது…
இது ஆடியோ வெளியீட்டு விழா மேடை. இந்த மேடையில் இதைப் பேசுவது தவறுதான்.
ஆனால், என்னுடைய கோபத்தை எங்கே பேசுவது என்றே தெரியவில்லை.
நாட்டில் நடக்கிற செயல்களை பார்த்தால் மக்களுக்கு கோபம் வருகிறது.
ஆனால் அந்த கோபத்தை ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்த ஆட்களைத் தவிர மற்ற அனைவரிடமும் நிறைய எதிர்பார்க்கிறார்கள்.
ஒரு எம்பி. எம்எல்ஏக்களிடம் எந்த கேள்வியையும் கேட்பதில்லை.
ஆனால், ஒரு நடிகர் விழாவுக்கு வந்தால் குற்றம், வராவிட்டால் குற்றம் என பேசுகிறார்கள்.
எந்த ஒரு பொது நிகழ்வு என்றாலும் சினிமா துறையில் உள்ள கலைஞர்கள் தன் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து செலவு செய்துள்ளார்கள்.
கலைஞர்கள் உங்களை சினிமா மூலம் சந்தோஷப்டுத்த மட்டும்தான்.
அதனை புரிந்து கொண்டு அவர்களுக்கான மரியாதையை திரைத்துறைக்கு அவர்கள் கொடுக்க வேண்டும்” என்று பேசினார் ஞானவேல்ராஜா.
For Public issues question your MLAs dont question Cinema Stars says Gnanavelraja