தனது அடுத்த படத்தலைப்பையும் நெகட்டிவ்வாக வைத்த விஜய்ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படம் தயாரித்தால் அந்த தயாரிப்பாளருக்கு எல்லாம் பாசிட்டிவ்வாக அமைய வேண்டும்.

எனவே படத்தின் தலைப்பையும் பாசிட்டிவ்வாகவே வைப்பார்கள்.

தமிழ் சினிமாவின் இந்த சென்டிமெண்ட்டை உடைத்தெறிந்தவர் விஜய் ஆண்டனி.

தான் தயாரித்து நடிக்கும் படங்களுக்கு நெகட்டிவ் டைட்டில்களை வைப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளார் இவர்.

பிச்சைக்காரன், சைத்தான், எமன், ஆகிய தலைப்புகளை வைத்து அனைத்தையும் வெற்றிப் படங்களாக கொடுத்தார்.

அண்ணாதுரை என்ற படத்தலைப்பில் ஒரு படம் நடித்தார். ஆனால் அது வெற்றிப் பெறவில்லை என்பதால் தற்போது மீண்டும் நெகட்டிவ் தலைப்புக்கே மாறியுள்ளார்.

இவர் நடித்துள்ள காளி படம் இந்த வாரம் மே 18ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் தனது அடுத்த படத்திற்கு கொலைகாரன் என தலைப்பு வைத்திருப்பதாக அறிவித்தார்.

அதுபோல் மற்றொரு படத்திற்கு திமிரு புடிச்சவன் என்று தலைப்பிட்டு நடித்து வருகிறார். இதில் நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடித்து வருகிறார்.

ஒரே கல்லில் 3 மாங்காய்..? சூர்யா-37 படத்தின் பக்கா ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தன் 37வது படத்தை லைக்கா நிறுவனத்திற்காக ஒதுக்கியுள்ளார்.

இப்படத்தை கே.வி. ஆனந்த் இயக்கவுள்ளார்.

அயன், மாற்றான் ஆகிய படங்களை தொடர்ந்து 3வது முறையாக சூர்யா கே.வி. ஆனந்த் கூட்டணி இந்த படத்திற்காக இணைகிறது.

இப்படத்தின் முக்கிய கேரக்டரில் மோகன்லால் நடிக்கிறார். மற்றொரு கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் நடிக்கிறார்.

இவர் ஏற்கெனவே கௌரவம் என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் சூர்யாவுக்கு ஏற்கெனவே தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல மார்கெட் உள்ளது.

இப்படத்தில் மோகன்லால் இணைந்துள்ளதன் மூலம் மலையாளத்திலும் சூர்யா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

ஆக ஒரே கல்லில் 3 மாங்காய் அடிக்க திட்டமிட்டுள்ளார் சூர்யா.

Suriya 37th movie mega plan in Tamil Telugu and Malayalam languages

அதிரடி அறிவிப்புகளுடன் புதிய கட்சித் தொடங்கும் பிக்பாஸ் ஜுலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக் கொண்ட ஜுலியை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தது விஜய் டிவி.

அதன்பின்னர் தமிழகம் முழுவதும் பிரபலமான இவர் தற்போது சினிமாவிலும் நடிக்கத் தொடங்கி விட்டார்.

இந்நிலையில் திடீரென்று சமூக வலைதளங்களில் ஜுலி வெளியிட்டுள்ள வீடியோவில் தான் விவசாயிகள் பிரச்சினை, நீட் தேர்வு பற்றியெல்லாம் சொல்லிவிட்டு தான் விரைவில் ஒன்றை தொடங்க இருப்பதாக சொல்லி முடிக்கிறார்.

இன்னொரு பக்கம் ஒரு புதிய படத்தில் அவர் அரசியல்வாதியாக நடிக்கிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Bigg Boss fame Julie going to start new political party

மோகன்லால்-சூர்யா கூட்டணியில் பிரபல தெலுங்கு நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன் படத்தை முடித்துவிட்டு கேவி. ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார் சூர்யா.

இப்படத்தை லைக்கா நிறுவனம் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கிறது..

சில தினங்களுக்கு முன் இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் தற்போது மற்றொரு கேரக்டரில் அல்லு சிரிஷ் என்ற பிரபல தெலுங்கு நடிக்கவுள்ளாராம்.

இத்தகவலை இயக்குனர் கே.வி. ஆனந்த தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

Actor Allu Sirish teams up with Mohanlal in Suriya 37

அன்னைக்கு கட்டிய கோயிலின் முதலாம் ஆண்டு விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராகவா லாரன்ஸ் தனது தாய்க்கு ஒரு கோயிலை கட்டி அதை சென்ற ஆண்டு இதே அன்னையர் தினத்தன்று திறந்து வைத்தார்.

கோயில் திறக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு பெறுவதையொட்டியும் அன்னையர் தினத்தன்று தாய்மார்களை கெளரவப் படுத்தவும் உள்ளார்.

இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு தனது ஆஸ்ரமத்தில் படிக்கும் குழந்தைகள் மத்தியில் பூஜை நடத்தப்படுகிறது.

அம்பத்தூர் அருகில் உள்ள திருமுல்லைவாயலில் உள்ள அந்த கோயிலில் அன்னையர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு ஏற்பாடுகளை செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ்.

நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டில் அன்னையின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுங்கள்.

அன்னையை வணங்கினால் எந்த துன்பமும் இல்லை.

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

Raghava Lawrence celebrated 1st Anniversary of his mothers temple

Julias Eyes படத்தை 2 மொழிகளில் ரீமேக் செய்யும் கமல் பட ஒளிப்பதிவாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

JULIA’S EYES எனும் திகில் திரைபடம் ஸ்பானிஷ் மொழியில் 2010-ஆம் ஆண்டு வெளியானது. ஐரோப்பிய நாடுகள் முழுவதையும் கலக்கிய JULIA’S EYES திரைப்படம் இந்தியாவிலும் வெளியாக வெற்றிபெற்றது.

ஸ்பெயின் நாட்டில் மட்டுமே சுமார் 20 மில்லியன் டாலர் வசூல் செய்து பல பாராட்டுகளையும் குவித்திருக்கிறது.

ஜூலியா எனும் பெண் தன் சகோதரியின் சாவில் இருக்கும் மர்மத்தை கண்டறியும் முயற்சியில் தன் பார்வையை இழந்துவிடுகிறாள் அதன் பின் என்ன நடக்கிறது என்பதே இக்கதையின் கருவாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை Guillermo Del Toro தயாரித்தார்.

தற்போது இதை இந்தியாவில் இரண்டு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
தமிழிலும், தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படவுள்ள இத்திரைபடத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கபீர் லால் தானே தயாரித்து, இயக்கவும் உள்ளார்.
கபீர் லால் பரதேஸ், அப்னே, Welcome Back போன்ற இந்தி படங்களிலும், ஆதித்ய 369, பைரவ தீபம் அந்தரிவாடு, போன்ற தெலுங்கு திரைப்படங்களையும் மற்றும் தமிழில் மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்.

100க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.
தற்போது போல நவீனத்துவம் ஏதும் இல்லாத காலத்திலேயே மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நான்கு கமல்களை ஒரே நேரத்தில் திரையில் காண்பித்தவர் இந்த கபீர் லால்.
இத்திரைபடத்தை பற்றி கபீர் லால் பேசும்போது, “மிகவும் சுவாரசியமான திரைக்கதை கொண்டது இத்திரைபடம். இதை இந்தியாவிற்கும் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு தான் தமிழிலும் தெலுங்கிலும் முதலில் ரீமேக் செய்ய போகிறேன்.
பின்னர் பல மொழிகளிலும் இந்த திரைபடத்தை ரீமேக் செய்யவும் திட்டமிட்டிருக்கிறேன்.” என்று பேசினார்.
விரைவில் Julia’s Eyes திரைப்படத்தின் ரீமேக் வேலைகள் தமிழிலும் தெலுங்கிலும் ஆரம்பித்துவிடும் எனவும் தெரிவித்தார்.

Spanish language movie Julias Eyes remake in Tamil and Telugu

More Articles
Follows