தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதன் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.
இதில் படக்ழுகுழுவினருடன் இயக்குநர் சசி, ரூபா மஞ்சரி, கிருத்திகா உதயநிதி, சார்லி, எஸ்.ஏ.சந்திரசேகர், ஞானவேல் ராஜா, தனஞ்செயன், மகிழ் திருமேனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக விஜய்சேதுபதி கலந்துக் கொண்டு பேசும்போது எமன் படத்தின் கதையை ஜீவா சங்கர் முதலில் இவரிடம்தான் தெரிவித்தாராம்.
ஆனால் இவரிடம் கால்ஷீட் இல்லாததால், அதன்பின்னர்தான் அந்த வாய்ப்பு விஜய் ஆண்டனிக்கு சென்றதாம்.
விஜய் ஆண்டனியும், ஜீவா ஷங்கரும் இரண்டு எமதர்ம ராஜாக்கள் என்றும் வித்தியாசமான கதைகளை எப்போதும் தேர்ந்தெடுக்கும் விஜய் ஆண்டனிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார் விஜய்சேதுபதி.