தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்கள் ஏற்று நடித்து வருவது நாம் அறிந்ததே.
இந்த இரு கேரக்டர்களையும் கிராமத்து வேடங்களாகவே வடிவமைத்து இருந்தாராம் இயக்குனர்.
ஆனால் இரண்டும் ஒன்றாக இருந்தால் சுவாரஸ்யம் இருக்காது.
மேலும் தன் ரசிகர்களுக்காக இரண்டில் ஒன்றை சிட்டி கேரக்டராக மாற்றச் சொன்னாராம் விஜய்.
இவையில்லாமல், தன் நடனத்திற்கு ஏற்ப நிச்சயம் ஒரு குத்து பாடல் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
எனவே இயக்குனர் பரதனும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் தளபதியின் அன்பு கட்டளையை ஏற்று மாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
