விஜய் 60 அப்டேட்ஸ் : நாளை முதல் தளபதி அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெறி படத்தை தொடர்ந்து, விஜய் தன் 60வது படத்தில் நடித்து வருகிறார்.

பரதன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இதன் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளது.

இதில் விஜய் சம்பந்தப்பட்ட அதிரடியான காட்சிகளை படமாக்க இருக்கிறாராம் பரதன்.

அஜித்துக்கு கோடி கோடியாய் கொடுக்க நயன்தாரா ரெடி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைகாலமாக திரைத்துறையின் எந்த துறையில் ஒருவர் இருந்தாலும் அவர்கள் வர நினைக்கும் துறையாக தயாரிப்பு துறை இருக்கிறது.

நாமும் படங்களை எடுத்து ஒரு தயாரிப்பாளராகிவிட வேண்டும் என பலரும் முயற்சித் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது அந்த வரிசையில் விரைவில் நயன்தாராவும் இணைவார் என்றே தெரிகிறது.

விரைவில் இவர் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், அதில் அஜித்தை நடிக்க வைக்க முயற்சித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

அஜித்தின் சமீபத்திய படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெறுகின்றன.

எனவே, அஜித்தின் ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு கோடி தரவும் தயாராக இருக்கிறாராம் நயன்தாரா.

தல என்ன செய்ய போகிறாரோ?

‘நா.முத்துக்குமார் மறைந்தாலும் பாடல்கள் வரும்’ – மதன் கார்க்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபலங்கள் என்றாலே அவர்களது மரணம் கூட ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பும்.

அண்மையில் பிரபல பாடலாசிரியர் நா முத்துக்குமார் காலமானார்.

மஞ்சள் காமாலை நோய் தாக்கியதாகவும், செலவுக்கு பணம் இல்லாததால் மரணம் அடைந்ததாகவும் பல்வேறு செய்திகள் வந்தன.

மேலும் அவருடையை குடி பழக்கமும் ஒரு காரணம் என தகவல்கள் வருகின்றன.

இதனை முற்றிலும் மறுத்துள்ள மற்றொரு பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறியுள்ளதாவது…

“அவர் மறைந்தாலும், அவர் எழுதிச்சென்ற பாடல்கள் இரண்டு வருடத்திற்கு வெளிவரும்” என்றார்.

‘எங்களை எதுவுமே செய்ய விட மாட்டீங்கிறீங்களே…’ நயன்தாரா நாணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார்.

இப்படம் தொடங்கியது முதல் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகியதாக கூறப்பட்டது.

மேலும் பல விழாக்களுக்கும் இருவரும் ஒன்றாக சென்று வந்தனர்.

இந்நிலையில் ஒரு பிரபல சேனல் ஒளிப்பரப்பிய விருது வழங்கும் விழாவில் இருவரும் நானும் ரவுடிதான் படத்திற்காக விருதுகளை பெற்றனர்.

அப்போது விக்னேஷ் சிவன் பேசும்போது, நயன்தாராவின் பெயரை தொகுப்பாளர்கள் மிர்ச்சி சிவா மற்றும் சதீஷ் மாறி மாறி கூறிக் கொண்டே இருந்தனர்.

அதன்பின்னர் நயன்தாரா பேசும்போதும் இதே போன்று செய்தனர்.

நான் அவரு பெயரை சொல்லலாமா? என்று கேட்டுவிட்டு ‘எங்களை தான் எதுவுமே செய்ய விட மாட்டீங்கிறீங்க… ? என்று நாணத்துடன் கூறினார் நயன்தாரா.

அப்போது அரங்கமே சிரப்பலையில் அதிர்ந்தது.

விரைவில் ரஜினி ரசிகர்களுக்கு ஷங்கரின் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும் எதிர்பார்ப்பில் உருவான ரஜினியின் ‘கபாலி’ படம் 25வது நாளை கடந்து இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

விரைவில் ஷங்கர் இயக்கும் 2.0 படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பில் நடிக்கவிருக்கிறார் ரஜினி.

தற்போது இதன் டீசர் எடிட்டிங் பணி நடைபெற்று வருகிறதாம்.

எனவே மிகவிரைவில் இதன் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவிருக்கிறதாம்.

இது ரஜினி ரசிகர்களுக்கு ஷங்கர் தரும் மாபெரும் விருந்தாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

சிம்புவின் AAA பட டீசர் வெளியீட்டில் ஒரு புதுமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘அன்பாவனவன் அசராதவன் அடங்காதவன்’.

மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார்.

இதில் சிம்பு 3 கெட்டப்களில் நடிக்கிறார் சிம்பு. இதில் உள்ள மதுரை மைக்கேல் கேரக்டரின் புகைப்படம் பர்ஸ்ட் லுக்கில் வெளியானது.

இதனையடுத்து விரைவில் இந்த கெட்டப்பில் உள்ள டீசரை வெளியிடவிருக்கிறார்களாம்.

அதன்பின்னர் மீதமுள்ள இரண்டு கேரக்டர்களும் ஒவ்வொரு டீசராக வெளியிட இருக்கிறார்களாம்.

More Articles
Follows