கைதி கொடுத்த தைரியம்..; மீண்டும் விஜய்யுடன் மோதும் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த பிகில் அண்ட் கார்த்தி நடித்த கைதி ஆகிய இரு படங்களும் தீபாவளியையொட்டி கடந்த அக்டோபர் 25ஆம் தேதி ரிலீசானது.

விஜய் படங்களுக்கு நல்ல மார்கெட் இருப்பதால் அவரை எதிர்த்து கார்த்தி படம் வந்தபோது பலரும் பலவிதமான பேசினார்கள்.

ஆனால் பிகில் படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தன. ஆனால் கைதி படத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

தற்போது விஜய்யின் அடுத்த படமான தளபதி 64-ம் படத்தை கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படம் அடுத்த வருடம் 2020 ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நாளில் கார்த்தியின் அடுத்த படமான சுல்தானும் ரிலீசாகவுள்ளதாக கூறப்படுகிறது.

ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் என்பவர் தான் கார்த்தியின் சுல்தான் படத்தை இயக்கி வருகிறார்.

இப்பட மூலம் தெலுங்கில் பிரபலமான ராஷ்மிகா மந்தனா தமிழில் அறிமுகமாகிறார்.

Again Karthi plans to clash with Vijay in 2020 Summer

காப்பான் இயக்குனருடன் கை கோர்க்கும் ரஜினி; லைகா தயாரிப்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏஆர். முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படத்தை முடித்துவிட்டார் ரஜினிகாந்த்.

லைகா தயாரித்துள்ள இந்த படம் 2020 பொங்கலுக்கு வெளியாகிறது.

இதனையடுத்து சிவா இயக்கவுள்ள தலைவர் 168 படத்தில் டிசம்பர் மாதம் முதல் சூட்டிங்கில் கலந்து கொள்ளவிருக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தை 2020 தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆக அடுத்த வருடம் பொங்கல் & தீபாவளிக்கு ரஜினி படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் தலைவர் 168 படத்தை முடித்துவிட்டு மீண்டும் லைகாவுடன் ரஜினி இணையவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இந்த படத்தை காப்பான் இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்குகிறார்.

எனவே தற்போது கே.வி. ஆனந்த் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறாராம். இது தலைவர் 169 ஆக இருக்கலாம்.

After Thalaivar 168 movie Rajini team up with Lyca for his next

சூரி-யின் 2 ஹோட்டல்களை திறந்து வைத்தார் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல தமிழ் படங்களின் மூலம் நகைச்சுவை விருந்து அளித்து வந்த நடிகர் சூரி தமிழ் மக்களுக்கு அருமையான அறுசுவை உணவை அளிக்க எண்ணி 2017ம் ஆண்டு “அம்மன்” உயர்தர சைவ உணவகத்தை மதுரை காமராஜர் சாலையில் துவக்கினார்.

“அம்மன்” உணவகத்தின் சுவை மிகுந்த உணவிற்கு மக்கள் ஏகோபித்த ஆதரவை அளித்து நடிகர் சூரியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

தற்போது நடிகர் சூரி மேலும் தனது உணவக கிளைகளை பெருக்க வேண்டி “அம்மன்” உயர்தர சைவ உணவகம் மற்றும் “அய்யன்” உயர்தர அசைவ உணவகம் ஆகிய இரண்டு புதிய கிளைகளை மதுரை அவனியாபுரம், ஏர்போர்ட் பைபாஸ் சாலையில் துவக்குகின்றார்.

இந்த புதிய உணவகங்களை சூரியின் உடன் பிறவா சகோதரரான நடிகர் சிவகார்த்திகேயன் இன்று (நவம்பர் 1) குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.

பல பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் “அம்மன்” உயர்தர சைவ உணவகம் மற்றும் “அய்யன்” உயர்தர அசைவ உணவகத்தின் திறப்புவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

திறப்புவிழாவிற்கு வருகைதந்து வாழ்த்திய அனைவருக்கும் நடிகர் சூரி மற்றும் குடும்பத்தினர் தங்களது நன்றியினை தெரிவித்தனர்.

Sivakarthikeyan inaugurated comedian Sooris hotels in Madurai

பரவை முனியம்மா நலம் பெற்று வருகிறார்..; வதந்திகளை நம்பாதீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதுரையை சேர்ந்த நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா, தூள் முதல் மான் கராத்தே வரை பல படங்களிலும் நடித்து பிரபலமானார்.

83 வயதான அவர் கிட்னி பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். கலைமாமணி விருது பெற்ற இவருக்கு, அரசின் உதவி தொகையாக மாதம் 6,000 ரூபாய் கிடைக்கிறது.

இத்தொகை, மருத்துவ சிகிச்சைக்கே போதாத நிலையில், மிகவும் கடினமான சூழ்நிலையில், நாட்களை கடத்தி வருகிறார்.

சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர், வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். சில வாரங்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

அதன் பிறகும் அவரால் பேச முடியவில்லை. காதும் கேட்கவில்லை. நேற்று மதியம் ‘பரவை’ முனியம்மா, மூச்சுவிட சிரமப்பட்டார்.

இதை அறிந்து நடிகர் அபி சரவணன், அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசரப்பிரிவில் சேர்த்துள்ளார். பரவை முனியம்மாவின் உடல்நலம் குறித்து அபி சரவணனிடம் நடிகர் சங்கத்தில் இருந்து கார்த்தி, நாசர், பொன்வண்ணன், ஐசரி கணேஷ் மற்றும் பாக்யராஜ் ஆகியோர் விசாரித்தனர்.

அவருக்கு தேவையான உதவிகளை செய்ய சொல்லி தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மருத்துவ நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையில் ஒரு சில பிரபல பத்திரிகைகளை பரவை முனியம்மா இறந்துவிட்டதாக செய்திகளை வெளியிட்டுள்ளனர். ஆனால் அது வதந்தி என பிஆர்ஓ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Actress and Singer Paravai Muniyamma recovering fast

ரஜினி ஆசியுடன் AVM நிறுவன MS குகனின் மருமகன் நடிகராகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் பழம்பெரும் நிறுவனமான ஏ.வி.எம்., புரொடக்ஷன்ஸ் மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கியுள்ளது.

ஏவிஎம் வழங்க, கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் ‛அந்த நாள்’. இப்படத்தை விவீ இயக்குகிறார்.

இதில் அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் என்பவர் நடிக்கிறார். இவர் ஏவிஎம்.ன் எம்.எஸ்.குகனின் மருமகன் ஆவார்.

இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை, ரஜினி வெளியிட்டார். கதாநாயகன் ஆர்யன் ஷாம் புகழ்பெறவும், ‘அந்த நாள்’ படம் வெற்றி பெறவும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

விரைவில் மோஷன் போஸ்டர், டீசர், டிரைலர், பாடல்கள் ஆகியவை வெளியாகவுள்ளது.

Rajini released Aryan Shaam starring Andha Naal first look

 

மம்முட்டி – ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகும் ‘குபேரன்’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மம்முட்டி, ராஜ்கிரண், மீனா ஆகியோர் நடிப்பில் தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘குபேரன்’.நடிகர் ராஜ்கிரண் இந்த படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் முதன் முதலாக அடியெடுத்து வைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ள நிலையில், இத்திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு தமிழ் திரையுலகில் அதிகரித்துள்ளது. தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளிலும் தயாராகும் இத்திரைப்படத்தை ஜோபி ஜார்ஜ் தயாரித்து இருக்கிறார்.

என் ராசாவின் மனசிலே, பாசமுள்ள பாண்டியரே படங்களை தொடர்ந்து சுமார் 28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரணும் மீனாவும் இந்தப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம். 2.O படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்த பிரபல காமெடி நடிகர் கலாபவன் ஷாஜன் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க, முக்கிய வேடத்தில் நடிகர் சித்திக் நடித்துள்ளார்.

பிரபல மலையாள இயக்குனர் அஜய் வாசுதேவ் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே மம்முட்டியை வைத்து மலையாளத்தில் ராஜாதி ராஜா மற்றும் மாஸ்டர் பீஸ் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் அஜய் வாசுதேவ்.. மம்முட்டியுடன் மூன்றாவதாக இணையும் முதல் இயக்குனர் இவரே.மலையாளத்தில் இந்தப்படத்திற்கு ஷைலாக்(Shylock) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் கதையை புதியவர்களான பிபின் மோகன் மற்றும் அனீஸ் ஹமீது ஆகிய இருவரும் எழுதியுள்ளனர். ராஜ்கிரண் வசனம் எழுதியுள்ளார். ரணதீவ் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் கோபிசுந்தர் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.. இவர் ஏற்கனவே தமிழில் தோழா, பெங்களூரு நாட்கள் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பாடல்களை ராஜ்கிரண், விவேகா எழுதியுள்ளனர். பல படங்களை ராஜ்கிரண் அவர்கள் இயக்கி இருந்தாலும் பாடல் எழுதுவது இதுவே முதன் முறை.

இந்த படத்தின் தமிழ் உரிமையை ராஜ்கிரணின் ரெட் சன் ஆர்ட் கிரேஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ராசாவே உன்னை நம்பி, என்ன பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் ஆகிய வெள்ளி விழா படங்களையும், நூறு நாட்கள் படங்களையும் தயாரித்து வெளியிட்டு இருக்கிறது.

இந்த படம் வரும் டிசம்பரில் ரிலீசாக உள்ளது.

More Articles
Follows