தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண், ஆர்யா தன்னை திருமணம் செய்துக் கொள்வதாகவும் தன்னிடம் 70 லட்சம் ரூபாய் பணமும் பெற்றுக் கொண்டு ஏமாற்றினார் எனவும் புகார் தெரிவித்துள்ளார்.
தற்போது, ஜெர்மன் நாட்டு குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறாராம் விட்ஜா.
இந்த பெண் பிரதமர் & குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைனில் ஆர்யா மீது அளித்துள்ள புகாரில்…
“பணத்திற்கு கஷ்டப்படுவதாக ஆர்யா கூறி தன்னிடம் பணம் பெற்றதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்” எனவும் ஆர்யா கூறியதாக தெரிவித்துள்ளார்.
முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா மீது, பெண் ஒருவர் மோசடி புகார் அளித்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Actor Arya faces money fraud complaint from srilankarn girl