தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஒன்லைன்…
ஒரு நடு ராத்திரியில் எப்போது பெண் சுதந்திரமாக தனியாக நடந்து செல்கிறாரோ அப்போதுதான் உண்மையான சுதந்திரம் என்று மகாத்மா காந்தி சொன்னார்.
இதில் தனியாக நடுராத்திரியில் செல்லும் பெண் கற்பழிக்கப்படுகிறார்.. கற்பழிப்புக்கு தீர்வு தண்டனை மட்டுமல்ல என்று மாற்று வழியை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
கதைக்களம்…
ஆடுகளம் நரேன் பேப்பர் ஏஜெண்ட்.
இவர் தனது இரண்டு மகள்களோடு (பாவனா மற்றும் எஸ்தேர்) வாழ்ந்து வருகிறார். ஒருநாள் இரவில் வேலை முடிந்து வீடு திரும்பும் பாவனாவை ஐந்து வாலிபர்கள் கற்பழிக்கின்றனர்.
இதனால் போலீசுக்கும் ஆளுங்கட்சிக்கும் கடும் கண்டனங்கள் வருகிறது.. மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
இதனால் அவசர அவசரமாக வழக்கை முடிக்க என்கவுண்டர் செய்கிறது போலீஸ்.
இதனால் பாதிப்படைந்த 5 வாலிபர்களின் பெற்றோர் மனித உரிமை கழகத்தை நாடுகின்றனர்.
இந்த வழக்கை விசாரிக்க மனித உரிமை கழகத்தின் உறுப்பினரான (ஐஏஎஸ்) வரலக்ஷ்மி நியமிக்கப்படுகிறார்.
அந்த ஐந்து வாலிபர்கள் தான் கற்பழித்தார்களா? உண்மை என்ன? போலீஸ் என்ன செய்தது? ஆளுங்கட்சி என்ன செய்தது? வரலட்சுமி என்ன செய்தார்? பாதிக்கப்பட்ட குடும்பம் என்ன செய்தது? பாவனா என்ன செய்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
கதையின் நாயகியாக நடித்துள்ளார் வரலட்சுமி.. ஒரு பொறுப்பான அதிகாரியாக அவர் நடந்து கொள்ளும் விதம் சிறப்பு.
பாதிக்கப்பட்ட பெண்ணாக பாவனா.. இதுபோன்ற காட்சியில் நடிக்க நிச்சயமாக ஒரு நடிகைக்கு துணிச்சல் வேண்டும். அதை வெகு சிறப்பாக செய்து இருக்கிறார்.
நிஜமாகவே கற்பழிக்கப்படும் பெண்ணின் வேதனைகளை உணர்வு பூர்வமாக காட்டி இருக்கிறார்.
போலீசாக பொன்முடி.. ஆளுங்கட்சிக்கும் மக்களுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு அவர் எடுக்கும் நடவடிக்கைகள் செம. மிரட்டலான நடிப்பையும் கொடுத்துள்ளார்.
பாவனாவின் தந்தையாக ஆடுகளம் நரேன். மனைவியை இழந்த ஒரு கணவரின் வேதனையையும் அம்மா இல்லாத பிள்ளைகளை வளர்க்கும் தந்தை பாசத்தையும் அழகாக காட்டியிருக்கிறார்.
அதுபோல தங்கையாக நடித்துள்ள எஸ்தரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.
டெக்னீஷியன்கள்…
படத்தின் பின்னணி இசையிலும் ஒளிப்பதிவிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இந்த படம் ஆரம்பிக்கும் போதே டைட்டில் கார்டில் எண்ணற்ற கற்பழிப்பு காட்சிகளும் அது தொடர்பான பத்திரிக்கை செய்திகளும் காட்டப்படுகின்றன.. அப்போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு உருவாகிறது.
பொதுவாக இது போன்ற கற்பழிப்பு கொலை கொள்ளை பற்றிய படங்களில் கிளைமாக்ஸ் காட்சியில் மக்கள் பார்வைக்கு விட்டு விடுவார்கள்..
ஆனால் இதில் கற்பழிப்புக்கு ஒரு நிரந்தர தீர்வை சொல்லி இருக்கிறார் இயக்குனர். பள்ளிகளில் கட்டாயமாக செக்ஸ் பாடக்கல்வி தேவை.
மேலும் கற்பழிப்பை குறைக்க விபச்சாரத்தை சட்டமயமாக்கனும் என்ற கருத்தையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அமுதவாணன்.
ஆளுங்கட்சியும் போலீசும் தங்கள் அதிகாரத்தை காட்டுவதற்கு இது போன்ற வழக்குகளை பயன்படுத்திக் கொள்வதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.
ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் இந்த தீர்வை அவர் சொல்லும்போது மேலோட்டமாக சொல்லி இருக்கிறார். அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. உணர்வுப்பூர்வமாக அழுத்தமாக காட்சிப்படுத்தி இருக்கலாம்.
ஆக வி3.. ஐஏஎஸ் வரலக்ஷ்மி நியமிக்கப்படுகிறார்.
Varalaxmi Sarathkumar ( Sivagami)
Paavana ( Vindhya )
Esther Anil ( Viji )
Adukaalam Naren ( Velayutham )
Ponmudi ( Viswanathan)
Visarnai Kathai Asiriyar Chandra Kumar ( logo)
Jai Kumar
Sheeba
Crew
Direction – Amudhavanan
Music – Allen Sebastian
DOP – Siva Prabhu
Editor – Nagooran
Sound design – Udaya Kumar
Colorist – Sreeram Balakrishnan
Stunt – Mirattal Selva
Costumes – Tamil selvan
Make up – Hema – Meera
VFX – Quebec fx – Moses
SFX – Sathish Kumar
Production Manager – Santhosh Kumar | Muthuraman
PRO – Sathish Kumar Siva – Aim
Publicity Designer – NextGen
Executive producer – Pukazhenthi.
Production House : Team A Ventures
V3 movie review and rating in tamil