தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தின் ஒரிஜினல் படமான ஒக்கடு என்ற படத்தை இயக்கியவர் இந்த குணசேகர்.
மேலும் அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி என்ற சரித்திர கால படத்தையும் இயக்கியிருந்தார். தற்போது இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் சாகுந்தலம்.
கதைக்களம்..
விஸ்வாமித்திர முனிவருக்கும், மேனகைக்கும் பிறக்கும் குழந்தை சகுந்தலை (சமந்தா).
ஒரு அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் முனிவர்கள் நிறைந்த பகுதியில் இந்த குழந்தையை விட்டுச் செல்கின்றனர். இந்த குழந்தையை பார்க்கும் அங்கு உள்ள மடத்து மாணவர்கள் தங்களது குருவிடம் சொல்கின்றனர்
அதன்பின்னர் கன்வ மகரிஷியின் மகளாக வளர்கிறார். தன்னுடன் இருப்பவர்கள் மட்டும்தான் அன்பையும் பாசத்தையும் காட்டுவார்கள் என சமந்தா நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அந்நிய தேசத்திலிருந்து வரும் ராஜா இவரை கண்டதும் காதல் கொள்கிறார் துஷ்யந்தனான தேவ் மோகன்.
ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து ரகசிய திருமணமும் செய்து கொண்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றனர்.
அப்போது சமந்தா கர்ப்பமாகி விடுகிறார். நான் என் நாட்டிற்கு சென்ற பின்னர் உன்னை ராஜ மரியாதையோடு அழைத்துச் செல்கிறேன் என வாக்குறுதி கொடுத்து செல்கிறார்.
இதன் இடையில் சமந்தா ஒரு மாபெரும் முனிவரின் சாபத்திற்கு ஆளாகிறார்.
என்னை கண்டு கொள்ளாத உன்னை அந்த ராஜாவும் கண்டு கொள்ள மாட்டார் என சாபம் விடுக்கிறார்.
அதன் பிறகு என்ன ஆனது.? என்பதுதான் படத்தின் கதை. மகாராணியாக மாறினாரா சமந்தா? ராஜா இவரை கண்டு கொண்டாரா என்பது தான் கதை.
கேரக்டர்கள்…
கதையின் நாயகியாக சமந்தா. மடத்தில் இருக்கும் போது ஆனந்தமாக இருப்பார் என்றால் அப்போதுமே சோக முகத்துடன் காணப்படுகிறார்.. காதலன் கைவிட்டு சென்றபோதும் மிகவும் சோகமாக காணப்படுகிறார்..
ஆக மொத்தம் படத்தில் சமந்தா சிரிக்கும் காட்சிகள் குறைவு. அவரின் வேகமும் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.
துஷ்யந்தனாக தேவ் மோகன்.. நல்ல உயரம், விரிந்த தோள்கள், தீர்க்கமான கண்கள் என அரசருக்கே உரித்தான கம்பீரத்தோடு வலம் வருகிறார்.. அவரின் கண்களைப் பார்க்கும் எந்த ஒரு பெண்ணும் காதல் கொள்வாள் என்பதைப் போல காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு.
சமந்தா தோழியாக வரும் அதிதி பாலன் ஓகே. துர்வாசராக வரும் மோகன்பாபு நிறைவு.
மேனகையாக மதுபாலா தன் பிள்ளைக்காக கலங்கி நடனம் ஆடி மனதில் நிறைகிறார்.
படகோட்டியாக பிரகாஷ்ராஜ். ஏன் ஒரு பாடலுக்கு மட்டும் வருகிறார்.??
டெக்னீஷியன்கள்…
மணிசர்மா வித்தியாசமான இசைக்கருவிகள் மூலம் இசையை அமைத்துள்ளார். மல்லிகா..மல்லிகா.. பாடல் மட்டும் மனதில் நிற்கிறது.
ஜோசப் வி. சேகர் ஒளிப்பதிவு நம்மை பல காட்சிகளில் வியக்க வைக்கிறது.
ஒரு புராண கால கதையை படமாக்குவது மிக எளிதான காரியம் அல்ல. அதற்கு கலை இயக்குனரின் கைவண்ணம் தான் பக்க பலம் கொடுக்கும். இதிலும் அப்படி கொடுத்திருக்கிறார்.
ஆனால் சில காட்சிகளில் கிராபிக்ஸ் காட்சிகள் அப்பட்டமாக தெரிகிறது. முக்கியமாக மிருகங்கள் காட்டப்படும் போது.. நிறைய காட்சிகளை கிரீன் மேட் வைத்து எடுத்துள்ளதும் தெரிகிறது. இவைகளை இன்னும் கலை நுணுக்கத்தோடு கவனித்திருக்கலாம்.
பிரம்மாண்ட அரண்மனையை காட்டும்போது பிரமிக்க வைக்கிறது. பாகுபலி படத்தில் கூட இப்படி ஒரு அரண்மனையை நாம் பார்க்கவில்லையே என்ற உணர்வு ஏற்படுகிறது.
இது போன்ற படங்களை 3டியில் படமாக்கி இருந்தால் குழந்தைகளும் நிறைய காட்சிகளை முக்கியமாக விலங்கு காட்சிகளை ரசித்திருப்பார்களே இயக்குனர் குணசேகர்.
Shaakuntalam movie review and rating in tamil