தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நீண்ட நாள்களுக்கு பிறகு சேரன் நாயகனாக நடித்துள்ள படம். இந்த படத்தை சாய் ராஜ்குமார் என்பவர் இயக்கியிருக்கிறார். இவர் ராஜ்குமார் என்ற பெயரில் மழை படத்தை இயக்கியிருந்தார்.
கதைக்களம்..
சேரன்.. அவரது மனைவி சரயு மோகன். இவர்களது மகள் நந்தனா மோகன்.
கிரைம் ப்ரான்ச் போலீஸ் சேரன். இவருக்கு தன்னை அறியாமல் அடிக்கடி உறங்கும் வியாதி உள்ளது. இதனால் இவரது மனைவி பிரிந்து செல்கிறார்.
கோர்ட்டில் விவாகரத்து கேஸ் நடக்கிறது. அப்போது தன் மகளை வெளிநாட்டில் படிக்க வைக்க அம்மா ஆசைப்படுகிறார்.
எனவே தன் மகள் 10 நாட்களாவது என்னுடன் இருக்க வேண்டும் என விரும்பி கோர்ட்டில் கேட்கிறார் சேரன். கோர்ட்டும் உத்தரவிடுகிறது.
பத்து நாட்களும் மகள் மீது பாசத்தை பொழிகிறார் சேரன். பிரிவதற்கு முதல் நாள் மகளின் பிறந்தநாள் வருகிறது.
அன்று வேலை காரணமாக சரியான நேரத்திற்கு சேரனால் வீட்டிற்கு வரமுடியவில்லை.
அடிமுறை Vs கிக் பாக்ஸிங்… பட்டாஸ் விமர்சனம்
எனவே தன் பிறந்தநாள் பார்ட்டியை அப்படியே ரெக்கார்ட்டு செய்து தன் தந்தைக்கு வீடியோவாக அனுப்புகிறார் மகள்.
சேரன் அந்த வீடியோவை பார்க்கும்போது அதில் கலந்துக் கொண்ட ஒரு நபர் மகளை கடத்துகிறார். கடத்திய பின் லைவ் வீடியோ வருகிறது.
அதன்பின்னர் சேரன் என்ன செய்தார்? அவன் யார்? சேரன் மகளை கடத்த என்ன காரணம்? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
சேரன் அவரது மகள் நந்தனா இருவரும் கச்சிதம். சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். தன் மகளை ஒருவன் கடத்தி வைத்த லைவ் வீடியோவை பார்க்க முடியாமல் தவிக்கும் காட்சிகள் சேரனின் நடிப்பை பாராட்டியே ஆக வேண்டும். வெளியில் சொல்ல முடியாமல் கலங்கும் காட்சிகள் அருமை.
அழகான அன்பான மகளாக நந்தனா. இவருக்கு விரைவில் ஹீரோயின் சான்ஸ் வரும்.
இண்டர்நெட்டில் பெண்கள் சிக்கும் கேரக்டரை அருமையாக உணர்த்தியுள்ளார். இனியாவது சிறுமிகள் இண்டர்நெட்டை பார்த்து உஷாராக உபயோகிக்க வேண்டும்.
சேரனின் மனைவியாக சரயு மோகன். சில காட்சிகள் என்றாலும் தன் கண்களாலேயே அனைத்தும் வெளிப்படுத்து விடுகிறார். பூர்விகம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.
மாடல் பெண்ணாக ஸ்ருஷ்டி டாங்கே. கொஞ்சம் கவர்ச்சி கொஞ்சம் நடிப்பு கொஞ்சம் தவிப்பு என அசத்தியிருக்கிறார்.
வில்லனாக நடித்திருப்பவர் இர்ஃபான். நல்ல உயரம். ஸ்மார்ட். பணக்கார வீட்டு பையன் கேரக்டருக்கு பொருத்தம். இவர்களது ப்ளாஷ்பேக் பணக்கார திமிர்.
ரஜினி தர்பார்டா.. ச்சும்மா கிழி.. தர்பார் விமர்சனம் 4/5
அதே சமயத்தில் வில்லன் வேடத்தில் இன்னும் மிரட்டியிருந்தால் நல்லது.
சேரனின் குழுவாக வரும் போலீஸ்காரர்கள் கம்பீரம் போதவில்லை.
சேரன் படம் முழுவதும் சரக்கு அண்ட் தம் அடிப்பது கொஞ்சம் ஓவர்தான்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஒளிப்பதிவாளரின் கேமரா கை வண்ணம் ரசிக்க வைக்கிறது.
இசையமைப்பாளர் வினோத் எஜமானியா. பாடல்களும் பின்னணி இசையும் கச்சிதம்.
படத்தின் கதைக்களம் சரியாக இருந்தாலும் சொல்லப்பட்டதில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். க்ளைமாக்சில் நிறைய நாடகத்தனம் உள்ளது.
ஒரு இடத்தில் பெண்கள் கடத்தி வைத்திருக்கும்போது ஸ்ருஷ்டி மட்டும் அங்கே வந்து அந்த கதவை தட்டுவது எப்படி? கடத்தியவர்கள் அங்கே என்ன செய்துக் கொண்டிருந்தார்கள்.
அதுபோல் இண்டர்நெட் போன் கால்கள் இன்னும் டெக்னாலஜியை பயன்படுத்தியிருக்கலாம். சொல்லி வைத்த போல் சில காட்சிகளை நகர்த்தியிருக்கிறார். வில்லன் முகத்தில் பெரிதாக எந்த வில்லத்தனமும் இல்லை. இன்னும் மெச்சூரிட்டி தேவை.
மற்றபடி சமுதாயத்திற்கு தேவையான கதையில் மகள் அப்பா பாசத்தையும் அருமையாக கொடுத்துள்ளார் சாய் ராஜ்குமார்.
ஆக இந்த ராஜாவுக்கு செக்… பெண்களுக்கு உஷாரான படம்.