தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஒன்லைன்..
எவருக்கு தீங்கு விளைவிக்காத உயிரினம் ஓணான். ஆனால் அதை கண்டாலே சிலர் அடிப்பார்கள். அப்படி தீங்கு நினைக்காத ஒரு குடும்பத்தை ஒருவன் வஞ்சிக்கும் கதையே இந்த படம்.
களவாணி படத்தில் ஓவியாவின் அண்ணனாக மற்றும் ஈட்டி படத்தில் ஸ்ரீதிவ்யாவின் அண்ணனாக நடித்தவர் திருமுருகன். இந்த படத்தின் கதையின் நாயகன். இவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத்.
கதைக்களம்…
பைத்தியகாரன் போல இருக்கும் திருமுருகன் ஒரு ஊருக்கு பிழைப்பு தேடி செல்கிறார். யார் என்ன பேசினாலும் எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.
ஒரு பிரச்சினையில் சரவணன் சக்தியை அடித்து துவைத்து பூ ராம் குடும்பத்தை காப்பாற்றுகிறார். இதனால் ராம் குடும்பத்தினர் இவருக்கு அடைக்கலம் கொடுக்கின்றன்ர.
அந்த குடும்பத்தினருக்கு திருமுருகனை பிடித்துவிட்டதால் தனது மகள் ஷில்பாவுக்கு திருமுருகனை 2வதாக மணமுடித்து வைக்கிறார்.
வெளிநாட்டில் இருக்கும் ஷில்பாவின் அண்ணன் காளி வெங்கட் தங்கை திருமணத்திற்கு வருகிறார். தங்கை முதலிரவின் போதுதான் திருமுருகனைப் பற்றி தெரிந்து கொள்கிறார்.
உன் குடும்பத்தையே வெட்டி சாய்க்க வந்திருக்கிறேன் நான் என்கிறார் திருமுருகன்.
காளி வெங்கட் என்ன செய்தார்.? திருமுருகன் ஏன் மனைவி குடும்பத்தை அழிக்க நினைக்கிறார்? குடும்பத்தினர் என்ன செய்தார்கள்? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்..
கதையின் நாயகனாக திருமுருகன் சதாசிவின்… படம் முழுக்க சைக்கோவாக காட்டியிருக்கிறார். ப்ளாஷ்பேக் காட்சியில் பொறுப்பான கணவனாக மாறியிருக்கிறார்.
ஹீரோ கேரக்டர் செய்கிறோம். உடல் இளைத்திருக்கலாம். இன்னும் வில்லன் லுக்கிலேயே இருக்கிறார் திருமுருகன். படத்தில் கொஞ்சமே பேசி நடித்துள்ளார்.
சேலையில் அழகு காட்டி நடித்திருக்கிறார் நாயகி ஷில்பா மஞ்சுநாத். திருமணம் ஆன பின்பும் தன்னுள் காதல் வருவதை தன் கண்களில் உணர்த்தி நடித்திருக்கிறார்.
மற்றொரு நாயகியாக சனுஜா சோமந்த். அழகும் திறமையும் உள்ள நடிகை.
பல படங்களில் காமெடியில் கலக்கி ஒரு படத்தில் நாயகனாக நடித்தவர் , காளி வெங்கட். இதில் வில்லனாக அவதாரம் எடுக்க முயற்சித்துள்ளார். வீட்டில் நல்லவனாக வெளியில் கெட்டவனாக திரியும் சில ஆண்களை போல் நடித்திருக்கிறார். சில இடங்களில் ஓவர் ஆக்ட்டிங்.
சிங்கம் புலி காமெடி ஓரிரு இடங்களில் சிரிக்க வைக்கிறது. திரிபு.. திரிபு.. என இவர் பேசி கடலை போடும் காட்சிகளில் இவரது பாஷை ரசிக்க வைக்கிறது.
சரவணன் சக்தி அறிமுகமாகும்போது நல்லவனா? கெட்டவனா? வில்லனா? என வாய்ஸ் ஓவர் வருகிறது. அதுபோல் நமக்கும் கடைசி வரை தெரியவில்லை. தந்தையாக பூ ராம், தனது கேரக்டரில் கச்சிதம். இவரது மனைவி கேரக்டரும் நல்ல தேர்வு.
காளி வெங்கட்டின் குழந்தைகளும் சிறப்பான தேர்வு.
டெக்னிஷீயன்கள்..
ராஜேஷ் ராமனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பசுமையாக காட்டியிருக்கிறார்.. அந்தோணி ஆபிரகாம் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
முதல் பாதி கதை என்னவென்றே தெரியவில்லை. யாருனே தெரியாதவரை ஒருவரை குடும்பமே தம்பி.. தம்பி.. என கொண்டாடுவது நெருடல். ஆனால் அவர் (திருமுருகன்) செய்த உதவி அப்படி என்பதால் ஏற்றுக் கொள்ளலாம்.
2ஆம் பாதியில் தான் கதையின் ஆழத்தை காட்டியிருக்கிறார் இயக்குனர் சென்னன். இதுபோன்ற கதை பல இடங்களில் உண்மையாகவே நடக்கிறது. எனவே அதை அப்பட்டமாக காட்சிகளாக காட்டிய இயக்குனரை பாராட்டலாம்.
ஆக… இந்த ஓணான்.. திருட ஏங்கும் ஆம்பள புத்தி…
Onaan movie review and rating in Tamil