தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கதைக்களம்…
ஒரு குழந்தை கடத்தப்படுவதை பார்த்து விடுகிறார் மகத். இதனையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் செய்கிறார்.
அப்போதுதான் கடத்தல் கும்பலுக்கும் அந்த காவல் அதிகாரிக்கும் (சுப்ரமணிய சிவா & அமித் பார்கவ்) தொடர்பு இருப்பதை அறிகிறார்.
கடத்தலை பார்த்த குற்றத்திற்காக மகத் கொல்லப்படுகிறார். மகத் கொல்லப்பட்டதை அறிந்த அவரது காதலியும் போலீஸ் அதிகாரியமான வரலட்சுமி விசாரணையில் இறங்குகிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது? தன் காதலனை கொன்றவர்களை கண்டுபிடித்தாரா? குழந்தைகளை கடத்துபவர்களின் நோக்கம் என்ன? இறுதியில் என்ன ஆனது ? என்பதுதான் படத்தின் மீதிக்கதை
கேரக்டர்கள்…
மகத் படத்தில் கொஞ்ச நேரமே வருகிறார். ஓட்டம் பதட்டம் என ரசிக்க வைக்கிறார்.
வழக்கமான நாயகி இல்லாமல் கம்பீரமான போலீஸாக வரலட்சுமி.. தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை தன் நடிப்பால் மெருகூட்டி இருக்கிறார்.
நண்பனுக்காக பழிவாங்கும் நண்பர்களாக சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபாலன் மற்றும் யாசர் அராஃபத் நடித்துள்ளனர்.
இதில் சந்தோஷ் பிரதாப் கூடுதல் கவனம் பெறுகிறார். ஆனாலும் காட்சிகள் பெரிதாக இல்லை.
வில்லன்களாக மாஃபியா கேங் லீடர் சுப்ரமணிய சிவா & போலீசாக அமித் பார்கவும் வருகின்றனர்.
உயர் அதிகாரியாக ஆரவ்.. விசாரணை காட்சிகளில் கம்பீரமாக மிரட்டியிருக்கிறார். இவருக்கு சில ஃபிளாஷ்பேக் காட்சிகளும் உண்டு.
டெக்னீஷியன்கள்…
தயாள் பத்மநாபன் இயக்கிய இந்த படம் ஒடிடியில் மே 19ஆம் தேதி வெளியானது. இவரின் முந்தைய ‘கொன்றால் பாவம்’ படமும் ஒரு திரில்லர் தான்.
ஓடிடிக்கு ஏற்ற வகையில் ஒரு திரில்லர் கதையை மெதுவாக கொடுக்க வேண்டும் என நினைத்து அந்த கதைக்கு ஏற்ப நடிகர்களை தேர்வு செய்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு – சேகர் சந்துரு
படத்தொகுப்பு – ப்ரீத்தி பாபு
பின்னணி இசை – மணிகாந்த் கத்ரி
2 காவல் நிலையம் 3 வீடுகள் என கதை நகரும்போது அதை வைத்து தன்னால் என்ன முடியுமோ அது நிறைவாக செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர். அதற்கு ஏற்றார் போல் படத்தொகுப்பும் கவனிக்கத்தக்க வகையில் உள்ளது.
பாடல்கள் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.
ஒரு காவல்நிலையத்தில் ஒரு ஆய்வாளர் கொலை செய்யப்படுகிறார். ஆனால் காவல்துறை இவ்வளவு மெத்தனமாக இருக்குமா என்ன.?
தன்னுடைய காதலர் காவலராக இருக்கும்போது அவரிடம் ஆலோசனை கேட்காமல் வேறு ஒரு காவல் நிலையத்திற்கு இளைஞர் செல்வது ஏன்?
காதலனைக் கொன்றவனை பிடிக்க போலீசை வரலட்சுமி நம்பாமல் இருக்க என்ன காரணம் ? ஆகிய லாஜிக் ஓட்டைகள் ஆங்காங்கே உள்ளன.
ஆக மாருதி நகர் போலீஸ் ஸ்டேசன் – த்ரில்லர் விசாரணை
Maruthi Nagar police station movie review and rating in tamil