டோரா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : நயன்தாரா, தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன், சுலிகுமார் மற்றும் பலர்.
இயக்கம் : தாஸ் ராமசாமி
இசை : விவேக் சிவா மெர்வின்
ஒளிப்பதிவாளர் : தினேஷ் கிருஷ்ணன்
எடிட்டர்: கோபி கிருஷ்ணா
பி.ஆர்.ஓ.: நிகில்
தயாரிப்பு : சற்குணம்

கதைக்களம்…

நயன்தாராவின் அப்பா தம்பி ராமையா.

இவர்கள் இருவரும் ஒரு கால் டாக்ஸி நிறுவனத்தை ஆரம்பிக்க செகண்ட் ஹேண்டில் ஒரு பழைய காரை வாங்குகின்றனர்.

ஆனால் அந்த கார், ஒருமுறை தானே இயங்கி ஒருவனை கொல்கிறது.

இதற்கான விசாரணையில் இறங்குகிறார் ஹரிஷ் உத்தமன்.

ஆனால் சரியான ஆதாரம் இல்லாமல் இவர் குழம்பி நிற்கிறார்.

அந்த கார் இன்னும் சிலரை கொல்ல நினைக்கிறது. அதற்கு என்ன காரணம்? அப்படியென்றால் அந்த காருக்குள் இருக்கும் ஆன்மா யார்?

அது நயன்தாராவின் காரில் வரக் என்ன காரணம்? என்ன தொடர்பு? என்ற பல திருப்பங்களுக்கு பதில் சொல்கிறாள் டோரா.

கதாபாத்திரங்கள்…

கதை தான் ஹீரோ. நான்தான் ஹீரோயின் என அபார நம்பிக்கையில் இறங்கி அடிக்கிறார் நயன்தாரா.

அப்பா தம்பி ராமையாவிடம் கொஞ்சுவதும், பேய் காரைப் பார்த்து பயப்படுவதும், பின்னர் வில்லனைக் கொல்வதும் என பல கோணங்களில் அசத்துகிறார் நயன்தாரா.

தம்பி ராமையாவும் தன் பங்கில் குறைவைக்கவில்லை. ஹரிஷ் உத்தமன் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

தென்னிந்தியாவில் வடநாட்டு பையன்கள் வந்து, காட்டும் கைவரிசைகளை அப்பட்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

படம் பற்றிய அலசல்…

கதை ஹீரோ என்பதால், நாய், பேய், கார் என அனைத்தையும் நயன்தாராவுக்கு போட்டியாக களம் இறக்கிவிட்டுள்ளார் டைரக்டர்.

காரிடம் நயன்தாரா பேசும் காட்சிகள், போலீஸிடம் இருந்து கார் தப்பிக்கும் காட்சிகள் நிச்சயம் குழந்தைகளை கவரும்.

காரின் நிழலாக வரும் நாய் மற்றும் அந்த கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பு சேர்க்கிறது.

ப்ளாஷ்பேக் காட்சியில் காருக்கும் நயன்தாராவுக்கும் என்ன சம்பந்தம்? என்ற காட்சிகளும், பாலியல் கொடுமை காட்சிகளும் படத்திற்கு அழுத்தம் சேர்க்கின்றன.

டோராவை மையப்படுத்தி ஒரு பாடல். நான் ஈ படத்தில் உள்ள பாடலை நினைவுப்படுத்துகிறது.

பின்னணி இசை த்ரில் சீன்களில் திகைக்க வைக்கிறது.

தாஸ் ராமசாமி படத்தை கையாண்ட விதம் அருமை என்றாலும் பழிவாங்கும் கதையில் இன்னும் ட்விஸ்ட் சேர்த்திருந்தால், டாப் கியரில் படம் எகிறியிருக்கும்.

(குழந்தைகள் பார்க்கும் வகையிலேயே படம் உள்ளது. ஆனால் என்ன காரணத்தினாலோ படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது)

டோரா… குழந்தைகளுடன் ரசிக்கலாம்

கவண் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : டி ராஜேந்தர், விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன், பாண்டியராஜன், விக்ராந்த், சாந்தினி, ஜெகன், ஆகாஷ்தீப் சாய்கல், போஸ் வெங்கட், ஸ்ரீனிவாசன் மற்றும் பலர்.
இயக்கம் : கே வி ஆனந்த்
இசை : ஹிப் ஹாப் ஆதி
ஒளிப்பதிவாளர் : அபிநந்தன்
எடிட்டர்: ஆண்டனி
பி.ஆர்.ஓ.: நிகில்
தயாரிப்பு : ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட்

கதைக்களம்…

சென்1 என்ற டிவி நிறுவனர் ஆகாஷ்தீப் சாய்கல். இந்த சேனலில் விஜய்சேதுபதி, மடோனா, ஜெகன் உள்ளிட்டோர் வேலை செய்கின்றனர்.

டிஆர்பி ரேட்டிங்குக்காக இவர்களின் ஓனர் பல தில்லுமுல்லுகளை செய்கிறார். இவராகவே சில விஷயங்களை செய்து ப்ரேக்கிங் நியூஸ் ஆக்கி பரபரப்பு உண்டாக்குறிர்.

மேலும் போஸ் வெங்கட் போன்ற தீயவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு உண்மையை சொல்லவிடாமல் மறைக்கிறார்.

ஒரு கட்டத்தில் இவரின் செயல்களை பிடிக்காத விஜய்சேதுபதி குழுவினர் பிரச்சினை செய்துவிட்டு, டி ராஜேந்தர் முத்தமிழ் டிவி சேனலில் சேர்கின்றனர்.

அதன்பின்னர் ஒரு இந்த இரு சேனல்களுக்கும் நடக்கும் வாய்மை யுத்தமே இந்த கவண்.

கதாபாத்திரங்கள்….

விஜய்சேதுபதிக்கு இந்த கேரக்டர் புதியது. ஹேர் ஸ்டைலை மாற்றி வித்தியாசப்படுத்தி காட்டியுள்ளார்.

டிவி பேட்டியின் போது அலட்டிக் கொள்ளாமல் அசால்ட்டாக பேசி கவர்கிறார்.

ஆனால் விஜய்சேதுபதி ஆங்கிலம் பேசும் காட்சிகளில் உச்சரிப்பை இன்னும் பெட்டராக கொடுத்திருக்கலாம். (பாண்டியராஜின் உச்சரிப்பும் அப்படிதான்)

மடோனா மாடர்னாக வந்து மனதில் நிற்கிறார். ஆனால் சாந்தினி கேரக்டர் சப்பென்று முடிகிறது.

இதுவரை இப்படியான கேரக்டர்களில் நாம் டி ராஜேந்தரை பார்த்திருக்க முடியாது. அமைதியாக காணப்பட்டாலும் அடுக்கு மொழி வசனத்தில் அதிர வைக்கிறார்.

அயன் படத்தில் ஸ்லிம்மாக பார்த்த வில்லன், இதில் படா வெயிட்டாக வருகிறார். ஆனால் கேரக்டரில் வெயிட் இல்லை.

விக்ராந்த், போஸ் வெங்கட், விக்ராந்த் ஜோடி ஆகியோர் தங்கள் பணியை நிறைவாக செய்துள்ளனர்.

நாசர் கேரக்டரை வீணடித்துவிட்டார்கள்.

பவர் ஸ்டார் ஒரு சீன் வந்தாலும் அவர் சொல்லும் பன்ச் நிச்சயம் ரசிக்க வைக்கும்.

‘என்னை ஜீனியஸ்னு சொல்லிடாதீங்க.  நீங்க என்னைய காமெடி பீஸா நினைக்கிற வரைக்கும் தான் எனக்கு மார்க்கெட்டு.

ஆனால் ஒரு விஷயம் எல்லாரையும் முட்டாள நினைக்காதீங்க. எல்லாருக்கிட்டேயும் ஒரு திறமை இருக்கு…’ என சொல்லும்போது கைதட்ட வைக்கிறார். அதுபோல் இண்டர்வெல் சீனும் க்ளாப்ஸை அள்ளும்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் இசை பெரிதாக கைகொடுக்காது. ஹிப் ஹாப் ஆதியின் குரல் நடிகர்களுக்கு பொருந்தவில்லை.

அபிநந்தனனில் ஒளிப்பதிவில் இரண்டு சேனல் நிறுவனங்களையும் வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பது சிறப்பு.

ஆர்ட் டைரக்டர் DRK கிரணை பாராட்டியே ஆக வேண்டும். டி. ஆர் ஆபிஸை மாற்றும் காட்சிகளில் டாய்லெட் முதல் சூ வரை பயன்படுத்தியிருப்பது  கலை இயக்குனரின் கைவண்ணம்.

ஒரு சேனலில் நடக்கும் விஷயங்களை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் கொடுத்துள்ளார்.

டிஆர் ரேட்டிங்குக்காக சர்ச்சைகளை உருவாக்குவதும், ரியாலிட்டி ஷோக்களில் அவர்கள் நடந்து கொள்ளும் விதமும், அழகு சாதனங்களை விற்பதற்காக நடத்தப்படும் நடன நிகழ்ச்சிகளையும் தோலுருத்திக் காட்டியிருக்கிறார்.

படத்தின் வசனங்கள் ஆங்காங்கே கைத்தட்டல் பெறுகிறது. சில அறுவறுக்கதக்க வார்த்தைகளை எடிட் செய்திருக்கலாம்.

க்ளைமாக்ஸில் நிறைய லாஜிக் மீறல்கள். ஏதோ அவசர அவசரமாக காட்சிகளை முடிக்க திட்டமிட்டு இருப்பது போன்ற உணர்வு.

போஸ் வெங்கட் பேட்டி காட்சிகள் ஏதோ சுவாரஸ்யம் இல்லை. முதல்வன் படத்தின் ரகுவரனின் காட்சியை எவரும் மிஞ்ச முடியாது போல.

டிவிஸ்ட் என்ற பெயரில் க்ளைமாக்ஸில் நீளத்தை நீட்டி போராட்டிக்க வைக்கிறார் டைரக்டர்.

கவண் கவனிக்கப்பட வேண்டியவன்

பாம்பு சட்டை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், பானு, கே. ராஜன், குருசோமசுந்தரம், ஆர்வி உதயகுமார், மொட்டை ராஜேந்திரன், சார்லி மற்றும் பலர்.
இயக்கம் : ஆடம்தாசன்
இசை : அஜேஸ் அசோக்
ஒளிப்பதிவாளர் : கேஜி வெங்கடேஷ்
எடிட்டர்: ராஜா சேதுபதி
பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : மனோபாலாவின் பிக்சர் அவுஸ்

 

கதைக்களம்…

ஒன்லைன்… நேர்மையாக நடந்து கொள்வதால் வரும் பிரச்சினைகளும் அதனை சுற்றியுள்ள நடக்கும் சுவாரஸ்யங்களும்தான் கதை.

தன் அண்ணி பானுவுடன் வசிக்கிறார் பாபி சிம்ஹா. வீடு மற்றும் ஆபிஸ்களுக்கு வாட்டர் கேன் போடுவதே இவரது வேலை.

வாட்டர் கேன் போடும்போது எக்ஸ்போர்ட்டில் வேலை செய்யும் கீர்த்தியை சந்திக்கிறார். இவர்களுக்குள் காதல் மலர்கிறது.

இதனிடையில் அண்ணிக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்கிறார். ஆனால் அவருக்கு பெரும் கடன் இருக்க, அதனை அடைக்க முயற்சிக்கிறார்.

அந்த பெரும் தொகையை ஒரு குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைத்து, பின்னர் அதிலிருந்து மீளமுடியாமல் பாபி சிம்ஹா தவிக்கும் சம்பவங்கள் இந்த பாம்பு சட்டை.

கேரக்டர்கள்…

நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான யதார்த்தமான கேரக்டரில் பாபி சிம்ஹா.

அழுக்கு பையனாக வந்தாலும் அசத்தியிருக்கிறார் பாபி.

அழகான கவிதை சொல்லி கீர்த்தியை அசத்தினாலும், இவர் முகத்தில் ரொமான்ஸ் மட்டும் வர மாட்டுங்குதே ஏன் பாஸ்..?

இதுவரை கலர்புல் கீர்த்தி சுரேஷை நாம் பார்த்து இருப்போம். ஆனால் இதில் நெக்ஸ்ட் டோர் கேர்ளாக நம் மனதில் நிறைகிறார்.

நீங்களே வேணாம் என மறுத்தாலும் வேணி கேரக்டராக வந்து ஒட்டிக் கொள்வார் கீர்த்தி.

இவரது ஆடைகள் கூட அடிக்கடி ரிப்பீட் ஆவதுபோல் காட்சிகளை அமைத்து, ஒரு ஏழைப் பெண்ணாக காட்டியிருக்கிறார் டைரக்டர்.

கணவன் தம்பியுடன் வசிக்கும் போது காட்டும் கண்ணியம் ஆகட்டும், பின்னர் மறுமணத்திற்காக தயார் ஆவது என அண்ணியாக அசத்தியிருக்கிறார் பானு.

மொட்டை ராஜேந்திரன் வழக்கம்போல வந்து காமெடி செய்கிறார்.

தயாரிப்பாளர் கே.ராஜன், குருசோமசுந்தரம் மற்றும் சார்லி கேரக்டர்கள் படத்திற்கு கூடுதல் பலம்.

பணத்திற்காக இவர்கள் எதை செய்தாலும், அதில் எதற்காக செய்கிறோம்? என்பதை வேறுபடுத்தி காட்டியிருப்பது டைரக்டரின் புத்திசாலித்தனம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அஜேஷ் அசோக்கின் இசையில் மெலோடி பாடல்கள் ஓகே. ஸ்ரேயா கோஷல் பாடியுள்ள நீ உறவாக பாடல் ரசிக்க வைக்கிறது.

வெங்கடேஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஓகேதான் என்றாலும் படத்தின் நீளம் பொறுமையை சோதிக்கிறது.

இடைவேளை வரை மனது நிறைவாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் ஏன்? இத்தனை நீளம் என கேட்கத் தோன்றுகிறது. எடிட்டர் எங்கப்பா..?

இயக்கம் பற்றிய அலசல்…

அண்ணியை பாபியுடன் இணைத்து ஊர் பேசும்போது, உங்க அப்பா போய்ட்டாரன்னா? அம்மாவ தனியாக விட்டுவியா? என கேட்கும் காட்சி அருமை.

படத்தின் டைட்டில் பாம்பு சட்டை? ஏன் என்பதை வசனங்கள் மூலம் சொன்னதற்கு இயக்குனருக்கு நன்றி.

வில்லன் கே ராஜன் படத்தின் காட்சிபடி ஒரு படம் தயாரிக்கிறார். அதில் ரெமோ படத்தின் பேனர் வருவது ஓகே. ஆனால் இந்த படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் படம் வரலாமா? சார்..?

கமர்ஷியல் வேண்டும் என்பதற்காக வரும் அந்த பாடல் தேவையில்லை. (நாகேந்திர பிரசாத் மற்றும் சாந்தினி ஆடும் குத்துப்பாட்டு)

சில கும்பல்கள் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் எப்படி விடுகிறார்கள்..? என்பதை நம்பும் படியாகவும் அதே நேரம் விழிப்புணர்வு வரும்படியாக காட்டியிருப்பதும் சிறப்பு.

படத்தின் நீளத்தை மட்டும் குறைத்தால் இந்த பாம்பு சட்டையை எல்லாம் ரசிகனும் ரசிப்பான்.

நேர்மையான வாழ்பவனுக்கு முன்னேற்றம் ஒரு நாள் வரும். ஆனால் அதற்கு காத்திருக்க வேண்டும் என காட்சியை முடித்திருப்பது டைரக்டர் டச்.

மனோபாலா இல்லாத படங்களே இல்லை என்ற நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளராக இருந்தும் அவர் இதில் இல்லை என்பது மகா ஆச்சரியம்தான்.

பாம்பு சட்டை… ரசிகர்களுடன் ஒட்டிக் கொள்ளும் அட்டை

எங்கிட்ட மோதாதே விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : நடராஜ் (நட்டி) ராஜாஜி, ராதாரவி, விஜய்முருகன், சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர், பாலா சிங், ப்ளோரண்ட் சி பெர்ரெரா, தாஷாயினி, முருகானந்தம், வெற்றிவேல்ராஜா மற்றும் பலர்.
இயக்கம் : ராமு செல்லப்பா
இசை : நடராஜன் சங்கரன்
ஒளிப்பதிவாளர் : எம் சி கணேஷ் சந்திரா
எடிட்டர்: அத்தியப்பன் சிவா
பி.ஆர்.ஓ.: ரியாஸ் கே அஹ்மத்
தயாரிப்பு : ஈராஸ் பிலிம் இண்டர்நேஷ்னல்

கதைக்களம்…

ஒன்லைன்… ரஜினி-கமல் ரசிகர்கள் மோதலும், அதனை சுற்றியுள்ள அரசியலும்தான் கதைக்களம்.

ரஜினி ரசிகர் நட்ராஜ் மற்றும் கமல் ரசிகர் ராஜாஜிக்கு கட் அவுட், போர்டு வரைவதுதான் தொழில். ராஜாஜியின் தங்கை சஞ்சிதா.

சில நேரங்களில் ரஜினி-கமல் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால், கட் அவுட் வைப்பதில் ரசிகர்களிடையே மோதல் வலுக்கிறது.

இதனால் ரசிகர்களுக் பெரும் கட்டுபாடுகளை வைக்கின்றனர். இதில் அரசியல்வாதியும் தியேட்டர் உரிமையாளருமான ராதாரவியும் தலையிடுகிறார்.

இந்நிலையில் தேர்தல் அறிவிப்பு வர, ரசிகர்களுக்கும் அரசியல்வாதிக்கும் மோதல் வலுக்க, அதன்பின் நடக்கும் போராட்டமே இதன் கதை.

கேரக்டர்கள்…

நட்ராஜ்… இவர் உண்மையிலேயே ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால், ரஜினியின் மேனசரிங்களை பிரதிபலிக்கிறார்.

சிகரெட் அடிப்பது முதல் ஆளை அடிப்பது முதல், ரஜினி ஸ்டைலே கண்முன் தெரிகிறது. காதல் காட்சியிலும் அசால்ட்டாக அசத்தியிருக்கிறார்.

கமல் ரசிகராக ராஜாஜி. அமைதியாக இருந்து கவர்கிறார்.

சஞ்சிதா ஷெட்டி மற்றும் பார்வதி நாயர் நல்ல தேர்வு. கிராமத்துக்கு ஏற்ற போல கூந்தல் முதல் ஆடை வரை அழகுதான்.

ராதாரவி மற்றும் விஜய்முருகன் இருவரும் வில்லன்தனத்திலும் கிராமத்து மனிதர்களை நினைவுப்படுத்துகின்றனர்.

நட்ராஜ் நண்பராக வருபவர் ரசிகர் மன்ற கூட்டத்தில் கலகலக்க வைக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

நட்ராஜ் சங்கரன் இசையில் இமான் பாடிய உன்ன பாத்தேன் ராசாத்தி பாடல் அருமையான மெலோடி. மற்ற பாடல்கள் ஓகே ரகம்.

எம்சி கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில் 1980 ஆண்டுகளில் உள்ள கிராமத்து அழகை கண்முன் விருந்து படைத்திருக்கிறார்.

கலை இயக்குனர் ஆறுச்சாமி கைவண்ணத்தில் திருநெல்வேலி கிராமமும், ரசிகர்கள் உடை, அன்று பிரபலமான பொருட்கள் என அனைத்தையும் நிறைவாக கொடுத்துள்ளார்.

இயக்கம் பற்றிய அலசல்…

ரசிகர்கள் கட்அவுட் வைப்பது, அதனைச்சுற்றி நடக்கும் அரசியலை உள்ளிட்டவைகளை ரசிக்கும்படி ராமு செல்லப்பா தந்திருக்கிறார்.

இன்று பேஸ்புக்கில் மோதிக்கொள்ளும் ரசிகர்களுக்கு அன்றே தமிழகத்தில் ரஜினி-கமல் அமைத்துள்ள பலம் பற்றி தெரிய வரும்.

எங்கிட்ட மோதாதே… எதிரிக்கு எச்சரிக்கை

வைகை எக்ஸ்பிரஸ் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஆர் கே, நீது சந்திரா, இனியா, நாசர், ஜான்விஜய், ஆர் கே செல்வமணி, ரமேஷ் கண்ணா, எம்எஸ் பாஸ்கர், அர்ச்சனா, கோமல்ஷர்மா, சிங்கமுத்து, மனோபாலா, மதன்பாபு மற்றும் பலர்.
இயக்கம் : ஷாஜி கைலாஷ்
இசை : தமன்
ஒளிப்பதிவாளர் : சஞ்சீவ் சங்கர்
எடிட்டர்: பிரபாகர்
பி.ஆர்.ஓ.: அ ஜான்
தயாரிப்பு : மக்கள் பாசறை (ஆர் கே)

கதைக்களம்…

ஒன்லைன்… ரயிலில் நடக்கும் க்ரைம் த்ரில்லர்.

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு கம்பார்ட்மெண்டில் தீவிரவாதி, ஒரு நடிகை குடும்பம், ஜர்ணலிஸ்ட், நீது சந்திரா, நாலு டாக்டர் ப்ரெண்ட்ஸ், ஒரு பைத்தியக்காரன் குடும்பம், ஒரு பணக்கார பெண், டிடிஆர் உள்ளிட்டவர்கள் பயணம் செய்கிறார்கள்.

அதில் பயணம் செய்யும் 3 பெண்கள் கொல்லப்படுகிறார்கள். கொல்லப்பட்டவர்கள் யார்? அவர்களை கொன்றவர் யார்?

அதனை ஐபிஎஸ் அதிகாரி ஆர். கே. எப்படி கண்டு பிடிக்கிறார்? என்பதே மீதிக்கதை.

கதாபாத்திரங்கள்…

ஆர்கேவின் அறிமுகமே அசத்தல்தான். படம் முழுவதும் ஆர்கே-வே ஆட்சி செய்கிறார்.

படத்தின் முதல் காட்சியில் தொடங்கிய அதே எனர்ஜியை க்ளைமாக்ஸ் வரை கொடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவுக்கு ஒரு ஃபிட்டான போலீஸ் கிடைத்திருக்கிறார். ஆனால் ஒரு சில காட்சிகளிலாவது சிரித்து இருக்கலாம் ஆர்.கே. சார்.

இரண்டு கேரக்டர்களிலும் நீத்து சந்திரா ஸ்கோர் செய்கிறார். இனியாவுக்கு இன்னும் காட்சிகளை கொடுத்திருக்கலாம்.

நாசர், ஜான்விஜய், ஆர் கே செல்வமணி, ரமேஷ் கண்ணா, எம்எஸ் பாஸ்கர், அர்ச்சனா, கோமல்ஷர்மா, சிங்கமுத்து, மனோபாலா, மதன்பாபு, மலையாள கேரக்டரில் வரும் அனுப் ஆகியோரின் கேரக்டர்களில் கூடுதல் பலம் சேர்த்திருக்கலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

தமனின் பின்னணி இசை தாறுமாறு. சில இடங்களில் ரீப்பிட்டு செய்யாமல் புதுமையாக ட்ரை செய்திருக்கலாம்.

சஞ்சீவ் சங்கர் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. கனல் கண்ணன் பைட்டில் அனல் தெறிக்கிறது. எடிட்டர் கொஞ்சம் கத்திரி போட்டு இருக்கலாம்.

இயக்குனர் பற்றிய அலசல்…

பெரும்பாலும் இதுபோன்ற கதைகளில் 3 கொலைக்கும் ஏதாவது ஒரு கனெக்ஷன் இருக்கும். உடனே ஹீரோ கண்டுபிடித்துவிடுவார்.

ஆனால் இதில், எந்தவித கனெக்ஷன் இல்லை என்பதால், 3 கொலையாளிகள் யார்? என்று சொல்வதில் சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் டைரக்டர்.

இதுபோன்ற கம்பீரமான ஹீரோக்கள் நல்லது செய்தால், அவரை ஹீரோயின் காதலிப்பார். ஒரு டூயட் இருந்திருக்கும். ஆனால் அதுபோன்ற எந்தவிதமான காட்சிகளையும் வைக்காமல் நகர்த்தியிருப்பது இயக்குனர் சமார்த்தியம்.

ஒரு இண்டர்நேஷ்னல் தீவிரவாதியை எப்படி கண்டுபிடிக்கிறார்? அவரை பிடிக்க ஒருவரே செல்வது கொஞ்சம் ஓவர்தான்.

இறுதியாக அந்த தீவிரவாதியை எதற்காக டிரெயினுக்கு கொண்டு வந்து கொல்கிறார் ஆர். கே. என்பதில் தெளிவில்லை.

அர்ச்சனாவுக்கு மறைந்த நடிகை கல்பனா வாய்ஸ் பொருந்தவில்லை. சில வசனங்களை பார்க்கும்போது டப்பிங் படத்தை பார்ப்பது போன்ற உணர்வு வருகிறது.

க்ளைமாக்ஸில் நீத்து சந்திரா கேரக்டருக்கு வைத்த ட்விஸ்ட் செம.

வைகை எக்ஸ்பிரஸ்… ஆர்.கே.வின் த்ரில்லர் எக்ஸ்பிரஸ்

கடுகு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ராஜகுமாரன், பரத், சுபிக்ஷா, பரத் சீனி, ராதிகா பிரசிதா, ஏ. வெங்கடேஷ் மற்றும் பலர்.
இயக்கம் : விஜய் மில்டன்
இசை : எஸ்.என்.அருணகிரி, அனூப் சீலின்
ஒளிப்பதிவாளர் : ஆனந்த் ஜீவா.
எடிட்டர்: சதீஷ் சூர்யா
பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா – ஜான்சன்
தயாரிப்பு : பாரத் சீனியின் ‘ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ்’

கதைக்களம்…

இந்த சமுதாயத்தில் மற்றவர் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பதை விட நாம் நம்மை எப்படி பார்க்கிறோம்? என்பது இதன் ஒன்லைன்.

தரங்கம்பாடி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்க்கு உதவியாளராக இருப்பவர் ராஜகுமாரன்.

ராஜகுமாரனுக்கு ஜோடி ராதிகா பிரஷித்தா.

தரங்கம்பாடி ஊரின் கவுன்சிலர் பரத் ஒரு பாக்ஸர். இவருக்கு ஜோடி சுபிக்ஷா.

ஒருமுறை இவர்களின் ஊருக்கு மினிஸ்டர் வரும்போது ஒரு பள்ளி மாணவியை மானப்பங்கம் செய்ய முயற்சிக்கிறார்.

இதனையறிந்த பரத், ராஜகுமாரன், ராதிகா பிரசித்தா, வெங்கடேஷ் என்ன செய்தார்கள்?

அந்த சிறுமிக்கு நியாயம் கிடைத்ததா? என்பதை உணர்வுபூர்வமாக படமாக்கியிருக்கிறார் விஜய்மில்டன்.

கதாபாத்திரங்கள்…

இதுவரை ஏற்காத கேரக்டரில் பரத். ஒரு அநியாயம் நடந்தால், எல்லா ஹீரோக்கள் என்ன செய்வார்களோ? அதற்கு எதிராக செய்து, அவரின் கேரக்டரை வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார்.

பாக்ஸர் கேரக்டருக்கு செம பிட்டாக பொருந்தி இருக்கிறார் பரத்.

காதல் காட்சிகளிலும், ஊர் மக்களை அனுசரித்து செல்லும் காட்சிகளிலும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்.

இதுநாள் வரை இயக்குனராக கவர்ந்த ராஜகுமாரன் இதில் நடிகராக ஜொலிக்கிறார்.

சிறுமிக்காக உருதுவதும், புலி ஆட்டம் ஆடுவதும், பேஸ்புக்கில் லவ் செய்வதும் என பல காட்சிகளில் கைதட்டல்களை அள்ளி செல்கிறார்.

க்ளைமாக்ஸ் பைட் துள்ளல் என்றால், அவர் பேசும் வசனங்கள் மனதை கிள்ளும்.

சுபிக்ஷாவுக்கு பெரிதாக வேலையில்லை என்றாலும், அழகாக வந்து போகிறார்.

ராதிகா பிரஷித்தா இயல்பான பெண்ணாக வந்து மனதில் நிறைகிறார்.

அனிருத் பெயரில் வரும் பரத் சீனி சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறார். அதுபோல் சக்தி, தயா வெங்கட். போலீஸ் ஏட்டு உள்ளிட்டவர்களும் நிறைவான தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் விஜய்மில்டன் என்பதால் தனக்கான காட்சிகளை அழகாக படம்பிடித்திருக்கிறார்.

பொதுவாக தரங்கம்பாடி பகுதி சுத்தமாக இருப்பதில்லை. ஆனால் இவரின் கேமரா கண்களில் தரங்கம்பாடி கடற்கரை தங்கமாய் மின்னுகிறது.

மதன்கார்க்கி வரிகளில், அருணகிரி இசையில் உருவான நிலவெது கரையெது பாடல் நிச்சயம் அனைவரையும் கவரும்.

இயக்குனர் பற்றிய அலசல்…

நாம் சாலையில் செல்லும்போது ஆடம்பரமாக செல்பவரை காண்போம். அதுபோல் மிகவும் எளிமையாக இருப்பவரும் நம் கவனத்தை நிச்சயம் கவருவார்.

அதுபோல இரண்டு கேரக்டர்களை இயக்குனர் கையாண்ட விதம் மிக அருமை.

பாலியல் கொடுமை நடந்தால்தான் குற்றம் என்பதில்லை. அது நடக்க முற்பட்டாலே குழந்தைகளுக்கு எப்படியான பாதிப்பை சந்திக்கிறார்கள் என்பதை அடித்துச் சொல்லியிருக்கிறார் விஜய்மில்டன்.

இந்த படத்தை வாங்கி வெளியிடும் சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்

கடுகு… கடலளவு மனசு

More Articles
Follows