றெக்க இயக்குனரின் அடுத்த பட ஹீரோ.. விஷால்? ஜெயம் ரவியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வா டீல் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த றெக்க படத்தை இயக்கினார் ரத்தினசிவா.

இப்படத்தின் ட்ரைலருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தனது அடுத்த படத்தை இயக்க ரெடியாகிவிட்டார் ரத்தினசிவா.

இப்படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார்.

இதன் சூட்டிங்கை ஜனவரியில் தொடங்கவுள்ளனர்.

இதில் விஷால் அல்லது ஜெயம் ரவி நாயகனாக நடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘பைரவா’ அப்டேட்ஸ்: ‘கத்தி’யுடன் கனெக்ஷன் ஆகிறதா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதன் சூட்டிங் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

சென்னை அருகேயுள்ள பின்னி மில்லில் கோயில் மற்றும் கோபுரம் போன்ற பிரம்மாண்ட அரங்குகளை அமைத்து, ஒரு பாடல் காட்சியை இன்று படமாக்கவிருக்கிறார்கள்.

கோயில் திருவிழா பின்னணியில் படமாக்கப்படும் இப்பாடலில் விஜய்- கீர்த்தியுடன் பல்வேறு நடன கலைஞர்களும் பங்கு பெறுகிறார்கள்.

மேலும் இப்படத்தில் உள்ள சண்டைக் காட்சி கத்தி படத்தில் பிரபலமான காயின் சண்டை போன்று இடம்பெறுவதாக தகவல்கள் வந்துள்ளன.

இன்னும் சில தினங்களில் படக்குழுவினர் வெளிநாடு பறந்து ஒரு பாடலை படமாக்கவிருக்கிறார்களாம்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

செல்வராகவனை பெருமைப்பட வைத்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் அண்ணன் செல்வராகவன் இருவரும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களாக உள்ளனர்.

ஆனால் இவர்களின் வழியில் வந்த தனுஷோ இதுநாள் வரை நடிப்பு, பாடல் ஆசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பு என இருந்தார்.

தற்போது பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக மாறி விட்டார்.

ராஜ்கிரண் நடித்துவரும் இதன் படப்பிடிப்பை படுவேகமாக படமாக்கி வருகிறாராம் தனுஷ்.

இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை செல்வராகவன் பார்த்து இருக்கிறார்.

“எல்லாம் கலந்து, காமெடியாகவும் மிகவும் உணர்வுபூர்வமாகவும் படம் உள்ளது. தனுஷ் உன்னை நினைத்து பெருமைப் படுகிறேன்.

ராஜ்கிரண் சார் சூப்பர் பெர்மான்ஸ்” என தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘கெஸ்ட் ரோல் இருக்கு குமாரு…’ ஜிவி. பிரகாஷுடன் ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ராஜேஷ் இயக்கிய எல்லாப் படங்களிலும் கெஸ்ட் ரோலில் ஒரு ஹீரோ வருவார்.

சிவா மனசுல சக்தி தொடங்கிய முதல் இது தொடர்ந்து வருகிறது.

ஜிவி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கடவுள் இருக்கான் குமாரு என்ற படத்திலும் இந்த கெஸ்ட் ரோல் ஸ்டோரி தொடர்கிறது.

இந்த ரோலில் ஜீவா நடிக்கிறார்.

இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் டி. சிவா

ஷங்கர் இயக்கும் ரஜினியின் ‘2.ஓ’ பர்ஸ்ட் லுக் இதுதானா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்திரன் படத்தின் மாபெரும் சரித்திர வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் ஷங்கர்.

இதில் ரஜினிகாந்துடன் அக்சய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

ரூ. 350 கோடியில் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்திற்கு பல கெடுபிடிகள் இருந்தாலும் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசைன் ஒன்று வெளியாகியுள்ளது.

இதனை பலரும் இணையங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் இதனை பார்க்கும்போது யாரோ சில விஷமிகள் செய்துள்ளதாக தெரிகிறது.

அதற்கான காரணங்கள் இவைதான்…

  • பொதுவாக ரஜினி மற்றும் ஷங்கர் பெயர்கள் டைட்டிலுக்கு மேலே வரும் இது கீழே உள்ளது.
  • இவையில்லாமல் ஷங்கரின் பெயர் எல்லாவற்றிற்கும் கடைசியாக உள்ளது.
  • ஆஸ்கர் விருது பெற்ற ஏஆர் ரஹ்மானின் பெயர் 2வது வரியில் உள்ளது.
  • மேலும் டயலாக் ரைட்டர் மற்றும் ரசூல் பூக்குட்டி போன்ற சொற்களில் எழுத்துப்பிழை உள்ளது.

இதனால் நிச்சயமாக இது 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக்காக இருக்க வாய்ப்பில்லை.

அட..செய்யுற தப்பா சரியா பண்ணியிருக்க வேண்டாமா?

ரஜினியை தொடர்ந்து தனுஷை இயக்கும் சௌந்தர்யா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைப்புலி தாணு தயாரிப்பில் சௌந்தர்யா ரஜினி புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் என்பதை முன்பே பார்த்தோம்.

இப்படத்திற்கு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்? என பெயரிடப்படலாம் எனவும் தகவல்கள் வந்தன.

இப்படத்தில் நடிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையில், மோகன்லால் மகன் பிரணவ்வை நடிக்க நாடியிருக்கிறார்களாம்.

அவர் மறுக்கவே பின்னர் நாகார்ஜூனா அமலா தம்பதியரின் மகனான அகிலை நாட முற்பட்டார்களாம்.

ஆனால் இக்கேரக்டரில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரஜினியே சொன்னதாக செய்திகள் வந்துள்ளன.

இதற்கு டபுள் ஒ.கே சொல்லி விட்டாராம் தனுஷ்.

எனவே, ‘கபாலி’ படத்தின் 100வது நாளில் செளந்தர்யா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் தகவலை தாணு அறிவிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ரஜினி நடித்த கோச்சடையான் படத்தை தொடர்ந்து சௌந்தர்யா இயக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows