ரெமோ-றெக்க-தேவி படங்கள்; 1 வாரம் – மொத்த வசூல் எவ்வளவு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஆயுதபூஜை விருந்தாக, சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, விஜய்சேதுபதி நடித்த றெக்க மற்றும் பிரபுதேவா நடித்த தேவி ஆகிய 3 படங்கள் ரிலீஸ் ஆனது.

இந்த 3 படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

மேலும் இவை மூன்றும் ஓரளவு பாசிட்டிவ்வான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

தற்போது 7 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இவை மூன்றின் வசூல் நிலவரங்கள் தெரியவந்துள்ளது.

ரெமோ படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.31.8 கோடியை வசூல் செய்துள்ளது.

அதாவது சென்னையில் ரூ. 3.35 கோடியும், செங்கல்பட்டில் ரூ. 8.4 கோடியும், கோவையில் ரூ5.5 கோடியும் வசூல் செய்துள்ளதாம்.

இந்த ஆறு நாட்களில், விஜய்சேதுபதியின் ‘றெக்க’ ரூ.9 கோடியும், பிரபுதேவாவின் ‘தேவி’ ரூ.8 கோடியும் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வித்தியாசமான டிசைனில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் முதல் படமாக சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படம் வெளியானது.

இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள இரண்டு படங்களையும், நிவின்பாலி நடிக்கவுள்ள ஒரு படத்தையும் தயாரிக்கிறது.

எஸ்.கே. (சிவகார்த்திகேயன்) நடிக்கவுள்ள ஒரு படத்தை மோகன்ராஜாவும், மற்றொரு படத்தை பொன்ராமும் இயக்கவுள்ளனர்.

இந்நிலையில் மோகன் ராஜா இயக்கவுள்ள படத்தின் சூட்டிங் பற்றிய தகவலை வித்தியாசமாக சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தின் சூட்டிங்கை வருகிற 11-11-2016 தேதி தொடங்க உள்ளனர்.

இந்த டிசைனில் இப்படத்தில் பணியாற்ற உள்ள சிவகார்த்திகேயன், மோகன்ராஜா, அனிருத், நயன்தாரா, ஸ்நேகா, பஹத்பாசில், ரோகினி, பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, சதீஷ், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன.

 

மெகா ஸ்டாருக்கே சூப்பர் ஸ்டார் சப்போர்ட் தேவைதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்தியளவில் பெரும் செல்வாக்கு உள்ளது.

எனவே பிரபல நடிகர்களும் ரஜினி டயலாக்குகளை அல்லது காட்சிகளை தங்கள் படத்தில் வைத்து விடுகின்றனர்.

இதில் மலையாள திரையுலகின் மெகா ஸ்டாரான மம்மூட்டி அவரது 3 படங்களில் ரஜினி தொடர்பான காட்சிகளை வைத்துள்ளார்.

‘புதிய நியமம்’ என்ற படத்தில் நயன்தாராவை கண்டிக்கும்போது ‘நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’ என்று பன்ச் பேசுவார்.

அண்மையில் வெளியான ‘கசாபா’ படத்திலும் ரஜினி பட போஸ்டர்களை சில காட்சிகளில் காண்பித்திருப்பார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வெளியான ‘தோப்பில் ஜோப்பன்’ படத்திலும் ஒரு காட்சி வைத்துள்ளார்.

அதில் ஒரு காட்சியில், போலீஸிடம்… “சாரே.. எல்லாரையும் அடிச்சுட்டு என் பிரண்டை கூட்டிட்டு போறதுக்கு நான் ஒன்னும் ரஜினி இல்லையே… நான் சாதாரண ஆள்தான்” என்று பேசியபடியே செல்வார்.

அட.. மெகா ஸ்டாருக்கே நம்ம சூப்பர் ஸ்டார் சப்போர்ட் வேனும் போலவே…

‘ரெமோ’ பார்முலாவை தலைவர்-தல-தளபதி கடைப்பிடிப்பார்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெமோ படத்தை கோவை உள்ளிட்ட பகுதிகளில் பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியன் வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது…

‘என்னுடைய சக்தி பிலிம்ஸ் சார்பாக 600க்கும் மேற்பட்ட படங்களை வாங்கி ரிலீஸ் செய்து இருக்கிறேன்.

ரஜினி நடித்த ‘சிவாஜி’ படத்துக்கு பிறகு படங்களை வெளியிடவில்லை.

என்னுடைய 35 வருட சினிமா வாழ்க்கையில் ஒரு தயாரிப்பாளர் என்னை போன்ற விநியோகஸ்தர்களை தேடி வந்தது இல்லை.

ஆனால் ‘ரெமோ’ தயாரிப்பாளர் ராஜா தேடிவந்து படத்தை வெளியிட வேண்டிக் கொண்டார்.

அதன்படி ‘ரெமோ’வை வாங்கி ரிலீஸ் செய்தேன்.

இப்படத்தை மினிமம் கியாரன்டிக்கு வாங்கி இருந்தாலும், திரையரங்க விகிதாச்சார அடிப்படையில்தான் ‘ரெமோ’வை வெளியிட்டேன்.

தமிழகம் முழுக்க இப்படத்தை ரூ. 30 கோடி ரூபாய்க்கு ‘ரெமோ’ படத்தை வியாபாரம் செய்து இருக்கிறார்கள்.

இதன் மூலம் நிச்சயமாக விநியோகஸ்தர்களுக்கு 10 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என நம்புகிறேன்.

விடுமுறை நாட்களில் 100 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்பட்டது. அதன்பின்னர் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் விற்கப்பட்டு வருகிறது. அதாவது 50, 70 ரூபாய்க்கு விற்றனர்.

இதுபோன்ற வியாபார நடைமுறையை ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் கடைபிடிக்க வேண்டும்.

அப்படியிந்தால் நிச்சயம் அனைத்து படங்களும் வியாபார ரீதியாக வெற்றி கிடைக்கும். தியேட்டர்கள் முதல் எல்லாருக்கும் லாபம் கிடைக்கும்.” என்றார்.

கபாலி, தெறி, வேதாளம் ஆகிய படங்களின் டிக்கெட்டுக்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டதாக பல புகார்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

‘ரஜினி-ஷங்கர் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார்கள்’ – ரசூல் பூக்குட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்லம்டாக் மில்லியேனர் என்ற படத்திற்காக ஆஸ்கர் விருதை பெற்றவர் சவுண்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டி.

அண்மையில் வெளியான ரெமோ படத்திற்கும் இவர் சவுண்ட் இன்ஜினியராக பணிபுரிந்தார்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.ஓ படத்திற்கும் பணியாற்றி வருகிறார்.

இதுகுறித்து அவர் வடஇந்திய பத்திரிகை ஒன்றுக்கு அவர் பேட்டியளிக்கையில்…

“2.ஓ படத்தில் ரஜினியுடன் அக்ஷய்குமாரும் இணைந்துள்ளதால் படத்திற்கு இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதற்காக ஷங்கர் மேற்கொண்டு வரும் பிரம்மாண்ட அரங்குகளை பார்த்தேன். ஒவ்வொன்றும் பிரமிக்க வைக்கிறது.

இப்படம் வெளியான பிறகு இந்திய கலைஞர்கள் இப்படத்தை முன்னுதாரணமாக வைத்துக் கொள்ளலாம்.

அடுத்தவருடத்தின் பாதி நாட்களை நான் இப்படத்திற்காக செலவழிக்க உள்ளேன்.

நிச்சயம் இந்த கூட்டணி இந்தியாவை பெருமைப்பட வைக்கும்” என்றார்.

விஜய்க்காக காத்திருக்கும் விஜய்சேதுபதி பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரத்தின சிவா இயக்கத்தில் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்ற படம் றெக்க.

இதில் விஜய்சேதுபதியுடன் லட்சுமி மேனன், சதீஷ், கேஎஸ். ரவிக்குமார், கிஷோர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து இதுபோன்ற ஒரு கமர்ஷியல் ஆக்ஷன் கதையை ஒன்றை எழுதி வருகிறாராம் ரத்தினசிவா.

ஸ்கிரிப்ட் ஒர்க் நிறைவு பெற்றவுடன் விஜய்யை சந்தித்து கதை கூறவிருக்கிறாராம்.

மேலும் நடிகர் ராகவா லாரன்சுக்காக மற்றொரு கதையை தயார் செய்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

More Articles
Follows