தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்த போஸ்டரில் விஷால் போலீஸ் ஜீப்பில் சாய்ந்துக் கொண்டு பீர் பாட்டிலை கையில் வைத்திருப்பார்.
இதுதான் உங்கள் சமூக பொறுப்பா? என கடுமையாக பாமக நிறுவனம் ராமதாஸ் விமர்சித்து இருந்தார்.
தற்போது இந்த கண்டனத்திற்கு விஷால் பதிலடி கொடுத்துள்ளார்.
‘நான் பீர் பாட்டிலை கையில் வைத்திருந்தேனே தவிர குடிப்பதுபோல் செய்யவில்லை. கையில் வைத்திருப்பது குடிப்பதாக ஆகாது.
இந்த படத்தில் நான் போலீசாக நடிக்கிறேன். ஒரு குற்ற விசாரணையில் அந்த பாட்டில் ஒரு தடயமாக கிடைக்கிறது. அதை வைத்து நான் சண்டையிடுவதாக காட்சி அமைந்துள்ளது.
அந்த காட்சியைத்தான் போஸ்டரில் டிசைன் செய்துள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளர்.
வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் விஷாலுடன் ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
Vishal clarifies Ayogya first look Beer bottle issue
