தொடர்ந்து வெற்றிப்படங்களில் இடம்பிடித்து வரும் ராஷி கண்ணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷி கன்னா. அவரது பெயரில் உள்ள ராசி அவரது சினிமா கரியரிலும் தொடர்வது அவரது ரசிகர்களைப் போலவே தயாரிப்பாளர்களையும் மகிழ்வித்து வருகிறது.

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய் சந்தர் இயக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப்படமும் வெற்றிக்கான உத்திரவாதத்தோடு வளர்ந்து வருகிறது. மேலும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக கிராந்தி மாதேவ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். மேலும் வெங்கிமாமா என்ற தெலுங்கிப்படத்தில் வெங்கடேஷ், நாக சைதன்யா ஆகியோருடன் நடித்து வருகிறார். மிருதி இயக்கத்தில் சாய் தரம்தெஜ் உடன் ஒருபடமும் தெலுங்கில் அவரது கைவசம் உள்ளது.
தமிழில் டாப் ஹீரோக்கள் நடிக்க இருக்கும் இரண்டு படங்களிலும் ராஷி கன்னாவே நாயகியாக நடிக்க இருக்கிறார் என்பது கூடுதல் செய்தி. ஒரு நடிகை எல்லாவிதமான கேரக்டர்களையும் உள்வாங்கி நடித்தால் ரசிகன் அந்தப்படத்தோடு சுலபமாக ஒன்றிவிடுவான். ரசிகர்களை தன் கதாபாத்திரத்தோடு ஒன்ற வைப்பதில் திறமை வாய்ந்தவர் நடிகை ராஷி கன்னா. அதனால் தான் திறமையோடு அழகும் சேர்ந்த அவரை சினிமாவும் சினிமா ரசிகர்களும் உயர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.

ரஜினியை அடுத்து சத்யராஜ்-ராணாவை இயக்கும் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி ரஞ்சித், சத்யராஜ் ராணா ரஞ்சித், ராஜராஜ சோழன் பா ரஞ்சித்,

‘அட்டக்கத்தி’ படம் மூலம் தன்னை அடையாளப்படுத்திய இயக்குனர் ரஞ்சித், ரஜினியை வைத்து கபாலி, காலா படங்களை இயக்கி இந்தியளவில் பிரபலமானார்.

தற்போது ஹிந்தி படத்தை இயக்கி வருகிறார். தமிழில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார்.

அண்மையில் மன்னர் ‘ராஜராஜ சோழன்’ குறித்து அவதூறாக பேசி சர்ச்சைகளில் சிக்கினார். இதுதொடர்பாக அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், பா.ரஞ்சித் புதிய படத்தை ஒன்றை இயக்கவுள்ளாராம்.
இதில் ஆர்யா, ராணா மற்றும் சத்யராஜ் ஆகிய மூவரும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

பேட்ட சிங்காரத்திற்கு அடித்த சான்ஸ்..; தமன்னாவுடன் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேட்ட சிங்காரம், பேட்ட வில்லன், ரஜினி வில்லன் நவாசுதீன் சித்திக், தமன்னா அனுராக் காஷ்யப், தமன்னா பாலிவுட்
பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் நவாசுதின் சித்திக்.

இவர் பாலிவுட் திரையுலகில் முக்கியமான நடிகர் ஆவார்.

இந்த நிலையில் ‘போலே சுடியான்’ படத்தில் நவாசுதீன் சித்திக்கு ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

நவாசுதின் சித்திக்கின் சகோதரர் சமாஸ் சித்திக் இப்படத்தை இயக்குகிறார்.

‘இமைக்கா நொடிகள்’ பட வில்லன் அனுராக் காஷ்யப் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

தமன்னா நடிப்பில் அண்மையில் வெளியான கண்ணே கலைமானே, தேவி2 ஆகிய தமிழ்படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை.

ஜூலை 3-ம் தேதி விக்ரம் ரசிகர்களுக்கு கமல்ஹாசனின் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமலின் உதவி இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், அபி நாசர் நடித்துள்ள படம் `கடாரம் கொண்டான்’.

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கமலின் ஆஸ்தான ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டப்பிங் பணியை விக்ரம் முடித்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், வரும் ஜூலை 3-ந் தேதி படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது-

காலம் பேசாது ஆனால் பதில் சொல்லும்.; சூப்பர் ஸ்டாரின் சூப்பர் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல பேச்சாளர் சாலமன் பாப்பையா எழுதிய ‘புறநானூறு புதிய வரிசை வகை’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

ராமாயணம் எழுதியதால்தான் கம்பருக்கு பெருமை. அதே மாதிரி, இந்த நூலை எழுதியதால் சாலமன் பாப்பையா சாருக்கு மிகப் பெரிய புகழ் வந்துசேரும்.

திருச்சி சிவா பேசும்போது, இந்த நூலை எல்லோருக்கும் போய் சேரும்படி செஞ்சிடுங்க. இல்லைனா, ஸ்டாலின் முதல்வரானதும் அதை நாங்க பண்ணிடுவோம்னு சொன்னார்.

அதை கேட்ட பிறகு (அதிமுக அமைச்சர்) மாஃபா. பாண்டியராஜன் சார் பதறிப்போய், இல்லை இல்லை நாங்களே இந்த நூலை எல்லோருக்கும் போய் சேரும்படி செஞ்சிடுறோம்னு சொன்னார்.

ஆக மொத்தம், இந்த நூல் எல்லோருக்கும் போய் சேர்ந்தால் ரொம்ப சந்தோசம். இந்த நூல் எல்லா இளைஞர்களுக்கு போய் சேரணும்.

காலம் பேசாது ஆனால், பதில் சொல்லும்.

கம்பர், ராமாயணம் பத்தி, தமிழ் இலக்கியங்களை பத்தி பேசின பாப்பையா சார் வாய் ரஜினி பத்தியும் பேசியது எனக்கு பெருமை. ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவர் என்னிடம் பேசுவார்.

அவர் நூறாண்டு ஆரோக்கியமாக வாழந்து இந்த நூல் மாதிரி நிறைய பொக்கிஷங்களை மக்களுக்கு கொடுக்கணும்னு வேண்டிக்கிறேன்.” இவ்வாறு ரஜினி பேசினார்.

Rajinikanth speaks at Solomon Pappaiahs Book launch event

ரஜினி-கமல் செட்டாச்சு; சிவகார்த்திகேயனிடம் சிக்காத எம்ஜிஆர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்தின் கோடானு கோடி ரசிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இதை அவரே பலமுறை சொல்லியிருக்கிறார்.

எனவே தன் படத்திற்கு ரஜினிமுருகன், வேலைக்காரன் என்ற ரஜினி படத்தலைப்புகளை வைத்தார்.

அதுபோல் கமல் நடிப்பில் வெளியான காக்கி சட்டை என்ற படத்தலைப்பிலும் நடித்தார்.

இதனிடையே பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்துக்கு, ‘எங்க வீட்டு பிள்ளை’ என்ற எம்.ஜி.ஆர். படத்தலைப்பு வைக்கப்பட உள்ளதாக சொல்லப்பட்டது.

இதனையடுத்து எங்க வீட்டு பிள்ளை’ என்ற எம்.ஜி.ஆர். பட தலைப்பை பயன்படுத்த யாருக்கும் உரிமை கொடுக்கவில்லை என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடெக்சன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எனவே எம்ஜிஆர் படத்தலைப்பு கிடைக்காத வருத்தத்தில் இருக்கிறதாம் படக்குழு.

No MGR movie title for Sivakarthikeyans movie

More Articles
Follows