சிவகார்த்திகேயன் ரசிகராக மாறிய விஜய்சேதுபதி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வளரும் முன்னணி கலைஞர்கள் பட்டியலில் சிவகார்த்திகேயனுக்கும் விஜய்சேதுபதிக்கும் முக்கிய இடம் உண்டு.

இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என கூறிவந்தாலும், இவர்களை போட்டியாளர்களாக கருதியே நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன.

இந்நிலையில் நாங்கள் நல்ல நண்பர்கள்தான் என்பதை தன் படத்தில் உள்ள ஒரு காட்சி மூலம் நிரூபிக்க இருக்கிறாராம் விஜய் சேதுபதி.

இவர் தற்போது நடித்து வரும் றெக்க படத்தின் ஒரு காட்சியில், சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு செல்வது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.

இந்த காட்சி அண்மையில் படமாக்கபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டென்ஷன் ஆன ரஜினி ரசிகர்களை கூல் செய்யும் கபாலி டீம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதி… என்ற இந்த செய்தி இன்று காலை முதல் இணையதளம் மற்றும் ஊடகங்களை அதிர்ச்சி அடைய செய்து வருகிறது.

இதற்கு மறுப்பு தெரிவித்து ரஜினியின் மேலாளர் சுதாகர்… “தலைவர் ரஜினி நலமுடன் இருக்கிறார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினி குடும்பத்தார் மற்றும் ரஜினியின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் ஆகியோரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனால் உலகமெங்கும் உள்ள ரஜினி ரசிகர்கள் தவறான தகவலை வெளியிட்ட இணையதளம் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

அந்த இணையதளம் பற்றி கடுமையாக விமர்சித்து, நடவடிக்கை எடுக்க கூறி புகார் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கபாலி படத்தின் பாடல் டீசர் இன்று இரவு 8 மணியளவில் வெளியாகவுள்ளது.

இன்று இந்த பாடல் டீசர் வெளியாவதால், ஒரு அளவிற்கு ரஜினி ரசிகர்கள் சமாதானம் ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாருக்கும் கிடைச்ச பெருமை தனுஷ்-சிம்புக்கு கிடைக்குமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எம்ஜிஆர்-சிவாஜி… இந்த ஜாம்பவான்களில் வரிசையில் அடுத்தடுத்து தலைமுறை நடிகர்களை ஒப்பிட்டு வருகின்றனர்.

அதன்பின்னர் ரஜினி-கமல் என்று ஆரம்பமானது. இவர்களைத் தொடர்ந்து விஜய்-அஜித், விக்ரம்-சூர்யா என தொடர்கிறது.

இவர்கள் அனைவரும் இந்திய சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் தயாரித்த படங்களில் பணியாற்றியுள்ளனர்.

கிட்டதட்ட 80 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் சாதனை படைத்து வரும் இந்நிறுவனத்தில் பணியாற்றியதை இவர்கள் பெருமையாக கருதி வருகின்றனர்.

இவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு அடுத்த தலைமுறை போட்டியளார்களாக கருதப்படும் சிம்பு மற்றும் தனுஷ் ஆகிய இருவருக்கும் இதுவரை கிடைக்கவில்லை.

அந்த பெருமை இவர்களுக்கு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பறந்து செல்ல வா… கபாலி இயக்குனருடன் இணையும் கோபிநாத்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக அருமைச் சந்திரன் தயாரித்துள்ள படம் ‘பறந்து செல்ல வா’.

இப்படத்தில் லுத்ஃபுதீன், ஐஸ்வர்யா ராஜேஷ், சதீஷ், கருணாகரன், ஆர்.ஜே.பாலாஜி, மனோபாலா, பேராசிரியர் ஞானசம்பந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தனபால் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசை ஜோஷ்வா ஶ்ரீதர்.

M.V. ராஜேஷ்குமார் எடிட்டிங் செய்ய, சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் சிங்கப்பூரில் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை வருகிற ஜூன் 18, சிங்கப்பூரில் நடத்தவுள்ளனர்.

சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர், நியமன உறுப்பினர் கணேஷ் ராஜாராம், முன்னாள் உறுப்பினர் இரா. தினகரன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் நீயா நானா கோபிநாத் இருவரும் கலந்து கொள்கின்றனர்.

ரஜினி பற்றி தவறான செய்தியை வெளியிட்ட இணையதளம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு தன் குடும்பத்தாருடன் அமெரிக்கா சென்ற அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது.

ஆனால் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் 2.0 படத்தின் மேக்கப் டெஸ்ட்டுக்காக அங்கு இருக்கிறார் என்ற செய்திகள் உறுதியானது.

இந்நிலையில் இன்று ஒரு இணையதளத்தில் (ஒளி பெயரைக் கொண்ட இணையத்தளம்) இவரது உடல் நிலை குறித்து மோசமான செய்தியை வெளியிட்டுள்ளது.

இச்செய்தி வெளியான சில நிமிடங்களில், சமூக வலைத்தளம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றி கொண்டது.

இதனை உறுதிப்படுத்த ரஜினி தரப்பில் கேட்ட போது… “ரஜினிகாந்த் உடல் நலத்துடன் நலமாக இருக்கிறார்.

அந்த இணையத்தளம் தவறான செய்தியை வெளிட்டுள்ளது. எந்த வதந்திகளையும் யாரும் நம்ப வேண்டாம்” என தெரிவித்தனர்.

பிட்டு படம் எடுத்திருக்கியா என வீட்டில் கேட்டார்கள்..? ‘மெட்ரோ’ இயக்குனர் ஆதங்கம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விதார்த்த் நடித்த ஆள் என்ற படத்தை இயக்கியவர் ஆனந்த் கிருஷ்ணன்.

இவர் தற்போது பாபி சிம்ஹா முக்கிய கேரக்டரில் நடித்துள்ள மெட்ரோ படத்தை இயக்கியுள்ளார்.

இதில் நாயகனாக ஸ்ரீரிஷ் நடிக்க, மாயா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சென்ட்ராயனும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் பேசியதாவது….

மெட்ரோ சிட்டியில் நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் மையக்கரு. சென்சாரில் இப்படத்திற்கு அதிகபட்சமாக ஏ சர்ட்டிபிகேட் கிடைக்கும் என நினைத்தேன்.

ஆனால் இப்படத்தை வெளியிடவே கூடாது என கூறிவிட்டார்கள்.

கிட்டதட்ட இரண்டு மாத போராட்டதிற்கு பிறகு படத்தை பார்த்த கங்கை அமரன் ஏ சான்றிதழுடன் வெளியிடலாம் என்று சென்சாரில் பேசி அனுமதி பெற்று தந்தார்.

ஏ சான்றிதழ் படம் என்றால் எல்லாரும் பிட்டு படமா? என கேட்கிறார்கள். என் வீட்டிலும் கேட்கிறார்கள்.

வன்முறை நிறைந்த படங்களுக்கும் ஏ சான்றிதழ்தான் கொடுப்பார்கள் என்பதே பலருக்கு தெரியாமல் போய்விடுகிறது.

அதுமாதிரியான தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள். மக்களுக்கு போதுமான விழிப்புணர்வை சென்சார் ஏற்படுத்த வேண்டும்”

என்று பேசினார் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன்.

More Articles
Follows