4 நாயகிகள் இருந்தும் அம்ரிதாவுடன் மட்டும் நெருக்கம் காட்டும் விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி தயாரித்து நடித்துள்ள படம் காளி.

பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த வாரம் மே 18ஆம் தேதி ரிலீஸ் செய்கின்றனர்.

கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

இதில் அம்ரிதாவுடன் மட்டும் நெருக்கமாக நடித்துள்ளார் விஜய் ஆண்டனி.

அது ஏன் என்பது பற்றி அவரே கூறியதாவது…

நான் எல்லா படத்திலும் ரொம்ப சீரியசாக நடிப்பதாகவும், ஹீரோயின்களை தொடாமல், நெருக்கம் காட்டாமல் நடிப்பதாவும் குறை சொன்னார்கள்.

இன்னொரு பெண்ணை கட்டிப்பிடித்து நடிப்பதில் எனக்கு தயக்கம் இருந்தது.

ஆனால் இப்போது அதை மாற்றி, கொஞ்சம் ரொமான்ஸ் செய்துள்ளேன்.

அம்ரிதாவுடன் நெருக்கமாக நடித்திருக்கிறேன். சீரியசாக நடிக்கிறேன் என்கிற இமேஜையும் இந்தப் படம் மாற்றும்” என்றார்.

அதுபோல் அம்ரிதா பேசும்போது… விஜய் ஆண்டனி ரொம்ப அமைதி. அதிகமாக பேச மாட்டார்.

ஒரு பாடல் காட்சியில் நாங்கள் இருவரும் நெருக்கமாக நடிக்க வேண்டும் என நடன இயக்குனர் சொன்னார். எனவே அப்படி நடித்துள்ளோம்.” என்றார்.

தனது அடுத்த படத்தலைப்பையும் நெகட்டிவ்வாக வைத்த விஜய்ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படம் தயாரித்தால் அந்த தயாரிப்பாளருக்கு எல்லாம் பாசிட்டிவ்வாக அமைய வேண்டும்.

எனவே படத்தின் தலைப்பையும் பாசிட்டிவ்வாகவே வைப்பார்கள்.

தமிழ் சினிமாவின் இந்த சென்டிமெண்ட்டை உடைத்தெறிந்தவர் விஜய் ஆண்டனி.

தான் தயாரித்து நடிக்கும் படங்களுக்கு நெகட்டிவ் டைட்டில்களை வைப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளார் இவர்.

பிச்சைக்காரன், சைத்தான், எமன், ஆகிய தலைப்புகளை வைத்து அனைத்தையும் வெற்றிப் படங்களாக கொடுத்தார்.

அண்ணாதுரை என்ற படத்தலைப்பில் ஒரு படம் நடித்தார். ஆனால் அது வெற்றிப் பெறவில்லை என்பதால் தற்போது மீண்டும் நெகட்டிவ் தலைப்புக்கே மாறியுள்ளார்.

இவர் நடித்துள்ள காளி படம் இந்த வாரம் மே 18ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் தனது அடுத்த படத்திற்கு கொலைகாரன் என தலைப்பு வைத்திருப்பதாக அறிவித்தார்.

அதுபோல் மற்றொரு படத்திற்கு திமிரு புடிச்சவன் என்று தலைப்பிட்டு நடித்து வருகிறார். இதில் நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடித்து வருகிறார்.

ஒரே கல்லில் 3 மாங்காய்..? சூர்யா-37 படத்தின் பக்கா ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தன் 37வது படத்தை லைக்கா நிறுவனத்திற்காக ஒதுக்கியுள்ளார்.

இப்படத்தை கே.வி. ஆனந்த் இயக்கவுள்ளார்.

அயன், மாற்றான் ஆகிய படங்களை தொடர்ந்து 3வது முறையாக சூர்யா கே.வி. ஆனந்த் கூட்டணி இந்த படத்திற்காக இணைகிறது.

இப்படத்தின் முக்கிய கேரக்டரில் மோகன்லால் நடிக்கிறார். மற்றொரு கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் நடிக்கிறார்.

இவர் ஏற்கெனவே கௌரவம் என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் சூர்யாவுக்கு ஏற்கெனவே தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல மார்கெட் உள்ளது.

இப்படத்தில் மோகன்லால் இணைந்துள்ளதன் மூலம் மலையாளத்திலும் சூர்யா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

ஆக ஒரே கல்லில் 3 மாங்காய் அடிக்க திட்டமிட்டுள்ளார் சூர்யா.

Suriya 37th movie mega plan in Tamil Telugu and Malayalam languages

அதிரடி அறிவிப்புகளுடன் புதிய கட்சித் தொடங்கும் பிக்பாஸ் ஜுலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக் கொண்ட ஜுலியை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தது விஜய் டிவி.

அதன்பின்னர் தமிழகம் முழுவதும் பிரபலமான இவர் தற்போது சினிமாவிலும் நடிக்கத் தொடங்கி விட்டார்.

இந்நிலையில் திடீரென்று சமூக வலைதளங்களில் ஜுலி வெளியிட்டுள்ள வீடியோவில் தான் விவசாயிகள் பிரச்சினை, நீட் தேர்வு பற்றியெல்லாம் சொல்லிவிட்டு தான் விரைவில் ஒன்றை தொடங்க இருப்பதாக சொல்லி முடிக்கிறார்.

இன்னொரு பக்கம் ஒரு புதிய படத்தில் அவர் அரசியல்வாதியாக நடிக்கிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Bigg Boss fame Julie going to start new political party

மோகன்லால்-சூர்யா கூட்டணியில் பிரபல தெலுங்கு நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன் படத்தை முடித்துவிட்டு கேவி. ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார் சூர்யா.

இப்படத்தை லைக்கா நிறுவனம் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கிறது..

சில தினங்களுக்கு முன் இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் தற்போது மற்றொரு கேரக்டரில் அல்லு சிரிஷ் என்ற பிரபல தெலுங்கு நடிக்கவுள்ளாராம்.

இத்தகவலை இயக்குனர் கே.வி. ஆனந்த தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

Actor Allu Sirish teams up with Mohanlal in Suriya 37

அன்னைக்கு கட்டிய கோயிலின் முதலாம் ஆண்டு விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராகவா லாரன்ஸ் தனது தாய்க்கு ஒரு கோயிலை கட்டி அதை சென்ற ஆண்டு இதே அன்னையர் தினத்தன்று திறந்து வைத்தார்.

கோயில் திறக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு பெறுவதையொட்டியும் அன்னையர் தினத்தன்று தாய்மார்களை கெளரவப் படுத்தவும் உள்ளார்.

இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு தனது ஆஸ்ரமத்தில் படிக்கும் குழந்தைகள் மத்தியில் பூஜை நடத்தப்படுகிறது.

அம்பத்தூர் அருகில் உள்ள திருமுல்லைவாயலில் உள்ள அந்த கோயிலில் அன்னையர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு ஏற்பாடுகளை செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ்.

நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டில் அன்னையின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுங்கள்.

அன்னையை வணங்கினால் எந்த துன்பமும் இல்லை.

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

Raghava Lawrence celebrated 1st Anniversary of his mothers temple

More Articles
Follows