தேர்தல் அரசியல் நம்பிக்கையில்லை; நோட்டாவுக்கு 2 முறை ஓட்டு… ரஞ்சித் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா அவர்கள் நோட்டா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் டைரக்டர் ரஞ்சித் கலந்துக் கொண்டு பேசினார். அவர் பேசியதாவது…

இன்றைக்கு சினிமாவில் கதை சொல்வது எவ்வளவு முக்கியமோ, அதே போல் கதைக்குள் அரசியல் இருப்பதும் முக்கியமாகிறது. ஏனெனில் இந்திய சூழலில் தமிழ் சூழலில் இருப்பவர்கள் மட்டும் தான் அரசியல் சார்ந்து சிந்தித்து, செயல்படும் இளைஞர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய இளைஞர்கள். எந்த வித அரசியலை முன்னெடுக்கிறோம் என்பதை விவாதிக்கிறார்கள். ஆனால் எந்த அரசியல் சரியானது என்ற தெளிவு மட்டும் இவில்லை.

தேர்தல் அரசியல் மற்றும் ஓட்டு அரசியலில் எனக்கு பெரிதாக நம்பிக்கையில்லை. ஏனெனில் இந்திய சூழலில் இயந்திர ஓட்டுப்பதிவு என்பது நம்பிக்கைக்குரியதாக இல்லை என்பது என்னுடைய கணிப்பு.

ஒரு செல்போனை ஹேக் செய்து அதிலுள்ள தகவல்களை திருடலாம் என்ற நிலை இருக்கும் போது, எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் நடைபெறும் வாக்கு பதிவு என்பது எவ்வளவு தூரம் உண்மையானதாகவும்,

நம்பிக்கைக்குரியதாகவும் இருக்கும் என்ற சொல்லமுடியாது. அத்துடன் ஒரு அச்சத்தையும் இது கொடுக்கிறது.

இதனால் நோட்டா என்பது முக்கியமான அதிகாரமாக இருக்கிறது. என்னுடைய சொந்த வாழ்க்கையில் கூட இரண்டு முறை நோட்டாவினை பயன்படுத்தியிருக்கிறேன். அதே போல் இந்த படம் பெரிய அளவில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்’என்றார்.

Two times i used NOTA in public election says Director Ranjith

கேரள அரசின் விருதை வென்றது பார்த்திபனின் கேணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனுஹாசன், ரேகா, நாசர், ஜாய் மேத்யூ, பார்வதி நம்பியார், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், சாம்ஸ், ப்ளாக் பாண்டி ஆகியோரின் நடிப்பில் உருவாகிய படம்தான் ‘கேணி’.

இயக்குநர் எம்.ஏ. நிஷாத் இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படத்தில் தண்ணீர் பிரச்னை குறித்து மிகவும் ஆழமான கருத்துக்களோடு இப்படத்தை உருவாகியிருந்தார்.

தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களின் பாராட்டு மழையில் நனைந்த போதிலும், தமிழகத்திற்கு ஆதரவான கருத்துக்கள் இப்படத்தில் நிறைந்திருந்ததால் கேரளத்தில் சில இடங்களில் எதிர்ப்பு நிலவியது.

எல்லோரது பாராட்டுக்களையும் பெற்ற இப்படத்திற்கு, கேரள அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளது. இப்படத்தின் இயக்குநர் எம்.ஏ.நிஷாத்-திற்கு சிறந்த கதை ஆசிரியருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கான நீதியை தனது திரைப்படத்தின் வாயிலாக பேசிய ஒரு இயக்குநருக்கு எதிர்ப்புகளை மீறி கேரள அரசு விருது அறிவித்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இமயமலைக்கு செல்லும் ரஜினி; தான் கட்டிய ஆசிரமத்தை பார்வையிடுகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இதுநாள் வரை சினிமா மற்றும் ஆன்மிகம் என பிஸியாக இருந்தவர் ரஜினிகாந்த்.

ஒரு படத்தில் நடித்தவுடன் இமயமலை பயணம் சென்று அங்குள்ள ஆன்மிக வழிகாட்டிகளை சந்தித்து ஆசி பெற்று வருவார்.

தற்போது அரசியல் களத்திலும் இறங்கிவிட்டார். எனவே 3 களத்திலும் அதிரடியாக பயணிக்க ஆயுத்தமாகிவிட்டார்.

அண்மையில் ஒரு நிகழ்வில் எம்.ஜி.ஆரை போல நல்லாட்சியை கொடுப்பேன் என பேசி தமிழக அரசியலில் பரபரப்ப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் திடீரென ஆன்மிக பயணமாக நாளை (10-ந் தேதி) இமயமலை செல்லவிருக்கிறாராம் ரஜினிகாந்த்.

இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு செல்லும் அவர் அங்கிருந்து தர்மசாலா, உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்.

அங்கு சுமார் 1 வார முதல் 10 நாட்கள் வரை தங்க திட்டமிட்டுள்ளார்.

ரிஷிகேஷில் பாபாஜி ஆசிரமம் ஒன்றை ரஜினிகாந்த் கட்டியிருக்கிறார்.

கடந்த 2017 நவம்பர் மாதம் அதன் திறப்பு விழா நடந்தது.

அப்போது அதில் பங்கேற்காத ரஜினி, தற்போது அந்த ஆசிரமத்திற்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்துடன் 50 நாட்கள்; ஆசையுடன் காத்திருக்கும் ரோபோ சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கவுள்ள விஸ்வாசம் படத்தில் நடிக்கவிருக்கிறார். வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

இவர்களுடன் யோகி பாபு, தம்பி ராமையா ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.

இமான் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், ரோபோ சங்கரும் ஒரு கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

அஜித்துடன் ரோபோ சங்கர் இணைவது இதுதான் முதன்முறையாகும்.

இப்படத்திற்காக நடிப்பதற்காக ரோபோ சங்கர் 50 நாட்கள் ஒதுக்கி கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.

அஜித்துடன் நடிக்க ஆர்வமுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

அப்துல் கலாம் படித்த பள்ளியில் டிராபிக் ராமசாமி டைட்டில் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் தான் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஏரோஸ்பேஸ் இஞ்ஜினியரிங் படித்தார்.

அந்த கல்லூரியில் கடந்த சனிக்கிழமை சுமார் மூவாயிரம் பொறியியல் மாணவர்கள் மத்தியில் ‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டைட்டில் டிசைன் அறிமுக விழா நடந்தது.

அதில் மாணவர்கள் ஹரிஷ், மற்றும் ரேஷ்மா டைட்டிலை வெளியிட்டு மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

அப்துல் கலாம் படித்த எங்கள் கல்லூரியில் டிராஃபிக் ராமசாமி பட டைட்டிலை வெளியிட்டதை மிகுந்த பெருமையாக கருதுவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

படம் பற்றி எஸ்.ஏ சந்திரசேகரன் அவர்கள் கூறும்போது… ‘யாரையும் எதிர்பார்க்காமல் எளியவர்களுக்கு ஆதரவாகவும் அதிகார வர்க்கத்துக்கு எதிராகவும் ஒன் மேன் ஆர்மியாக ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் போராளியின் படத்தை நாட்டு மக்களுக்கு சரியாகக் கொண்டு சேர்க்க தான் இவ்விழாவை மாணவர்கள் மத்தியில் நடத்தினோம் ” என்றார்.

அவ்விழாவில் டிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன், அம்பிகா, லிவிங்ஸ்டன், புலி பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் மற்றும் படத்தின் இயக்குனர் விக்கி அவர்களும் கலந்து கொண்டனர்.

அழுக்கு ஜட்டி அமுதவள்ளி; சினிமா பாடலை அழுக்காக்கும் டைரக்டர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடித்த ஹர ஹர மஹாதேவகி என்ற ஆபாசப் படத்தை எடுத்து பெயர் பெற்றவர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இப்படம் வெற்றிப் பெற்றதால் அடுத்த படத்திற்கு இருட்டு அறையில் முரட்டு குத்து என வித்தியாசமாக பெயரிட்டு அதே நாயகனை வைத்து புதிய படத்தை உருவாக்கிவிட்டார்.

இதில் வைபவி சாண்டில்யா, ராஜேந்திரன், கருணாகரன், ஜாங்கிரி மதுமிதா என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகியுள்ளது. இதில் 3வதாக ஒரு பாடல் அமைந்துள்ளது.

இப்பாடல் அழுக்கு ஜட்டி அமுதவள்ளி… அங்க பாரு பெரிய பல்லி என்று தொடங்குகிறது.

படத்தின் டைட்டில்தான் ஏதோ பிட்டு படம் ரேஞ்சுக்கு இருக்கும் என்று பார்த்தால் படத்தின் பாடலும் இந்த லட்சணத்தில்தான் உள்ளது.

இது இப்படியே போனால் தமிழ் சினிமா பாடல்களை விரும்பி கேட்கும் ரசிகர்கள் மனதையும் அழுக்காக்குமே…?

காலத்தால் அழிக்க முடியாத எத்தனையோ பாடல்கள் தமிழ் சினிமாவை உருவாக்கிறது.

ஆனால் அண்மைக்காலமாக இதுபோன்ற பாடல்கள் தமிழ் சினிமாவில் தலை எடுத்துள்ளது.

இதுபோன்று எந்தவொரு சமூக அக்கறையும் இல்லாத பாடல்களை உருவாக்கும் பாடலாசிரியரையும் இயக்குனரையும் என்ன சொல்வது..?

பாலமுரளி பாலு என்பவர் இசையமைத்துள்ள இப்பாடலை MC விக்கி என்பவர் பாடல் எழுதி பாடியிருக்கிறார்.

ப்ளு கோஸ்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க ஸ்டூடீயோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது.

Azhukku Jatti AmudhaValli from IAMK may be spoil the Tamil Cinema music

More Articles
Follows