தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஜூன் 1ம் தேதி நடைபெற்ற ‘மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இயக்குனர் பார ரஞ்சித்.
அப்போது அவர் பேசும்போது..
“பரியேறும் பெருமாள்’ படம் செய்யும்போது ஒரு தயக்கம் இருந்தது ஒரு பயம் இருந்தது. அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் மாரி செல்வராஜின் கலையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என எண்ணினேன்.
அதில் அம்பேத்கர் படத்தை காட்டினால் மதுரை எரியும் என்றார்கள். ஆனால் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். எங்களின் விருப்பம் சரியாக நிறைவேறியது.
பரியேறும் பெருமாள் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த வெற்றி தான் இன்று ‘மாமன்னன்’ மேடையை மாரிக்கு அமைத்துக் கொடுத்துள்ளது.
நான் வடிவேலுவின் தீவிர ரசிகன். ஆனால் மாமன்னன் படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். மிகவும் சீரியஸ் ஆக இருந்தது.
கொஞ்சம் காட்சிகளை காமெடியாக மாற்ற சொன்னேன். ஆனால் முடியாது. இது சீரியஸ் படம் என மறுத்து விட்டார் மாரி செல்வராஜ்.
மாரிக்கு இந்த மேடை அமைத்துக் கொடுத்த உதயநிதிக்கு நன்றி. இந்த படம் ஒரு முக்கியமான அரசியலை பேசி இருக்கிறது”
இவ்வாறு மனம் திறந்து பேசினார் ரஞ்சித்.
Ranjith appreciates Mari Selvaraj growth at Maamannan audio launch