தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் சந்தோஷம் தந்த தொடரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபுசாலமன் இயக்கும் தொடரி படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்றவுடனே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

அதன்பின்னர் இமான் இசையில் வெளியான பாடல்களால் படத்தின் எதிர்பார்ப்பு வேற லெவலில் சென்றது.

ஆனால் படத்தின் ரிலீஸ் மட்டும் தள்ளிக் கொண்டே போனதால், தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் இழந்தனர்.

இந்நிலையில் சற்று முன்னர் தணிக்கை செய்யப்பட்ட இப்படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

மேலும் படத்தை செப்டம்பர் 22ஆம் தேதி (வியாழக்கிழமை) ரிலீஸ் செய்யவுள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

இதனால் டபுள் சந்தோஷம் அடைந்துள்ளதாக தனுஷ் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

அஜித்-விஜய் ரசிகர்களின் ஒற்றுமையால் அடிவாங்கிய அப்பாவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் தலையாய பிரச்சினைகள் பல இருந்தாலும், தல-தளபதி ரசிகர்களின் மோதல் என்றும் தீராமல் இருந்து வருகிறது.

ஆனால், தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள காவேரி பிரச்சினையில் இந்த இரு தரப்பு ரசிகர்களும் இணைந்து கன்னட நடிகர்களுக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அங்குள்ள நடிகர்களை கிண்டல் செய்து, இணையங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதை கண்ட நம் அப்பாவி தமிழர் ஒருவர் அந்த தகவல்களை தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனால், கன்னடர்கள் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அந்த தாக்குதலை அவர்களே சமூக வலைத்தளத்திலும் அப்லோட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் ‘கொடி’யை உயர பறக்க வைக்கும் பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைத்துறைகளில் பன்முகம் காட்டி வரும் தனுஷ், இதுவரை 30 படங்களில் வரை நடித்துவிட்டாலும், முதன்முறையாக கொடி படத்தில்தான் இருவேடங்களில் நடித்துள்ளார்.

துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் த்ரிஷா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இதில் தனுஷுடன் முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் பிரபல பின்னணி பாடகியான சித்ராவும் இணைந்துள்ளார்.

இவர் பாடியுள்ள பாடலை கவிஞர் விவேக் எழுதியுள்ளார். இது தன் வாழ்வில் பெருமையான விஷயம் என பதிவிட்டுள்ளார் விவேக்.

தீபாவளி ரிலீஸை குறிவைத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

வாழ்த்துவதில் இணைந்த ரஜினி-விஜய்-சூர்யா-தனுஷ்-சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல் மற்றும் வெண்கலம் வென்ற வருண்சிங் ஆகியோருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தற்போது ரஜினிகாந்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரைத்துறை மட்டுமல்லாது எந்த துறையானாலும் சாதனையாளர்களை தேடிச் சென்று வாழ்த்துவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே.

பாராட்டுவதற்கும் நல்ல மனசு வேண்டும் என்பது சரியாகத்தான் இருக்கிறது.

இளைய தளபதிக்கு ஈடு கொடுப்பாரா கீர்த்தி சுரேஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நாயர்களின் முதல் சாய்ஸாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இவர் தற்போது விஜய்யுடன் பைரவா படத்தில் டூயட் பாடி வருகிறார்.

விஜய் படங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விஷயங்களில் முக்கியமானது அவரது நடனம்தான்.

எந்தவிதமான மூவ்மெண்ட்ஸ் என்றாலும் மிக கேஷுவலாக செய்துவிடுவார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இருக்கின்றதாம்.

இதுவரை 3 பாடல்கள் படமாக்கப்பட்டுவிட்டதாம்.

இன்னும் 2 பாடல்களே மட்டுமே படமாக்கப்பட உள்ள நிலையில், விஜய்யுடன் நடனமாட கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறாராம் கீர்த்தி.

விஜய்க்கு ஈடுகொடுத்து நடனமாடியிருக்கிறாரா? என்பதை தெரிந்து கொள்ள அடுத்த 2017 பொங்கல் வரை காத்திருப்போம்.

வசூல் முகனாக பட்டைய கிளப்பும் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாபெரும் வெற்றி பெற்ற ‘ஐ’ படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் 10 எண்றத்துக்குள்ள படம் வந்தாலும் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

எனவே அண்மையில் வெளியான இருமுகன் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உருவானது.

மேலும் இதில் விக்ரம் ஏற்றிருந்த வேடங்கள் பாப்புலராக பேசப்பட்டது.

இந்நிலையில் படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் படத்தின் வசூல் குறித்த விவரங்களை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் மட்டும் ரூ 20.19 கோடி வசூல் செய்துள்ளது.

ஆந்திரா மற்றும்தெலுங்கானாவில் ரூ 13.5 கோடியும், கேரளாவில் ரூ 3.6 கோடி முறையே வசூல் செய்துள்ளது.

வெளிநாடுகளில் ரூ 14 கோடி என மொத்தம் ரூ 51.19 கோடி வரை வசூல் செய்துள்ளது.

கிழமை வாரியாக நான்கு நாட்கள் விவரம்..

வெளியான வியாழக்கிழமையில் ரூ. 12.66 கோடியும், வெள்ளிக்கிழமை ரூ. 10.12 கோடியும், சனிக்கிழமை ரூ. 13.94 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ. 14.47 கோடியும் வசூலித்துள்ளது.

இதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

More Articles
Follows