மீண்டும் *கொடி* இயக்குனருடன் தனுஷ்..; *தொடரி* தோல்வியால் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘வடசென்னை’ படம் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியானது.

இதனையடுத்து தனுஷ் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘மாரி 2’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.

இதனிடையில் நான்கு ஹீரோக்கள் நடிக்கும் ஒரு படத்தையும் இயக்கி வருகிறார் தனுஷ்.

இதன் பின்னர் ‘ராட்சசன்’ பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இவற்றை எல்லாம் முடித்துவிட்டு ‘கொடி’ பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.

இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதே நிறுவனம் தயாரித்த தொடரி பட தோல்வியால் தனுஷ் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தை சத்யஜோதி தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கார்ப்பரேட் கிரிமினல் தளபதி.; இணையத்தில் *சர்கார்* டீசர் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் டீசர் அக்டோபர் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது.

இதில் அமெரிக்காவில் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் விஜய், தேர்தலில் ஓட்டுப்போட இந்தியா வருகிறார்.

ஆனால் அவரது வாக்கை யாரோ கள்ளத்தனமாக போட்டுவிட அவர் என்ன செய்கிறார் என்பது மீதி கதை எனத் தெரியவந்துள்ளது.

இதில் சர்காரை சாடும் விதமாக நான் கார்ப்பரேட் கிரிமினல் என பன்ச் டயலாக் பேசியுள்ளார்.

டீசரும் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு வருவதால் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புது சாதனை படைத்து வருகிறது

இந்நிலையில் இது வெளியான 6 மணி நேரத்திற்குள் 10 மில்லியன் (1 கோடி) பார்வையாளர்களை பெற்றுள்ளதாக சர்கார் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் இது பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

I am Corporate Criminal Vijays Sarkar Teaser creates record in YouTube

Sun Pictures‏Verified account @sunpictures
#SarkarTeaser hits 10M+ views in less than 5 and a half hrs!

பேட்ட சூட்டிங் ஓவர்; பீட்சா சென்டிமெண்டில் கனெக்ட்டாகும் கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காலா படம் ரிலீஸாகும் முன்பே பேட்ட பட சூட்டிங்கில் கலந்துக் கொண்டார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வந்தார்.

முதன்முறையாக ரஜினி படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் ரஜினியுடன் த்ரிஷா, சிம்ரன், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், சசிகுமார், மகேந்திரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அக்டோபர் 19ஆம் தேதியுடன் பேட்ட சூட்டிங் நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதை ரஜினிகாந்த் ட்விட்டரில் உறுதி செய்து பதிவிட்டுள்ளதாவது…

“பேட்ட படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. 15 நாட்களுக்கு முன்பே படப்பிடிப்பை முடித்த கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றி. அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

ஆறு வருடத்திற்கு முன்பு இதே நாளில்தான் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய முதல் படமாக பீட்சா (2012) ரிலீசானது என்பது குறிப்பிடத்தக்கது.

Karthik Subbaraj wrapped Petta shooting It Connects with Pizza release date

டிசம்பரில் வருகிறார் சுசீந்திரன் உருவாக்கிய புட்பால் *சாம்பியன்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது !

இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள ஜீனியஸ் திரைப்படம் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதை தொடர்ந்து அவர் இயக்கியுள்ள சாம்பியன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

விளையாட்டை மையமாக வைத்து வந்த “வெண்ணிலா கபடி குழு“, “ஜீவா“ போன்ற வெற்றி படங்களை இவர் இயக்கியுள்ளார்.

தற்போது உருவாகி வரும் சாம்பியன் புட்பாலை மையமாக கொண்டது.

இதில் புதுமுகம் ரோஷன், மிர்னாலினி நாயகன் நாயகியாக நடித்துள்ளார்கள்.

இவர்களோடு GK ரெட்டி, அஞ்சாதே நரேன், ஜெயப்ரகாஷ், RK சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்துக்கு இசை அரோல் குரொலி, ஒளிப்பதிவு சுஜித் சாரங், களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் சார்பாக K. ராகவி இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

சுசீந்திரன் இயக்கியுள்ள ஏஞ்சலினா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

Suseenthirans Champion Wraps Up Dubbing Works On Full Swing

சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடிய பாடல் படைத்த சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் தர்ஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள கனா படத்தின் ‘வாயாடி பெத்த புள்ள” பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

தந்தை, மகள் உறவையும், அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களையும் சொல்லும் இந்த பாடல் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் மற்றும் பாடலாசிரியர் ஜி.கே.பி ஆகியோரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

அதோடு, என் மகள் ஆராதனாவுடன் எனக்கு இருக்கும் உறவை காலம் முழுக்க நினைக்க, கிடைத்த இந்த பாடலுக்காக அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பாடல் இப்போது யூடியூபில் 50 மில்லியனை தாண்டியிருப்பதும், பலருக்கு பிடித்தமான பாடலாக இருப்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

பாடலை பாடிய வைக்கம் விஜயலட்சுமி அவர்களுக்கு நன்றி. ஆராதனாவின் அழகிய குரல் இந்த பாடலின் இனிமைக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, என்னையும், என் மகள் ஆராதனாவையும் இந்த ஒரே பாடலில் பாடவைக்கும் யோசனையை கொண்டு வந்த என் நண்பரும் திரைப்பட இயக்குனருமான அருண்ராஜா காமராஜிற்கு நான் நன்றி கடன்பட்டிருக்கிறேன்” என்கிறார் எஸ்கே. புரொடக்‌ஷன்ஸ் மூலம் இப்படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன்.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. படத்தின் டிரெய்லர் மிக விரைவில் வெளியாகவுள்ளது.

Vayadi petha pulla song crossed 50 Million views in Youtube

*எழுமின்* தந்த ஏற்றம்; மாணவிகளுக்கு தற்காப்பு கலை கற்றுக்கொடுக்க முதல்வர் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பள்ளி மாணவர்கள் தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும், என்ற கருத்தை பரப்பும் நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படம் எழுமின்.

வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கிய எழுமின் திரைப்படம் இந்த வாரம் வெளியானது. வெளியான நாளில் இருந்து அனைவராலும் கொண்டாடப்பட்டிருக்கும் இந்த படத்தில் ஜனங்களின் கலைஞன் விவேக், தேவயானி உட்பட பலர் நடித்துள்ளனர்.

மேலும், உண்மையான தற்காப்புக்கலை பயின்று சாம்பியன்களாகத் திகழும் 6 குழந்தைகள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குழந்தைகள் 6 பேரும் நடிப்பதில் மட்டுமல்ல அடிப்பதிலும் அசத்தி இருக்கிறார்கள். எழுமின் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை பார்த்து அனைவரும் வியந்து பாராட்டியதே அதற்கு சாட்சி.

இன்றைய சூழலில் தற்காப்புக்கலை எத்தனை அவசியமானது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில் எடுக்கப்பட்ட எங்களின் எழுமின் திரைப்படம் வெளியாகி வெற்றிக்கொண்டாட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசு சார்பில் பள்ளிக்கூட மாணவிகளுக்கு அடுத்த வாரத்தில் இருத்து கராத்தே உள்ளிட்ட தற்காப்புக்கலை கற்றுக் கொடுக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது, எங்களுக்கு பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது,

தமிழக அரசுக்கும் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கும் ’எழுமின்’ படக்குழுவினர் சார்பாக வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம், இந்த அறிவிப்பு எங்களுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கிறது, எங்கள் படத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டது என்று தன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார், எழுமின் திரைப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான வி.பி.விஜி.

Ezhumin movie impact Martial arts should be lesson in Govt Schools

More Articles
Follows