அஜித்-விஜய்க்கே சவால் விடும் சூர்யாவின் ‘S3’ வியாபாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘எஸ் 3’ பட படப்பிடிப்பு விறுவிறுப்பாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது.

தற்போது அங்கு நிறைவு பெறுவதையொட்டி அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் தொடங்கப்படவுள்ளது.

ஆனால் இதற்கு முன்பே, இப்படத்தின் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

தெலுங்கு உரிமை 18 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதை முன்பே பார்த்தோம்.

தற்போது தமிழக உரிமை இதுவரை இல்லாத அளவுக்கு, ரூ. 40 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம்.
இதனை உதயம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது.

இது அஜித்-விஜய் படங்களின் வியாபாரத்திற்கே சவால் விடுவதாகவும் கோலிவுட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படங்கள் எல்லாம் பெரும் வெற்றி பெற்றுள்ளதால், இப்படம் இந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கபாலிக்கு முன்பே ரசிகர்களுக்கு ரஜினி தரிசனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் படங்கள் எப்போதும் பெரும் எதிர்பார்ப்பும் இருக்கும்.

இம்முறை கபாலி படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

வருகிற ஜுலை 22ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

இதனிடையில் அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் ஒருமாதம் தங்கிவிட்டார்.

எனவே அவரது உடல் நலம் குறித்து பல்வேறு வதந்திகள் வெளியானது.

இந்நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஜீலை 20ஆம் தேதி ரஜினிகாந்த் சென்னை திரும்ப உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

சில நாட்கள் ஓய்வுக்கு பின்னர் ஷங்கர் இயக்கும் 2.0 படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.

அஜித்துடன் இணையும் கமல் மகள் அக்‌ஷராஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கும் அஜித்தின் ‘ஏகே 57’ படம் விரைவில் பல்கேரியா நாட்டில் தொடங்கப்படவுள்ளது.

இதில் ஹீரோவாகவும் வில்லனாகவும் அஜித் நடிக்கவிருக்கிறார் என்பதை முன்பே தெரிவித்திருந்தோம்.

தற்போது இப்படத்தின் முக்கிய கேரக்டரில் கமலின் இளைய மகள் அக்‌ஷராஹாசன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தைகள் முடிந்தவுடன் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்.

இவர்களுடன் காஜல் அகர்வால், கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்க சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

கபாலி ரிசர்வேசன்… ஸ்தம்பித்து நின்ற இணையத்தளம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி முதல் நாள் முதல் காட்சி… இதுவே பெரும்பாலோரின் பேச்சாக இருந்து வருகிறது.

கபாலி முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்குமா? என எங்கும் ஒலிக்கும் குரல்களை கேட்க முடிகிறது.

இந்நிலையில் இப்படத்தில் வெளிநாட்டு ப்ரீமியர் புக்கிங் நேற்று தொடங்கி விட்டது.

தொடங்கிய அடுத்த நிமிடம் அனைத்து காட்சிகளும் புக்காகி விட்டது.

இவையில்லாமல் சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் முன்பதிவு தொடங்கியுள்ளது.

இத்தகவல் வெளியான உடன் பலரும் அந்த இணைய தளத்தில் குவிய அடுத்த நொடியே அந்த தளமே முடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

முன்பதிவிலேயே ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து அரங்குகளிலும் முன்பதிவு தொடங்கிவிட்டால் கபாலி முன்பதிலும் சாதனை படைக்கும் என கோலிவுட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

‘ரஜினிதான் ஹீரோ; என் மகன் அல்ல…’ படவிழாவில் நாசர் பேச்சு.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருமைச்சந்திரன் தயாரிப்பில், தனபால் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பறந்து செல்ல வா.

இதில் நாசரின் மகன் லுத்ஃபுதீன் நாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், நரேல் கெங், சதீஷ், கருணாகரன், ஆர் ஜே பாலாஜி, ஜோ மல்லூரி, மனோபாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

காதல் பட புகழ் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார்.

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட நாசர் பேசியதாவது…

“என்னிடம் சொல்லாமலே என் மகன் லுத்ஃபுதீன் சைவம் படத்தின் ஆடிசனில் கலந்து கொண்டார்.

எந்தவொரு பயிற்சியில் இல்லாமல் நடிக்க கூடாது என திட்டினேன்.

பிறகு பயிற்சி எடுத்துக் கொண்டு இப்படத்தில் நடித்துள்ளார். இப்போது எனக்கு பேச கொஞ்சம் தயக்கமாகத்தான் இருக்கிறது.

என் மகன் படவிழா என்றாலும் நான் மற்ற கலைஞர்களை போல் தான் அவனையும் பார்க்கிறேன்.

என் மகன் கதாநாயகன் என நினைக்கவில்லை. இயக்குனர் அவனை கதைநாயகன் என்றார்.

நானும் அதைதான் சொல்கிறேன். அவன் கதையின் நாயகன்தான்.

நாயகன் என்றால் அவருக்காக கதை இருக்கும். இப்போது உலகமே ஒரு தமிழ் (கபாலி) படத்தை எதிர்பார்க்கிறது. அவர்தான் தான் நாயகன்” என்று பேசினார்.

9 வயது சாதன்யாவுக்கு குறும்படம் இயக்கி சாதனை புரிய ஆசையாம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேபி படத்தில் நடித்து முத்திரை பதித்தவர் பேபி சாதனா.

4ஆம் வகுப்பு படிக்கும் இந்த குழந்தை நட்சத்திரற்கு தற்போது 9 வயது ஆகிறது.

இவரின் வயதை விட அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடித்து வருகிறார்.

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் சிறுவயது கயல் ஆனந்தியாக நடித்தார்.

தற்போது நிசப்தம், காத்தாடி, வீரசிவாஜி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது ஒரு குறும்படத்திற்கு கதை எழுதி வருகிறார். அப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட இருக்கிறாராம்.

அதுபோல் ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோருடன் நடிக்க ஆசை இருக்கிறது என்கிறார்.

மேலும் பிரபல இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ் ஆகியோர் இயக்கத்தில் நடிக்கவும் இவருக்கு ஆசை இருக்கிறதாம்.

சாதன்யா சிறுவயதிலேயே சாதனை பல படைக்க வாழ்த்துவோம்.

More Articles
Follows