சிவகார்த்திகேயன் குரலை மாற்றிய ரசூல் பூக்குட்டி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிமுருகன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள படம் ‘ரெமோ’.

இதன் படப்பிடிப்புகள் பணிகள் முடிந்து, தற்போது டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதில் பெண் வேடம் உள்ளிட்ட மூன்று வேடங்களில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

அந்த பெண் வேடம் மட்டும், படத்தில் 45 நிமிடங்கள் வருகிறதாம்.

இந்நிலையில், இந்த பெண் வேடத்திற்கு சிவகார்த்திகேயனே குரல் கொடுக்க வருவதாக கூறப்பட்டது.

ஆனால் சில காட்சிகளில் பெண் குரல் சரியாக மேட்ச் ஆகவில்லை என்பதால், சிவகார்த்திக்கேயனை பேச வைத்து, அதை தொழில்நுட்ப உதவியுடன் பெண் குரலாக மாற்றியிருக்கிறாராம் ரசூல் பூக்குட்டி.

ரஜினியின் கபாலி – சூர்யாவின் மாஸ்… ஓர் ஒற்றுமை..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி படம் என்றாலே பன்ச் டயலாக்ஸ்க்கு பஞ்சம் இருக்காது.

அண்மையில் வெளியான கபாலியும் இதே வகைதான்.

இதில் இடம்பெற்ற…

“நான் வந்துட்டேன்னு சொல்லு… திரும்ப வந்துடேன்னு…”

என்ற இந்த பன்ச் தற்போது படு பாப்புலராகியுள்ளது.

கடந்த வருடம் வெளியான மாஸ் படத்திலும் சூர்யா, இதே போல் ஒரு பன்ச் பேசியிருப்பார்.

“நான் இப்படி திரும்ப வருவேன்ன்னு எதிர்பாக்கல இல்ல.…” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தூதுவிடும் வேதாளம் வில்லன்.,. அஜித் ஓகே சொல்வாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேதாளத்தை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.

அனிருத் இசையமைக்கவுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் அஜித்தின் ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் என கூறப்படுகிறது.

தற்போது மற்ற கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதால், விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது..

இந்நிலையில், இப்படத்தில் அஜித்தின் வில்லனாக நடிக்க, கபீர் துகான் சிங் தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இவரின் சமீபத்திய வலைத்தள உரையாடலில்…

‘வேதாளம் படத்தில் நடித்த 25 நாட்கள் என் வாழ்வில் மறக்க முடியாதவை.

அதுபோன்ற அற்புதமான நாட்களுக்காக மீண்டும் காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இம்… அஜித் என்ன சொல்வாரோ பார்க்கலாம்..?

ஜெய்யுடன் இணையும் சூர்யா-கார்த்தியின் ஹீரோயின்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக அறிமுகமாகி தற்போது தனி ஹீரோவாக பல படங்களில் கலக்கி வருகிறார் ஜெய்.

இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து, எனக்கு வாய்த்த அடிமைகள் என்ற படத்தில் நடிக்கிறார்.

இதில் இவருடன் முதன்முறையாக இணைகிறார் ப்ரணித்தா. இவர் சூர்யாவுடன் மாஸ், கார்த்தியுடன் சகுனி ஆகிய படங்களில் நடித்தவர்.

தேவதாஸ் என்ற கேரக்டரில் ஜெய்யும் காந்தா கேரக்டரில் ப்ரணித்தாவும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் கருணாகரன், காளி வெங்கட், நவீன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மகேந்திரன் ராஜாமணி இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார்.

ஷான் சுதர்சன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

‘ரெமோ’வை தன் கஸ்டடிக்கு கொண்டு வந்த ஆஸ்கர் நாயகன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிமுருகன் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மீண்டும் இணைந்துள்ள படம் ‘ரெமோ’.

இதில் சிவகார்த்திகேயன், பெண் வேடம் உள்ளிட்ட மூன்று கேரக்டர்களில் நடித்துள்ளார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கி வந்த இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

எனவே, இதன் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.

இதில் சிவகார்த்திகேயனே பெண் குரலுக்கும் டப்பிங் பேசவுள்ளதால், ஆஸ்கார் விருது நாயகன் ரசூல்பூக்குட்டியின் மேற்பார்வையில் டப்பிங் பணிகள் நடைபெறவுள்ளதாம்.

பிசிஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

விஜய்க்கு கதை சொல்ல மறுக்கும் முத்தின கத்திரிக்கா நடிகர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காமெடின்னா… அதுக்கு நான் கியராண்டி என சொல்லாமல், தன் படங்கள் மூலம் சொல்ல வைத்தவர் இயக்குனர் சுந்தர் சி.

இவர் நடித்துள்ள முத்தின கத்திரிக்கா படம் இன்று வெளியாகியுள்ளது.

சுந்தர் சியின் இயக்கத்தில் உருவான படங்களில் கவுண்டமணி, விவேக், வடிவேலு, சந்தானம் ஆகியோர் காமெடியின் உச்சத்தை தொட்டனர்.

மேலும், ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இவரது படங்களில் நடித்துள்ளனர்.

ஆனால் இதுவரை விஜய் இவருடன் பணியாற்றவில்லை.

இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது என்னவென்றால், எந்த இயக்குனர் என்றாலும் விஜய் கதை கேட்காமல் நடிக்க மாட்டாராம்.

ஆனால் சுந்தர்.சியோ கதை சொல்வதை விட அதை காட்சியாக கொண்டுவருவதில்தான் கில்லாடியாம்.

எனவேதான் இவர்கள் இணைவதில் தாமதம் ஆகிவருகிறதாம்.

More Articles
Follows