வருடந்தோறும் 108 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் தர சிவாஜி குடும்பம் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்மக்குரலோன் நடிகர் திலகம் மறைந்த
சிவாஜி கணேசன் அவர்களின் மூத்த மகன் ராம் குமார். இவர் நடிகர் பிரபுக்கு அண்ணன் ஆவார்.

ஐ, எல்கேஜி உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

சில திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார்.

அண்மையில் பா.ஜ., கட்சியில் இணைந்தார்.

இந்த நிலையில் இன்று ராம்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

” கொரோனா தொற்று மீண்டும் தமிழ்நாட்டில் மிக வேகமாக பரவ தொடங்கி உள்ளது. மக்கள் அனைவரும் முக்கவசம் அணிந்து, சமூகஇடைவெளியை பின்பற்றி பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டுகிறேன்.

இத்தருணத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வருகிற ஜூலை 21 நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தையொட்டி இந்தாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் வழங்கும் திட்டம் அன்னை இல்லம் சார்பில் துவங்கப்பட உள்ளது.

இதற்கான விதிமுறைகள், நெறிமுறைகள் விரைவில் தெரிவிக்கப்படும். அனைவரின் ஒத்துழைப்பு, ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு ராம்குமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Sivaji family help to poor family

மீண்டும் ஹிந்தி படத்திற்கு அனிருத் இசை..; தனுஷின் சூப்பர் ஹிட் இயக்குனருடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத்.

இவர் கடந்த 2013ல் விக்ரம் நடித்த ‘டேவிட்’ என்ற ஹிந்தி படத்திற்கு ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைத்து இருந்தார்.

அதன் பிறகு வேறு எந்த ஹிந்தி படங்களுக்கு அனிருத் இசையமைக்கவில்லை.

தற்போது தமிழில் கமலின் இந்தியன் 2, விக்ரம் & தளபதி 65 படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத்.

இந்த நிலையில் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இதில் ஹீரோவாக அக்சய்குமார் நடிக்க உள்ளாராம்.

தனுஷ் நடித்த ஹிந்திப் படங்களான ராஞ்சனா & அட்ராங்கிரே (இன்னும் ரிலீஸ் ஆகவில்லை) ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த் எல்.ராய்.

இந்த இயக்குனரின் புதிய படத்தில் தான் அனிருத் இசையமைக்க கமிட்டாகியிருக்கிறார்.

Anirudh to score music for bollywood film

‘குக் வித் கோமாளி’ டைட்டில் வின்னர் வீட்டுக்கே சென்ற சிம்பு மஹத் ரக்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சிகளில் பிரபலமான ஒன்று குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சி இறுதிப் போட்டி ஏப்ரல் 14 அன்று நடைபெற்றது.

இந்த போட்டி டைட்டிலை டைரக்டர் அகத்தியனின் மகள் கனி வென்றார்.

அவருக்கு ரூ. 5 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேயின்போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் சிம்பு.

அப்போது கனியிடம் உங்கள் கார குழம்பை சாப்பிட ஆசை என கூறினார் சிம்பு.

இந்த நிலையில், சிம்பு, மகத் மற்றும் ரக்‌ஷன் ஆகிய மூவரும் கனியின் வீட்டிற்கு சென்று அவருடைய காரக்குழம்பை ரசித்து சாப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து கனியின் கணவர் இயக்குனர் திரு அவர்கள் தன் ட்விட்டரில்…

‘சிம்பு, மகத் மற்றும் ரக்‌ஷன் ஆகிய மூவரும் தங்களுடைய வீட்டுக்கு வருகை தந்தமைக்கு நன்றி.

அவர்களது வருகை ஆச்சரியம் அளித்தது.

கனியின் காரக்குழம்பை அவர்கள் சாப்பிட்டு ரசித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார் திரு.

STR’s surprise visit to Cooku with comali title winner Kani

விவேக் மரணம்.: ‘மாநாடு’ ஸ்பாட்டில் சொன்னதை செய்து காட்டிய சிம்பு டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஏப்ரல் 17ஆம் தேதியன்று . அதிகாலை நடிகர் விவேக் (மாரடைப்பால்) காலமானார்.

அன்றைய தினம் விவேக்குக்கு அஞ்சலி செலுத்த நேரில் வராவிட்டாலும் இரங்கல் தெரிவித்து இருந்தார் நடிகர் சிம்பு.

அந்த இரங்கல் அறிக்கையில்…:

“அன்பு அண்ணன், நம் சின்னக் கலைவாணர், இன் முகம் மாறாத மனிதர், எல்லோரிடமும் இயல்பாகப் பழகுபவர், கணக்கற்ற மரக்கன்றுகளை நட்டு காற்றுக்கு ஆக்சிஜனை சுவாசிக்கக் கொடுத்தவர் இன்று மூச்சற்றுவிட்டார் என்ற பெருந்துயர் செய்தி கேட்டு அதிர்ந்து போனேன்.

சைக்கிளிங், உடற்பயிற்சி, யோகா, இசையென மிக ஆரோக்கியமான முன்னுதாரணமாக நான் ஆச்சரியப்படும் மனிதர் நடிகர் விவேக் சார்.

பண்பாளர். இவ்வளவு சீக்கிரம் இழப்போமென்று கனவிலும் நினைத்ததில்லை.

தமிழ் சினிமாவில் எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் பகுத்தறிவு கருத்துகளைப் போதித்து வந்தார்.

மரங்களை நடுங்கள் என அய்யா அப்துல் கலாம் காட்டிய வழியை இளைஞர்கள் மத்தியில் விரைவாகக் கொண்டு சென்று செயல்படுத்திய செயல் வீரர். பத்மஸ்ரீ விருதுக்குப் பொருத்தமானவராக நிறைந்திருந்தார்.

அவர் மறைந்தாலும், அவர் செய்து சென்றிருக்கிற செயல்கள் அவரை என்றும் நகைச்சுவை நடிகராக, கருத்தாழம் மிக்க மனிதராக நிலைத்திருக்க வைக்கும். நம்மிடையே நிலைத்திருப்பார். என்மீது மிகுந்த அக்கறை கொண்டவர்.

எப்போதும் என் நல்லது, எடுக்கும் முயற்சிகள் பற்றி விசாரித்துக் கொண்டேயிருப்பார். அவருக்கு நாம் செய்ய வேண்டியது, அவர் செய்து வந்ததை நாம் தொடர்ந்து செய்வதுதான் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

நான் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மரக்கன்று வைக்க இருக்கிறேன். சின்னக் கலைவாணரை நேசிக்கும் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஒரு மரக்கன்று நட்டு அவரது இதயத்துக்கு நெருக்கமான அஞ்சலியைச் செலுத்துவோம் என அன்போடு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.இதய அஞ்சலிகள் விவேக் சார்”

இவ்வாறு சிலம்பரசன் தெரிவித்து இருந்தார்.

அதன்படி இன்று ஏப்ரல் 21ஆம் தேதி ‘மாநாடு’ சூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு உள்ளிட்ட இப்பட குழுவினர் மரக்கன்றுகளை நட்டனர்.

சொன்னதை செய்தார் சிம்பு.. வாழ்த்துக்கள்

Team Maanaadu Planted trees in shooting spot in memory of Actor Vivek

மாப்பிள்ளை தாடி வச்சா கல்யாணத்துக்கு வரமாட்டோம்..; காரைக்கால் மக்கள் திடீர் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்பெல்லாம் (15-20) வருடங்களுக்கு முன்பு ஆண்கள் தாடி வச்சிருந்தா .. என்னடா மாப்ள காதல் தோல்வியா? என்பார்கள்.

கல்யாண மேடைகளில் மணமகன் க்ளீன் ஷேவ் செய்த முகத்துடனே காணப்படுவார்.

தமிழக வழக்கப்படி மணமகன் தாடி வைத்திருக்க மாட்டார்கள்.

ஆனால் தற்போது நிலைமை தலை கீழாக உள்ளது. இண்டர்வியூக்கு சென்றால் பாய்ஸ் சேவிங் செய்வது கிடையாது.

கல்யாண வீடுகளிலும் இதே நிலை தான்.

இதுவே தற்போது டிரெண்டாகிவிட்டது. ரஜினி, கமல், விஜய், அஜித் முதல் எல்லா ஹீரோக்களும் தாடியுடன் தான் சினிமாவில் நடிக்கின்றனர்.

தாடி இல்லாத ஆண்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது. இதனால் வித்தியாசமாக தாடி வைப்பதை ஆண்கள் விரும்ப தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் தாடி வைக்கும் மணமகன் கல்யாண விழாக்களில் கலந்துக் கொள்ள மாட்டோம் என காரைக்கால் மாவட்ட மீனவ மக்கள் முடிவெடுத்துள்ளனர்.

காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தில் பாரம்பரிய வழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என மீனவ பஞ்சாயத்தார் முடிவு எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் எடுத்த முடிவில்…

திருமண விழாக்களில் மணமகன்கள் முடிவெட்டாமல் தாடியை முழுமையாக சேவிங் செய்யாமல் கலந்து கொள்கிறார்கள். இது நமது பண்பாடாக தெரியவில்லை.

இது குறித்து சம்பந்தப்பட்ட மணமகளும் கவலைப்படுவதில்லை.

அதுபோல் பெண் வீட்டாரோ, மணமகன் வீட்டாரோ கண்டுக் கொள்வதில்லை.

நமது பாரம்பரிய பண்பாட்டின்படி திருமணத்தின்போது, தாடி வைத்திருப்பது ஏற்புடையதல்ல.

எனவே பழைய பண்பாட்டு, பாரம்பரியத்தை நிலைநிறுத்த வேண்டும்.

எனவே திருமண நிகழ்வில் மணமகன் தாடி வைத்திருந்ததால், அந்த திருமண விழாவை புறக்கணிப்போம். அந்த திருமண விழாவிற்கே செல்வதில்லை என முடிவு செய்துள்ளனர்.

நிஜமாகவே காரைக்கால் மக்கள் வித்தியாசமான சிந்தனை கொண்டவர்கள் தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர்.

Karaikal people desicion on marriage function

கமல் கட்சியில் இருந்து நடிகர் நாசர் மனைவி நீக்கம்..; மநீம அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டல (கட்டமைப்பு) மாநில செயலாளராக பொறுப்பு வகித்தவர் கமீலா நாசர்.

இவர் நடிகர் நாசரின் மனைவி.

கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டார்.

இந்த நிலையில் இவர் இந்தாண்டு 2021 சட்டமன்ற தேர்தலுக்கு (ஏப்ரல் 6) முன்பே தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

தேர்தல் நேரத்திலும் கூட எதிலும் பங்கேற்காமல் கமீலா நாசர் ஒதுங்கி இருந்தார்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கமீலா நாசர் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளரான சந்தோஷ் பாபு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டல மாநில செயலாளர் பொறுப்பில் இருந்த கமீலா நாசர் நேற்று முதல் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் கமீலா நாசர் கருதியதாக சொல்லப்படுகிறது.

Kameela Nassar quits Makkal Needhi Maiam

More Articles
Follows