‘காவிரியில் விளம்பரம் தேடும் ஆள் நானில்லை’ – சிம்பு சீற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்திற்கு தண்ணீர் தர கொடுக்க கூடாது என கர்நாடக மாநில மக்கள் சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையில் தன்னுடைய படங்களை கர்நாடகாவில் இனி வெளியிட போவதில்லை என சிம்பு கூறியதாக தகவல்கள் வந்தன.

இதுகுறித்து சிம்பு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

அன்பு நண்பர்களே,

“நான் தாய்லாந்து நாட்டில், அச்சம் என்பது மடமையடா படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறேன்.

காவேரி விவகாரம் தொடர்பாக நான் ஏதோ கூறியதாக வந்த செய்திகள் குறித்து எனது நலவிரும்பிகளும், எனது தந்தையும் என்னிடம் கூறினர்.

இந்தியாவின் பொறுப்புள்ள குடிமகனாக, எனது பங்கும், எனது எல்லைகளும் என்னவென்று எனக்குத் தெரியும். காவேரி விவகாரம் குறித்து எந்த அறிக்கையும் நான் வெளியிடவில்லை.

இது இரு மாநிலங்களுக்கும் இடையில் நிலவும் சர்ச்சை. இது கலைஞர்கள் மேடையேறி பிரச்சாரம் செய்வதற்கான விஷயம் அல்ல.

சட்டத்தின் துணையோடு இரு மாநிலத் தலைவர்களும் இதற்கான தீர்வை எட்டுவார்கள். நம்மால் முடிந்தது, நன்றாக பருவமழை இரு மாநிலங்களிலும் அமைதியும் வளமும் செழிக்க வேண்டும் என பிரார்த்திப்பதே.

அதே போல, நாம் அண்டை மாநில மக்களாக சுமுகமாக வாழ்ந்துள்ளோம். ஆனால் இந்த விவகாரத்தினால் எக்காரணம் கொண்டும் இரு மாநில மக்களிடையே இருக்கும் உறவில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என விரும்புகிறேன்.

இந்த பிரச்சினையை கூடிய விரைவில் கடப்போம் என நம்புகிறேன்.

இந்த விவாகரம் தொடர்பாக அரசியல் ரீதியில் அறிக்கைகளை விட்டு, இரு மாநிலங்களிலும் அமைதி இல்லாத நிலையை ஏற்படுத்தி, அதன் மூலம் விளம்பரம் தேடும் ஆள் அல்ல நான் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.”

என்று தெரிவித்துள்ளார் சிம்பு.

சூர்யாவை முந்தி, ரஜினி-விஜய்க்கு அடுத்த இடத்தில் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி விக்ரமின் இருமுகன் ரிலீஸ் ஆனது.

இந்த நான்கு நாட்களில் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 51 கோடியை வசூலித்துள்ளது என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் சென்னையில் மட்டும் ரூ. 2.30 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அதாவது இந்த ஆண்டில் வெளியான படங்களில் சென்னை ஓப்பனிங்கில் இப்படத்திற்கு 3வது இடம் கிடைத்துள்ளது.

மற்ற இடங்களை பிடித்துள்ள படங்கள்…

  • கபாலி (3 நாட்களில்) ரூ. 3.75 கோடி
  • தெறி (4 நாட்களில்) ரூ. 3 கோடி
  • இருமுகன் (4 நாட்களில்) ரூ. 2.30 கோடி
  • 24 படம் (3 நாட்களில்) ரூ. 1.6 கோடி

இதில் தெறி மட்டுமே தமிழ் புத்தாண்டு பண்டிகை தினத்தில் வெளியானது.

தெறி மற்றும் இருமுகன் படங்கள் வியாழக்கிழமையே வெளியானது குறிப்பிடத்தக்கது.

ரஜினியுடன் கைகோர்க்கும் வேல்ஸ் கல்வி நிறுவன தலைவர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கிவரும் 2.ஓ படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது பிரபல லைக்கா நிறுவனம்.

இப்படத்தில் ரஜினிகாந்துடன் அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் வேல்ஸ் கல்வி நிறுவன தலைவர் ஐசரி கணேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இவர் இதற்குமுன்பே பல படங்களில் நடித்துள்ளது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் சந்தோஷம் தந்த தொடரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபுசாலமன் இயக்கும் தொடரி படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்றவுடனே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

அதன்பின்னர் இமான் இசையில் வெளியான பாடல்களால் படத்தின் எதிர்பார்ப்பு வேற லெவலில் சென்றது.

ஆனால் படத்தின் ரிலீஸ் மட்டும் தள்ளிக் கொண்டே போனதால், தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் இழந்தனர்.

இந்நிலையில் சற்று முன்னர் தணிக்கை செய்யப்பட்ட இப்படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

மேலும் படத்தை செப்டம்பர் 22ஆம் தேதி (வியாழக்கிழமை) ரிலீஸ் செய்யவுள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

இதனால் டபுள் சந்தோஷம் அடைந்துள்ளதாக தனுஷ் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

அஜித்-விஜய் ரசிகர்களின் ஒற்றுமையால் அடிவாங்கிய அப்பாவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் தலையாய பிரச்சினைகள் பல இருந்தாலும், தல-தளபதி ரசிகர்களின் மோதல் என்றும் தீராமல் இருந்து வருகிறது.

ஆனால், தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள காவேரி பிரச்சினையில் இந்த இரு தரப்பு ரசிகர்களும் இணைந்து கன்னட நடிகர்களுக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அங்குள்ள நடிகர்களை கிண்டல் செய்து, இணையங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதை கண்ட நம் அப்பாவி தமிழர் ஒருவர் அந்த தகவல்களை தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனால், கன்னடர்கள் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அந்த தாக்குதலை அவர்களே சமூக வலைத்தளத்திலும் அப்லோட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் ‘கொடி’யை உயர பறக்க வைக்கும் பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைத்துறைகளில் பன்முகம் காட்டி வரும் தனுஷ், இதுவரை 30 படங்களில் வரை நடித்துவிட்டாலும், முதன்முறையாக கொடி படத்தில்தான் இருவேடங்களில் நடித்துள்ளார்.

துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் த்ரிஷா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இதில் தனுஷுடன் முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் பிரபல பின்னணி பாடகியான சித்ராவும் இணைந்துள்ளார்.

இவர் பாடியுள்ள பாடலை கவிஞர் விவேக் எழுதியுள்ளார். இது தன் வாழ்வில் பெருமையான விஷயம் என பதிவிட்டுள்ளார் விவேக்.

தீபாவளி ரிலீஸை குறிவைத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

More Articles
Follows