இரண்டு மில்லியன் பாலோயர்களை பெற்று சிம்பு சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்த வாலு, இது நம்ம ஆளு உள்ளிட்ட பல படங்கள் ரிலீஸின்போது பெரும் பிரச்சினைகளை சந்தித்தது.

இதனிடையில் சிம்பு பாடிய பீப் சாங் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

அண்மையில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் தாமதத்திற்கு கூட சிம்புவே காரணம் என சொல்லப்பட்டது.

இதன் பின்னரும் கூட சிம்புவை இயக்க தான் காத்திருப்பதாக கௌதம் மேனன் தெரிவித்திருந்தார்.

இப்படி திரையுலகில் சிம்புக்கு எதிராக எத்தனை பிரச்சினைகள் வந்தாலும், அவருக்கான ரசிகர் பட்டாளம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

அதனை நிரூபிக்கும் வகையில் சிம்புவின் ட்விட்டர் பக்கத்தை தற்போது இரண்டு மில்லியன் (20 இலட்சம்) பேர் பின் தொடர்கின்றனர்.

தமிழ் நடிகர்களில் ரஜினி, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள் மட்டுமே 2 முதல் 3 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Simbu got 2 million followers on Twitter

மே மாத இறுதியில் மீண்டும் விஜய ‘பைரவா’ விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சிஜா ரோஸ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்த படம் பைரவா.

விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இப்படம் கடந்த பொங்கல் தினத்தில் தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியாகி வெற்றிப் பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு டப்பிங் மே மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு தெலுங்கில் விஜயபைரவா எனப் பெயரிட்டுள்ளனர்.

Vijaya Bairavaa movie release on May end

ரஜினி-ராஜமவுலி இணைந்தால் ‘அவதார்’ அவுட்; சொன்னது யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிந்தி சினிமாவின் பிரபல நட்சத்திரங்களே ரஜினி படத்தின் ரிலீஸ் சமயத்தில் தங்கள் படங்களை வெளியிட தயங்குவார்கள்.

ரஜினி படத்திற்கான வரவேற்பு அப்படி ஹைலெவலில் இருக்கும்.

அதற்கு நிகராக தற்போது வெளியாகியுள்ள ராஜமௌலியின் பாகுபலி2 படத்திற்கும் கிடைத்துள்ளது.

இதனால், ரஜினியும் ராஜமௌலியும் இணைந்து பணியாற்றுவருவார்களா? என்ற கேள்வி அண்மை காலமாக தென்னிந்திய சினிமாவில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

மேலும், சூப்பர் ஸ்டாரை டைரக்ட் செய்ய வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்று ராஜமவுலியும் கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

‘எஸ்.எஸ்.ராஜமவுலியும் ரஜினிகாந்தும் ஒரு படத்தில் இணைவார்கள் என நினைக்கிறேன். அப்படி நடந்தால், ’அவதார்’ பட வசூலை அது முறியடிக்கும்.’ என தெரிவித்துள்ளார்.

If Rajini and Rajamouli joins Avatar record will be broken

தல பிறந்தநாள்; அஜித் பற்றி ஆச்சரியமூட்டும் தகவல்கள்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அமராவதி’ என்ற படத்தில் தமிழில் அறிமுகமாகி அல்டிமேட் ஸ்டாராக மாறிய அஜித்தின் ஓர் ஆசை பயணம்தான் அவரது திரையுலக வாழ்க்கை.

உழைப்பாளர் தினத்தில் பிறந்து கடின உழைப்பால் ஓர் உன்னத மனிதராகவும் உயர்ந்து நிற்கும் அஜித்தின் வாழ்க்கை பயணத்தை அவரது பிறந்தநாளில் தல ரசிகர்களுக்காக இங்கே வழங்குகிறோம்.

எந்த ஒரு சினிமா அடையாளமும் இல்லாமல், எவருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் தனியாக தன்னம்பிக்கையோடு 21 வருடங்களுக்கு முன்பு திரையுலகில் நுழைந்தவர் அஜித்.

அறிமுக காலங்களில் ஒன்றல்ல இரண்டல்ல நிறைய தோல்வி படங்களை கொடுத்தவர். ஆனால் அந்த தோல்வி படங்களே அவரது வாழ்க்கையை அவருக்கு கற்றுக் கொடுத்தது.

கரம் பிடித்து தூக்கிவிடவோ, ஆறுதல் சொல்ல யாரும் இல்லை. அவரே எழுந்தார். நடந்தார். போராடினார். இன்று போராட்டங்கள் அவரை எதிர்கொள்ள தயாரில்லை.

பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் சிறுவயதிலேயே மெக்கானிக்காக பணியில் சேர்ந்தார். வெறுமனே பைக் ஓட்ட விரும்பவில்லை. அதிலும் தன்னை வித்தியாசப்படுத்தி பைக் ரேஸில் கலந்து கொள்ள நினைத்தார். ஆனால்

பணம் இல்லாமல் தன் பயணம் நின்று விடுமோ என்ற பயம் தன்னை வருத்தியது. எதற்காகவும் பயணத்தை நிறுத்த கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அழகாக இருந்ததால் சிறு சிறு விளம்பரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.

அழகாய் இல்லாவிட்டாலும் நிச்சயம் அவர் வாய்ப்புகளை பெற்றிருப்பார் என்பதே நிதர்சன உண்மை. தொடர்ந்து திரைப்படங்களில் காலடி எடுத்து வைத்தார். இனி பந்தயமா? படமா? என்ற யோசித்தபோது படமே வென்றது.

‘பாசமலர்கள்’, ‘பவித்ரா’, ‘ராஜாவின் பார்வையிலே’ போன்ற படங்களில் நடித்தார். படம் என்று வந்துவிட்டாலும் இவர் எதிர்பார்த்த வெற்றி ஒன்று கூட கிடைக்கவில்லை.

இவர் ஆசையாய் எதிர்பார்த்த வெற்றி ‘ஆசை’ படத்தின் மூலம் கிடைத்தது. இருந்தபோதிலும் இவரின் வசன உச்சரிப்புகள் சரியில்லை என்றே வாய்ப்புகள் வரமறுத்தது.

‘வான்மதி’, ‘கல்லூரி வாசல்’, ‘மைனர் மாப்பிள்ளை’ போன்ற தோல்வி படங்களை கொடுத்தார். ஆனாலும் முயற்சியை விடாமல் தொடர்ந்து கொண்டே இருந்தார்.

இந்நிலையில் ‘காதல் கோட்டை’ படத்தில் வாய்ப்பை பெற்றார். படத்தில் இவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது. படம் தேசிய விருதை தட்டிச் சென்றது.

அதன் பின்னரும் தோல்விகளே இவரை பின் தொடர்ந்தது. 10 வருடங்கள் கடந்து சென்றது. இந்த ஆண்டுகளில் இரண்டு வெற்றிகளை கொடுத்திருந்தாலும் அவை கதைக்காக கிடைத்த வெற்றி.

ஆனால் தனக்கான ஒரு வெற்றியை ‘வாலி’ படத்தின் மூலம் கொடுத்தார். இப்படத்தில் ஒரு கேரக்டரில் பேசாமல் நடித்து இவரது நடிப்பை பற்றி அனைவரையும் பேசவைத்தார். பிலிம்பேர் விழாவில் ‘சிறந்த நடிகர்’ பட்டத்தை வென்றார்.

அப்போதிலிருந்து ஆரம்பம் ஆனதுதான் இன்று வரை தொடரும் அவரது வெற்றியும் ரசிகர் பட்டாளமும்.

தொடர்ந்து திரையுலகத்தை ‘அமர்கள’ப்படுத்தினார். தமிழ் சினிமாவில் தனக்கான ‘முகவரி’யை தக்கவைத்துக் கொண்டார். திரையுலகமும் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்று இவரை வாரி அணைத்துக் கொண்டது.

அதன்பிறகு வந்த ‘தீனா’ இவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையை உண்டாக்கியது. அன்றுமுதல் ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.

தொடர்ந்து ‘சிட்டிசன்’ படத்தில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து தன்னால் எந்த கேரக்டரையும் செய்ய முடியும் என்பதை திரையுலகுக்கு புரியவைத்தார்.

இந்நிலையில் மீண்டும் ரேஸ் மோகம் எட்டி பார்த்தது. சிறு வயதில் ஆசை இருந்தது அன்று பணம் இல்லை. இன்று பணம், புகழ், செல்வாக்கு நினைத்ததை விட அதிகமாகவே வந்து சேர்ந்துள்ளது. எனவே மீண்டும் பந்தயங்களில் கலந்துக் கொண்டார்.

2003 ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார். ஃபார்முலா சாம்பியன் போட்டியில் வென்ற ஒரே இந்திய நடிகர் என்ற பெருமையைப் பெற்றார். பின்னர் 2010 ஆம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களிலும் கலந்து கொண்டார்.

(இந்த நிகழ்வுகளை பார்க்கும்போது ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. தீனா படத்தில் தங்கை சிறுவயதில் ஆசைபட்டதை அவள் திருமண வயதை எட்டிய காலத்தில் வாங்கி கொடுப்பார் அஜித். இதெல்லாம் எதற்குடா என்று அம்மா கேட்பார்? அதற்கு சிறுவயது ஆசையை இப்பொழுதாவது நிறைவேற்ற முடிந்ததே என்று நெகிழ்ச்சியுடன் பதிலளிப்பார்.)

அதுபோல தன் நிஜவாழ்வில் தன் சிறுவயது ஆசையை நிறைவேற்ற தன்னைத் தானே தயார் படுத்திக் கொண்டு தனது 30வது வயதில் நிறைவேற்றிக் கொண்டார் அஜித். அதே போல தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களின் நிறைவேறாத ஆசையையும் நிறைவேற்றி வருகிறார் அஜித்.

‘அமர்க்களம்’ படத்தில் நடித்தபோது ஷாலினியுடன் காதல் வயப்பட்டதால், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு அனோஸ்கா என்ற ஒரு மகளும் ஆத்விக் என்றொரு மகனும் இருக்கிறார்கள்.

அஜித் பற்றி ஆச்சரியமூட்டும் தகவல்கள்…

• ஒரு முறை தனது குழந்தைக்கு பெயர் வைக்க கேட்டுக்கொண்டார் ஒரு தாய். நீங்கள் பெற்ற குழந்தைக்கு பெயர் வைக்கும் முழு உரிமையும் உங்களுக்கே. அதை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள் என்று அவரின் தன்மான உரிமையை அவருக்கே புரிய வைத்தார்.

• தனக்காக எதையும் செய்ய துணியும் ரசிகர்கள் இருந்தாலும் அவர்களை தன் சுயநலத்துக்காக தவறாக பயன்படுத்த கூடாது என்பதற்காக ரசிகர் மன்றங்களை கலைத்தார்.

• பவர் ஸ்டார் என தனக்குத்தானே பெயர்கள் சூட்டிக் கொள்பவர்கள் மத்தியில் தனக்கிருந்த அல்ட்மேட் ஸ்டார் பட்டத்தை துறந்தவர்.

• என் ரசிகர்களும் மக்களும் என் படத்தை பார்க்க விரும்பினால் வந்து பார்க்கட்டும். படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டேன்.

• எந்த ஒரு பொருளையும் விளம்பரப்படுத்த மாட்டேன். மக்களுக்கு பிடித்தால் அவர்கள் வாங்கி கொள்ளட்டும். நான் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டேன்.

• அஜித்துடன் ஜோடியாக நடிப்பீர்களா? என்று ஒரு நடிகையிடம் கேட்டதற்கு, முடியாது. அஜித் எனக்கு அண்ணன் போல அவர் படத்தில் நடிப்பேன். ஆனால் ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று பேட்டி ஒன்றில் கூறினார் அஜித் மனைவி ஷாலினியின் தங்கை ஷாமிலி.

• அஜித் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார். கலந்து கொள்ள நேரிட்டால் கடைசி வரை இருப்பார்.

• அண்மையில் நடிகர் சங்கத்தின் ஜல்வலிக்கட்டு போராட்டத்தில கலந்து கொண்டார்.

• மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக பேசிவிடுபவர். சில நேரங்களில் சர்ச்சைகளிலும் மாட்டிக் கொண்டுள்ளார்.

• தன்னிடம் பணிபுரியும் அத்தனை பணியாளர்களுக்கும் சொந்தமாக வீடுகட்டி கொடுத்த ஒரே நடிகர் அஜித் மட்டுமே.

• ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012வது ஆண்டு பட்டியலில் அஜித் குமாருக்கு 61ஆவது இடம் கிடைத்தது. மேலும் 2014 வது ஆண்டிற்கான இதே பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 51 ஆவது இடத்தைப் பிடித்தார்.

• மகள் அனோஷ்கா மீது அவருக்கு கொள்ளை பிரியம். எந்த வேலையாக இருந்தாலும் மகள் பள்ளியில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் கலந்து கொள்வார்.

• படப்பிடிப்பு இல்லாத நாளில் மகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் ஒரு பொறுப்புள்ள தந்தையாக இருப்பார்.
• ஒருவருடன் போனில் பேசும்போது உங்களிடம் நான் பேச இது சரியான நேரமா? என கேட்ட பிறகுதான் பேச ஆரம்பிப்பார்.

• தான் நடித்த படம் வெளியான பிறகு ரிசல்ட் தெரிந்துக் கொண்டு அதைப்பற்றிய விமர்சனத்தில் ஈடுபடவே மாட்டார். படம் முடிந்து சந்தைக்கு வந்து விட்டது என்பார்.

• இமேஜ் பற்றி கவலை படாமல் படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நரைத்த முடியுடன் நடித்து வருபவர். எந்த இந்திய நடிகரும் செய்யாததை துணிச்சலுடன் செய்து வருபவர்.

மே 1ஆம் தேதி 45வது பிறந்த நாள் கானும் அஜித் அவர்களையும், விரைவில் வெளியாகவுள்ள அவரின் விவேகம் படம் வெற்றி பெறவும் filmistreet சார்பாக வாழ்த்தி மகிழ்கிறோம்.

Unknown facts of Thala Ajith Birthday special

தேசிய விருது பெற்ற சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன்னை சந்திக்க விரும்பும் ரசிகர்ளை அடிக்கடி விஜய் சந்திப்பது வழக்கம்.

அதிலும் தன் ரசிக சாதனையாளர்களின் விருப்பத்தை அறிந்தவுடன் முதலில் நிறைவேற்ற துடிப்பவர் இளையதளபதி.

இந்நிலையில் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்…

இந்திய அரசு 2017ஆம் ஆண்டிற்கான மலையாள திரைப்படத்தின் (BEN) சிறந்த குழந்தை நட்சத்திரமாக ஆதிஷ் பிரவின் என்கிற சிறுவனை தேர்வு செய்தது.

விருது அறிவிக்கப்பட்டவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்த செல்வன் ஆதிஷ் பிரவின் எனக்கு இந்த விருது கிடைத்ததைவிட விஜய்யை நேரில் சந்திக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வாழ்நாள் லட்சியம் என்று கூறி இருந்தார்.

இந்த செய்தி விஜய் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டதும். விஜய் உடனே ஆதிஷ் பிரவீனை நேரில் அழைத்து வருமாறு கூறியுள்ளார்.

இதனை அறிந்த ஆதிஷ் பிரவின் உடனடியாக சென்னைக்கு வந்து விஜய்யை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மலையாளத்தில் உரையாடிய பின் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

மேலும் ஆதீஷ் பிரவின் இன்னும் பல விருதுகளை வென்று வாழ்க்கையில் பல சாதனைகள் புரிய வாழ்த்து தெரிவித்தார் விஜய்.

Vijay fulfilled wish of National award child artist Adhish Praveen

அஜித் பிறந்தநாளில் ‘விவேகம்’ செகண்ட் லுக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் உருவாகும் விவேகம் படத்தை பிரபல சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று மே 1ஆம் தேதி அஜித் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

எனவே, பிறந்தநாள் பரிசாக விவேகம் படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விவேகம் படத்தின் செகண்ட் லுக்கை மட்டுமே தற்போது வெளியிட்டுள்ளனர்.

இதனை அஜித்தின் பிறந்தநாள் பரிசாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Vivegam movie 2nd look released on Ajith Birthday

More Articles
Follows