நேற்று சிம்பு; இன்று தனுஷ்; கெளதம் மேனனுடன் தொடரும் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பவர் பாண்டி படத்திற்கு முன்பே, கௌதம் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டார் தனுஷ்.

இதில் பவர் பாண்டி படம் வெளியாகி பல நாட்கள் ஆகிவிட்டது.

ஆனால் கார்த்திக் சுப்புராஜ் படம் இதுவரை தொடங்கவில்லை. இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கிவிடும் எனத் தெரிகிறது.

இதனிடையில் கெளதம் மேனன் இயக்கி வந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் சூட்டிங் கலந்துக் கொண்டார் தனுஷ்.

இடையில் என்ன நடந்ததோ? விஐபி2, வடசென்னை, ஹாலிவுட் பட என பிஸியாகிவிட்டார் தனுஷ்.

தனக்கு பேசிய சம்பளத்தை இன்னும் கொடுக்காமல் கௌதம் மேனன் இழுத்தடிப்பதால், தனுஷ் அப்படத்தை முடித்துக் கொடுக்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன், கௌதம் மேனன் தயாரித்து இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கும் சிம்புவுக்கும் சம்பள பாக்கி வைக்கப்பட்டு, பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னரே அப்படத்தை சிம்பு முடித்துக் கொடுத்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Do you Know Why Enai Noki Paayum Thota getting delay

விரைவில் டிடிஎச்சில் புதுப்படங்கள் ரிலீஸாகும்… விஷால் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜிஎஸ்டி உடன் தமிழக அரசின் வரி விதிப்பும் சேர்ந்துள்ளதால், சினிமா தியேட்டர்கள் ஸ்டிரைக்கை அறிவித்துள்ளனர்.

எனவே இன்றுமுதல் தமிழகத்தில் உள்ள 1,100 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் தங்கள் படங்களை ரிலீஸ் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளதாவது…

பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம்.

தயாரிப்பாளர்களை கலந்து ஆலோசித்துவிட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அவர்களின் முடிவை அறிவித்திருக்கலாம்.

பெரிய நடிகர்களின் படங்கள் ஓடிக் கொண்டிருந்தால் இதுபோன்ற முடிவை அவர்கள் எடுத்திருக்க மாட்டார்கள்.

வருங்காலத்தில் டிஜிட்டல் மற்றும் டிடிஎச்சில் புதிய படங்களை வெளியிட முடிவெடுத்துள்ளோம்.

எந்தவொரு தயாரிப்பாளரும் பாதிக்கப்படக்கூடாது.” என்றார்.

New movies will be released in DTH says Actor Vishal

ரஜினி ஒரு கோழை; அரசியலுக்கு வரமாட்டார்… – அன்புமணி (பாமக)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் அரசியல் சிஸ்டம் சரியில்லை. எனவே போர் வரும்போது சந்திப்போம் என தன் அரசியல் பிரவேசத்தை மறைமுகமாக கூறி சென்றார் ரஜினிகாந்த்.

இதனையடுத்து ரஜினியை ஆதரித்தும், எதிர்த்தும் பல்வேறு கருத்துக்கள் தினம் தினம் வலம் வருகின்றன.

இந்நிலையில், பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நடந்த தாமிரபரணி ஆறு பாதுகாப்பு கூட்டத்தில் பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசும்போது… தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யாவிட்டால் அது சென்னை கூவம் ஆறு போல் ஆகிவிடும் என எச்சரித்தார்.

இதனையடுத்து ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவர் பேசியதாவது…

“எனது திருமணத்திற்கு முன்பே ரஜினி அரசியலுக்கு வருவார் என பேசப்பட்டது.

எனது பேரன் திருமணத்தின் போது கூட அவர் அரசியலுக்கு வரமாட்டார். அவர் தைரியமானவராக இருந்தால் உடனே வரவேண்டும்.

வருவேன், வருவேன் என மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கும் ரஜினி கோழைத்தனம் கொண்டவர்.” என்றார்.

ஒருவேளை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை ரஜினி வலியுறுத்தினால், அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்பேன்.’ என குறிப்பிட்டார்.

Rajini dont have courage so he wont enter politics says Anbumani Ramadoss

முதன் முறையாக சூர்யாவுடன் இணையும் ஜிவி பிரகாஷ்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இப்படத்தின் மூலம் அனிருத், முதன்முறையாக சூர்யா படத்திற்கு இசையமைத்து வருவது நாம் அறிந்ததே.

இந்நிலையில் சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்திற்கு இசையமைக்க ஜி.வி.பிரகாஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

இதுவரை இவர்கள் இணைந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை இறுதிச்சுற்று சுதா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Suriya and GV Prakash teamsup first time for new project

காலா ஓப்பனிங் சாங் இதுதானா? ரஜினிக்கு தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் காலா.

மருத்துவ பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று இருந்தாலும், அவர் இல்லாத காட்சிகளை மும்பையில் படமாக்கி கொண்டிருக்கிறார் ரஞ்சித்.

தனுஷ் தயாரித்து வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் விநிதன் என்ற பாடல் ஆசிரியர், தான் காலா படத்திற்காக ஓப்னிங் சாங் இது என பாடல் வரிகளை பதிவிட்டுள்ளார்.

இது ரஜினி மற்றும் படக்குழுவினருக்கு தெரியுமா? எனத் தெரியவில்லை.

மேலும் இப்பாடலை ரஜினிக்கு அர்ப்பணிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதை படக்குழு உறுதி செய்யவும் இல்லை. மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Lyricist_Vinithan‏ @Vinithan_Offl
எனது வரிகளில் உருவான #காலா பாடல் வரிகள் வெளியீடு #KaalaOpeningSong #MySongLyrics #விநிதன் Dedicate to @superstarrajini

Kaala movie Opening Song for Rajinikanth

தியேட்டர்கள் ஸ்டிரைக்: முதல் ஆளாக வந்து சம்பளத்தை குறைத்த மதன்கார்க்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி 28% (சரக்கு மற்றும் சேவை வரி) விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சினிமா டிக்கெட்டுக்கு மேலும் 30% வரி விதிக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன.

இதனால் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் செய்வதறியாமல் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வைரமுத்துவின் மகனும் பாடல் ஆசிரியருமான மதன்கார்க்தி தன் ட்விட்டர் பக்கத்தில் இப்பிரச்சினையை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் தன் சம்பளத்தில் 15% குறைத்துக் கொள்ள தயாராகவிருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

தான் நேசிக்கும் சினிமா அழிந்துவிடக் கூடாது என்பதறக்காக முதல் ஆளாக வந்து, தன் சம்பளத்தை குறைக்க ஒப்புக் கொண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Madhan Karky‏Verified account @madhankarky
Disheartening to see cinema halls closed. Hope the tax is revised and the industry gets back on track.

Madhan Karky‏Verified account @madhankarky
Until the revision, I am willing to reduce 15% off my remuneration for songs and dialogues, if that would help the industry.

More Articles
Follows