சித்தார்த்-ஜிவி. பிரகாஷ் இணையும் படத்தை தொடங்கினார் சசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து சசி ‘இரட்டை கொம்பு’ என்ற ஒரு படத்தை இயக்குவதாக இருந்தார்.

ஆனால் அந்த படம் என்ன ஆனதோ? தெரியவில்லை.

தற்போது சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடிக்கும் ஒரு படத்தை இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் துவங்கியது.

இப்படத்திற்கு சித்துகுமார் இசையமைக்க பிரசன்னா ஒளிப்பதிவு செய்கிறார்.

மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.

Siddharth and GV Prakash join hands with director Sasi

சிவாஜி-கமலுக்கான படம்தான் *சீதக்காதி*; விஜய்சேதுபதி ஓபன் டாக்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொதுவாக கலை பகுப்பாய்வு செய்யப்படும்போது அல்லது பாராட்டப்படும்போது, அது நிச்சயமாக ‘Soulful’ என்ற வார்த்தையால் போற்றப்படும்.

ஒரு உன்னத கலைஞரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க வகையில் வாழ்நாள் மைல்கல் சாதனையாக ஒரு படம் அமையும். அப்படிவிஜய் சேதுபதி கருதும் ஒரு கதாபாத்திரத்துக்குள் வந்திருக்கிறார் “சீதக்காதி” படம் மூலமாக.

சீதக்காதியின் முதல் பார்வையான ‘மேக்கிங் ஆஃப் ஐயா’ வை விஜய் சேதுபதி கொண்டாடும் நேரத்தில், தனது உற்சாகத்தை வார்த்தைகளை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

“சீதக்காதி சிவாஜி கணேசன் சார் அல்லது கமல்ஹாசன் சார் போன்ற லெஜண்ட் நடிகர்களுக்கு பொருத்தமான ஒரு படம்.

ஆரம்பத்தில், பாலாஜி தரணீதரன் இதில் நடிக்க தமிழ் சினிமாவின் சில பெரிய நடிகர்களை நினைத்திருந்தார். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

கைகளில் வேறு எந்த ஆப்ஷனும் இல்லாமல், அவர் என்னை அதில் நடிக்க வைக்க விரும்பினார். இந்த படத்திற்கு செய்ய வேண்டியதை சரியாக செய்து உள்ளேன் என்று நான் நம்புகிறேன்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி என்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், அவர் தோற்றம் எப்படி இருக்கும் என நாம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும்போது, விஜய் சேதுபதி அதை பற்றி கொஞ்சம் கூறுகிறார்.

அதில், “நான் ஒரு 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறேன். சீதக்காதி ஒரு ஆத்மார்த்தமான படம், அது கலைக்கு முடிவே இல்லை, சாகாவரம் பெற்றது என்ற செய்தியை சொல்லும்.

அது யாரோ ஒருவரின் அல்லது மற்றொருவரின் மூலம் வாழும். என் 25வது படமாக இந்த அற்புதமான படம் அமைவதற்கு நான் மிகவும் பாக்கியவானாக இருக்கிறேன்” என்றார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற மிகச்சிறந்த நகைச்சுவை படத்தை தந்த விஜய் சேதுபதி மற்றும் பாலாஜி தரணீதரன் ஆகியோரின் காம்பினஷனில், இதுவரை பார்க்காத ஒரு படம் எங்களுக்கு அமைந்தது மகிழ்ச்சியளிக்கிறது.

கோவிந்த் மேனன் இசையமைத்திருக்கும் இந்த படத்துக்கு சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். Passion ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கிறார்கள்.

Seethakathi movie is for actors like Sivaji and Kamal sir says Vijay Sethupathi

 

ராமகிருஷ்ணன் இயக்கத்தில் பிரபு உடன் இணையும் இசக்கி பரத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மில்லியன் டாலர் மூவிஸ் சார்பாக K.கார்த்திக்கேயன் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.

S.D.விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய “கோலி சோடா 2” படத்திலும், இயக்குனர் சமூத்திரகனி – சசிக்குமார் கூட்டணியில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் “நாடோடிகள் 2” படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ள நடிகர் இசக்கி பரத் பெயரிடப்படாத இப்படத்தின் கதையின் நாயகனாக நடிக்கின்றார்.

இவருடன் முக்கிய வேடத்தில் “இளையதிலகம்” பிரபு நடிக்கிறார். இவர்களுடன் “நான் கடவுள்” ராஜேந்திரன், சித்ரா லட்சுமனன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

மேலும் முன்னனி கதாநாயகிகளுள் ஒருவர் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்.

இயக்குனர் விக்ரமனிடம் பல படங்களில் துணை/இணை இயக்குனராக பணியாற்றியவரும், கோலி சோடா 2 படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவருமான ராமகிருஷ்ணன் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா கிளாப் அடிக்க, சிவாஜி பிலிம்ஸ் குமார் கேமரா ஆன் செய்ய, இயக்குனர் பாலாஜி சக்திவேல் இப்படத்தின் முதல் காட்சியை படமாக்கினார்.

சென்னை கடற்கரை அருகே இப்படத்திற்காக பிரம்மாண்டமாக ரெஸ்டாரண்ட் அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Golisoda 2 fame Isakki Bharath join with with Prabu for new project

 

கடைக்குட்டி சிங்கத்திற்கு கிடைத்த கௌரவம்; துணை ஜனாதிபதி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் பட அண்மையில் வெளியானது.

பாண்டிராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ், விஜி சந்திரசேகர், பானுப்ரியா, சூரி, பொன்வண்னன், இளவரசு, சரவணன், மாரிமுத்து முதலானோர் நடித்திருந்தனர்.

இந்த படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தெலுங்கில் ‘சின்ன பாபு’ என்ற பெயரில் வெளியாகி அங்கும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை பார்த்த பாஜ. கட்சியை சேர்ந்தவரும், துணை குடியரசு தலைவருமான வெங்கய்யா நாயுடு தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

அதில், ‘சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான ‘சின்ன பாபு’ (தமிழில் – ‘கடைக்குட்டி சிங்கம்) திரைப்படத்தை பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரஸ்யமான நல்ல படம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்!

ஒரு ஜனாதிபதி ஒரு திரைப்படத்தை பார்த்து பாராட்டு தெரிவிப்பது என்பது அரிதான நிகழ்வாகும்.

எனவே இப்படக் குழுவினருக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவமாக இது பார்க்கப்படுகிறது.

நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் இதற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Vice President of India Venkaiah Naidu praises Kadaikutty Singam

ஆர்.டி.ராஜா பட நிறுவனத்தை காப்பியடிக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தான் தயாரிக்கும் படத்தின் எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் அதை மிக மிகப் பிரம்மாண்டமாக செய்பவர் 24ஏஎம் ஸ்டூடீயோஸ் நிறுவன அதிபர் ஆர்.டி. ராஜா.

தங்கள் பட சூட்டிங் நிறைவடையும் போது அந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நன்றி சொல்வதையே ஒரு விழாவாக எடுப்பார்.

வேலைக்காரன், சீமராஜா படங்களுக்கும் இதை செய்தார்.

தற்போது இதே வரிசையில் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார்.

இவர் முதன்முறையாக தயாரித்துள்ள கனா படத்தின் சூட்டிங் இன்றோடு எவ்வித பிரச்சினையும் இல்லாமல் நிறைவடைந்துள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று (17-7-18) மாலை சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படதை அருண்ராஜா காமராஜா இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.

’மரகதநாணயம்’ படத்திற்கு இசை அமைத்த திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார்.

Sivakarthikeyan decided to give farewell to his Kanaa team

தன் சம்பளத்தை நா. முத்துகுமார் குடும்பத்திற்கு கொடுத்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என வலம் வந்த சிவகார்த்திகேயன் முதன்முறையாக கோலமாவு கோகிலா படத்திற்காக பாடலாசிரியராக அவதாரம் எடுத்தார்.

நயன்தாரா நாயகியாக நடித்த இப்படத்தை லைக்கா தயாரிக்க, அனிருத் இசையமைத்து இருக்கிறார்.

அறிமுக இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் கல்யாண வயசு என்ற பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார்.

இப்பாடலில் நயன்தாராவை ஒரு தலையாக காதலிப்பார் யோகி பாபு.

இந்த பாடல் சிட்டி முதல் பட்டி தொட்டி வரை பிரபலமானது.

ஆனால் இந்த பாடலுக்காக சிவகார்த்திகேயன் சம்பளம் எதையும் வாங்கவில்லையாம்.

தனக்கு கொடுக்க நினைக்கும் தொகையை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குடும்பத்திற்கு கொடுக்க சொல்லிவிட்டாராம்.

சிவகார்த்திகேயன் நடித்த முதல் படத்தில் நா.முத்துக்குமார் பாடல் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan given his salary to Na Muthukumar family

More Articles
Follows