ஜி.வி.பிரகாஷ்-ராஜேஷ் கூட்டணியில் இணையும் சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘ப்ரூஸ் லீ’ மற்றும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.

ராஜேஷ் இயக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் ஆனந்தி, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இப்படக் காட்சிகளை மலேசியாவில் படமாக்கினர்.

இந்நிலையில் இப்படத்தில் ராஜேஷின் ஆஸ்தான நடிகர் சந்தானம் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறாராம்.

என்னதான் தனி ஹீரோவாக சந்தானம் மணக்க ஆரம்பித்தாலும் தனக்கு திருப்புமுனை கொடுத்த இயக்குனரின் படத்தில் நடிப்பது பாராட்டுக்குரியதுதான்.

விரைவில் ஜெய்-அஞ்சலி காதல் திருமணம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் இணைந்து நடிக்கும்போது ஒரு சில நடிகர், நடிகைகளுக்கு காதல் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி விடுகிறது.

எனவே திரையில் இணைந்த இவர்கள் நிஜ வாழ்விலும் இணைகிறார்கள்.

இதுபோல் பல நட்சத்திர தம்பதிகளை நாம் பார்த்திருக்கிறோம்.

தற்போது நட்சத்திர தம்பதிகள் ஜெய் மற்றும் அஞ்சலி இணைய வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

எங்கேயும் எப்போதும் படத்தை தொடர்ந்து மீண்டும் பலூன் படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

இந்நிலையில் இவர்கள் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக தனியார் டிவி ஒன்று தெரிவித்துள்ளது.

அஜித்துக்காக விக்ரமுக்கு கல்தா கொடுக்கும் காஜல்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரு இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கருடா படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க கமிட் ஆனார்.

சில்வர்லைன் பிலிம் பேக்டரி இப்படத்தை தயாரிக்கவுள்ளது.

ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படாமல் தாமதம் ஆகிவருகிறது.

இதனிடையில் சிவா இயக்கும் அஜித்தின் ஏகே 57 படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் காஜல்.

இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் துவங்கவுள்ளதால் கால்ஷீட் பிரச்சினை ஏற்படும் என தெரிகிறது.

எனவே அஜித் படத்தில் நடிக்கவிருப்பதால் விக்ரம் படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலகக்கூடும் எனத் தெரிகிறது.

களம் இறங்கும் 3 ஹீரோக்கள்… சிக்கலில் சிவகார்த்திகேயன் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ரெமோ படம் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஜீவா நடித்துள்ள கவலை வேண்டாம் படமும் அதே நாளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வந்தன.

இரண்டு படங்கள் என்றால் ஓரளவு கணிசமான தியேட்டர்கள் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையில் இருந்த ரெமோ குழுவினருக்கு தற்போது பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.

இதே நாளில் விஷால் நடித்துவரும் கத்தி சண்டை மற்றும் ஜெயம் ரவி நடித்துள்ள போகன் படமும் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இன்னும் வேறு படங்கள் களத்தில் குதித்தால் தியேட்டர்களின் எண்ணிக்கையும் வசூலும் குறைய வாய்ப்புள்ளது.

அமலாபால் விவாகரத்து குறித்து மனம் திறந்த மாமனார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் விஜய், நடிகை அமலா பால் இருவரும் காதலித்து கடந்த 2014ஆம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் விரைவில் விவாகரத்து செய்யவுள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் விஜய்யின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான ஏ.எல். அழகப்பன் இப்பிரச்சினை குறித்து பேசியதாவது…

என் மகன் விஜய்-அமலாபால் தொடர்பாக வெளிவந்துள்ள செய்திகள் உண்மையே.

கல்யாணத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என கூறிய அமலா தொடர்ந்து படங்களில் நடித்தார்.

கணவர் விஜய்யிடம் கூட கலந்தாலோசிக்காமல் அவரே முடிவுகளை எடுத்தார்.

இரு குடும்பத்தாரும் அவரிடம் பேசிபார்த்தும் பலனில்லை. அந்த பெண் யார் பேச்சையும் கேட்க தயாரில்லை.

எங்களுக்கு மகனின் வாழ்க்கை முக்கியம். எனவே சட்டரீதியாக இந்த முடிவை எதிர்கொள்கிறோம்” என்றார்.

தெலுங்குக்காக பெயரை மாற்றிய விக்ரம்–விஷால் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் படங்களுக்கு ஆந்திராவிலும் நல்ல மார்கெட் உள்ளது.

எனவே ஒரு படம் தயாராகும்போதே தெலுங்கு மார்கெட்டையும் குறிவைத்தே படத்தை தயாரிக்கின்றனர்.

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி, ஜெகபதி பாபு மற்றும் தருண் அரோரா உள்ளிட்டோர் நடித்து வரும் படத்திற்கு தமிழில் ‘கத்தி சண்டை’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

தற்போது இப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு Okadochaadu (என்னுடன் மோது) எனப் பெயரிட்டுள்ளனர்.

அக்டோபர் 7ஆம் தேதி இப்படம் இரண்டு மொழிகளில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்து வரும் இருமுகன் படத்திற்கும் தெலுங்கில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Inkokkadu (இன்னொருத்தன்) எனப் பெயரிட்டுள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் தெலுங்கு உரிமையை நீலம் கிருஷ்ண ரெட்டி, ரூ. 11 கோடிக்கு, தன் என்கேஆர் நிறுவனம் சார்பாக வாங்கியிருக்கிறார்.

More Articles
Follows