கழுகு 2 படத்திற்காக சகலகலா வள்ளியாக மாறிய யாஷிகா ஆனந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகும் வரிசையில் சில வருடங்களுக்கு முன் கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்து வெற்றி பெற்ற கழுகு படத்தின் இரண்டாம் பாகம் கழுகு-2. கிருஷ்ணா – பிந்துமாதவி ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார்.

இந்தப்படத்தை பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான நாய்கள் வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கிருஷ்ணா.

இந்த படத்தில் இன்னும் ஒரு முக்கியமான சிறப்பம்சமாக நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சி மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் நன்கு அறிமுகமாகியுள்ளார்.

எனவே அவரை ஒரு பாடலுக்கு ஆடவைக்க முடிவு செய்து அவரிடம் கூறியபோது, பாடலின் முக்கியத்துவத்தை உணர்ந்து சந்தோஷத்துடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் யாஷிகா..

‘சகலகலா வள்ளி’ எனும் இந்தப்பாடல் கிட்டதட்ட 300 நடன கலைஞர்களுடன் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. பிரபல நடன இயக்குனர் தீனா இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

கழுகு 2 படத்தின் ஹைலைட்டுகளில் ஒன்றாக அமையும் இந்த பாடல் இன்று வெளியானது.

‘யு’ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் விரைவில் வெளிவரும்.

என்னை உசுப்பேத்தியே கார்த்திக் சுப்பராஜ் நடிக்க வைச்சுட்டார். : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேட்ட பட பாடல்களை வெளியீட்டுக்கு பின்னர் ஓய்வு எடுப்பதற்காக கடந்த டிசம்பர் 22ந்தேதி அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த்.

மூன்று வாரங்கள் ஓய்விற்கு பிறகு சென்னை திரும்பினார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் ‘பேட்ட’ திரைப்பட ரிலீசை ரசிகர்கள் கொண்டாடி வருவது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

20 வருடங்களுக்கு முன்பு பார்த்த ரஜினியை திரையில் பார்த்ததாக கூறுகிறார்களே அது குறித்து உங்கள் கருந்து என்ன? என்றும் கேட்டனர்.

‘பேட்ட ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன். மிகவும் சந்தோஷம்.

ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதே எனது வேலை.

பேட்ட திரைப்படம் சிறப்பாக வந்ததற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்தான் காரணம். என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி நடிக்க வைத்தார்கள்.” என்றார்.

Rajinikanth reaction towards Petta release and fans response

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுக்கு பேரனாக நடிக்கும் சிம்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் மற்றும் ஷங்கர் இணைந்த இந்தியன் 2 படம் இந்தியளவில் பெரும் பாராட்டை பெற்றது.

தற்போது 22 ஆண்டுகளுக்கு பிறகு ‘இந்தியன் 2’ படத்திற்காக இருவரும் இணைகின்றனர்.

இதில் முக்கிய வேடத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இந்நிலையில் மற்றொரு முக்கிய கேரக்டரில் சிம்பு நடிப்பதாக கூறப்படுகிறது.

இதில் தாத்தா கமல்ஹாசனுக்கு பேரனாக சிம்பு நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.

Simbu act as Grand son to Kamalhassan in Indian 2

கடாரம் கொண்டான் சூட்டிங் ஓவர்.; 2 படங்களில் நடிக்க ரெடியான விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜேஷ் எம்.செல்வா இயக்கி வரும் `கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம்.

இன்னும் சில காட்சிகளும் ஒரு பாடல் சூட்டிங் மட்டும் பாக்கி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

இப்பட டீசரை வருகிற 15-ஆம் தேதி வெளியிட உள்ளனர். வருகிற ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.

கடாரம் கொண்டான் சூட்டிங் நிறைவு பெற்றதால் அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் பட இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் விக்ரம்.

அதன்பின்னர் மகாவீர் கர்ணா படத்தில் நடிக்கவுள்ளார்.

Kadaram Kondan shoot wrap up Vikram ready to act in 2 movie

மீண்டும் ரஞ்சித் தயாரிப்பில் கயல் ஆனந்தி.; தினேஷுக்கு ஜோடியானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் தயாரித்து வரும் படம் `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’.

இரஞ்சித்திடம் உதவியாளராக பணியாற்றிய அதியன் ஆதிரை என்பவர் இப்படத்தை இயக்கி வருகிறார்.

படத்தின் நாயகன் தினேஷ் இதில் லாரி டிரைவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கயல் ஆனந்தி நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.

விசாரணை படத்திலும் இந்த ஜோடி இணைந்து நடித்திருந்தனர்.

ரஞ்சித் முதன்முறையாக தயாரித்த பரியேறும் பெருமாள் படத்திலும் ஆனந்தி தான் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் அனேகா, ரித்விகா, லிஜீஷ், முனீஸ்காந்த், ரமேஷ் திலக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, தென்மா என்பவர் இசையமைக்கிறார்.

Kayal Anandhi team up with Dinesh in Irandam Ulagaporin Kadaisi Gundu

தமிழுக்கு வரும் ராம்சரண் படத்தில் மீண்டும் இணைந்த பிரசாந்த்-சினேகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சூப்பர் ஹீரோ ராம் சரண் நாயகனாக நடிக்கும் நடிப்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படமான “வினயை விதேயா ராமா” தமிழில் வெளியாகிறது.

பிரபல தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு இப்படத்தை இயக்குகிறார்.

‘பாரத் என்னும் நான்’ என்ற படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதை கவர்ந்த கியாரா அத்வானி கதாநாயகியாகவும் விவேக் ஓப்ராய் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.

மேலும் பிரசாந்த், சினேகா, மதுமிதா, முகேஷ் ரிஷி, ஜெபி, ஹரீஷ் உத்தமன், ஆர்யன் ராஜேஷ், ரவி வர்மன் என்று பெரிய நட்சத்திர வரிசை மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

தமிழில் ‘விரும்புகிறேன்’, ஆயுதம், பொன்னர் சங்கர் ஆகிய படங்களில் பிரசாந்த், சினேகா இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்ப பின்னணியில் காதல், கலகலப்பு, அரசியல், செண்டிமெண்ட், வன்முறை, சாஹசம், என்று பொழுது போக்கு அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த பிரம்மாண்ட படமாக “வினயை விதேயா ராமா” உருவாகியுள்ளது.

தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க ரிஷி பஞ்சாபி, பண்டி ரமேஷ் ஆகியோர் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளனர். இப்படத்தின் பாடல் காட்சிகள் பிரம்மாண்ட அரங்குகளில் படமாக்கப்பட்டுள்ளது.

கிளைமாக்ஸ் சண்டை காட்சி படம் பிடிக்க/ படமாக்க மட்டும் பதினோரு கோடி ரூபாய் சிலவிடப்பட்டுள்ளது.கனல் கண்ணன் சண்டை பயிற்சி அளித்துள்ளார்.

டி வி வி என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்து பிரகாஷ் பிலிம்ஸ் வழங்கும் “வினயை விதேயா ராமா”பிப்ரவரி முதல் வாரம் தமிழ் நாடு மற்றும் கேரளமெங்கும் வெளியாகிறது.

Ram Charan Starrer Vinaya Vidheya Rama Gets Dubbed In Tamil

More Articles
Follows