செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுடன் இணையும் நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க அனிருத் இசையமைக்கின்றார்.

இதனையடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா.

இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ராகுல் ப்ரித்திசிங் நடிக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

விரைவில் இதற்கான அறிவிக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

சிவகார்த்திகேயனுக்கு கொடுத்த 2 வெற்றியை தனுஷுக்கும் கொடுப்பாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் முதன்முறையாக இரு வேடங்களில் நடித்த படம் கொடி.

இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார்.

இதே இயக்குனர் மீண்டும் தனுஷூக்காக ஒரு கதையை எழுதியுள்ளதாகவும் விரைவில் இருவரும் இணைந்து பணிபுரியவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இத்தகவலை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

தனுஷ் தயாரிப்பில் உருவான ‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘காக்கி சட்டை’ ஆகிய படங்களை துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார்.

இவையிரண்டும் சிவாவுக்கு மாபெரும் வெற்றிப் படங்களாய் அமைந்தன.

இதுபோல் தனுஷுக்கும் இரண்டு வெற்றிகளை கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கடவுள் தனுஷின் காலை தொட்டு கும்பிடனும்… சுசித்ரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷை கடவுள் ரேஞ்சுக்கு கொண்டாடும் ரசிகர்கள் உண்டு.

ஆனால் திரையுலகை சேர்ந்தவரே தனுஷை அப்படி சொல்லியிருக்கிறார்.

அவர்தான் பின்னணி பாடகி சுசித்ரா. அவரது டவீட்கள் சில இதோ…

மேலும் இவருடைய ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கலாமென பலர் நினைத்தாலும், அப்படி எதுவும் நடக்கவில்லை என அவரே தெளிவுபடுத்தியுள்ளார்.

Dhanush is God and I want to touch his feet. dhanus

— Suchi (@suchitrakarthik)

#Dhanush is a God!!! It has been announced by @ishafoundation

— Suchi (@suchitrakarthik) February 20, 2017
Account not hacked – just to clarify. All tweets here are officially Suchitra Karthik’s #gahgdn #hajsknf RK https://t.co/Rthz0KMbWf

— Suchi (@suchitrakarthik

நான் பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் ரசிகன் – அர்மேனிய இயக்குநர் சரிக் !!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அர்மேனிய இயக்குநர் சரிக் ஆண்ட்ரியாசின் , இவர் இயக்கிய அமெரிக்கன் எனும் திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட் திரையுலகத்துக்குள் 2014 நுழைந்தார். தற்போது இவர் ரஷ்ய மொழியில் இயக்கி உள்ள கார்டியன்ஸ் – தி சூப்பர் ஹீரோஸ் திரைப்படம் ஒரே சமயத்தில் உலகமெங்கும் 50 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் சரிக்குக்கு இந்தியாவின் புகழ் பெற்ற நடிகைகளான ஐஸ்வர்யா ராய் , பிரியங்கா சோப்ரா ஆகியோரை நன்றாக தெரியுமாம். அதுமட்டுமல்ல இயக்குநர் சரிக் பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மிகப்பெரிய ரசிகராம் , வாய்ப்பு அமைந்தால் அவருடன் பணியாற்ற ஆசை என்று கூறுகிறார். இந்த வருடம் நடைபெறவுள்ள ஆஸ்கர் விருதுகளின் விருது பட்டியலில் சிறந்த துணை நடிகருக்கான பிரிவில் “ லையன் “ திரைப்படத்துக்காக தேர்வாகி உள்ள தேவ் படேலை இவருக்கு மிகவும் பிடிக்குமாம்.

நான் மிதுன் சக்ரவர்த்தி நடித்த நிறைய படங்களை பார்த்துள்ளேன். அவருடைய தோற்றம் , நடிப்பு மற்றும் சோவியத் யூனியனில் அவருக்கு இருந்த பிரபலம் என அனைத்தும் என்னை கவர்ந்தது. மிதுன் அவர்களின் டிஸ்கோ டான்சரில் இடம் பெற்ற “ ஜிம்மி ஜிம்மி “ என்ற சார்ட் பஸ்டர் பாடல் சோவியத் யூனியனில் மிக பிரபலம்.

ராஜ் கபூர் – நர்கிஸ் நடிப்பில் வெளிவந்து உலக அளவில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்ற “ அவாரா “ திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்ற இயக்குநர் சரிக் , தனக்கு வரும் புதிய வாய்ப்புகளை ஏற்றுகொள்ள தயார் என்றும். இந்தியாவில் படம் இயக்கவும் , இந்தியாவை பற்றிய படத்தை இயக்கவும் தனக்கு ஆசை என்றார்.

32 வயதாகும் இயக்குநர் சரிக் The Pregnant , Moms and That was the Men’s world போன்ற தரமான திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் சுசீந்திரனுக்காக தயாரிப்பாளரான “அறம் செய்து பழகு“ தயாரிப்பாளர் ஆண்டனி !!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “அறம் செய்து பழகு “ இப்படத்தில் கதையின் நாயகர்களாக “ விக்ராந்த் “ “ சந்தீப் கிஷன் “ ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. அன்னை பிலிம் ஃபாக்டரி வழங்கும் இப்படத்தை ஆண்டனி தயாரிக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பிரபலாமான தயாரிப்பு நிறுவனங்களான சி டிவி , ஏ.வி.எம் , ஸ்டுடியோ கிரீன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களில் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்து முதலில் சி டிவி நிறுவனத்தில் பணியாற்றிய இவர். அதன் பின்னர் 2000 ஆண்டில் இருந்து ஏ.வி.ஏ.எம் நிறுவனத்தில் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்ற துவங்கினார். 2000 ஆண்டில் இருந்து 2008 ஆண்டு வரை ஏ.வி.எம் நிறுவனத்தில் தயாரிப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களிலும் இவர் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றினார்.

அதன் பின் 2008ஆம் ஆண்டில் இருந்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்ற துவங்கினார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “ நான் மகான் அல்ல “ திரைப்படத்தில் பணியாற்றிய போது இயக்குநர் சுசீந்திரன் உடன் இவருக்கு நல்ல நட்பு ஏற்ப்பட்டது. அதை தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரனுடன் நிறைய படங்களில் பணியாற்றிய பின்னர். இயக்குநர் சுசீந்திரன் விரும்பியதால் தயாரிப்பு மேற்பார்வையாளர் ஆண்டனி இப்போது “அறம் செய்து பழகு “ திரைப்படத்தின் தயாரிப்பாளராகியுள்ளார்.

முதல் படமே தயாரிப்பாளரான உங்களுக்கு இயக்குநர் சுசீந்திரன் போன்ற மிக சிறந்த இயக்குநருடன் அமைந்துள்ளது அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மற்றும் “அறம் செய்து பழகு “ திரைப்படம் என்ன மாதிரியான ஒரு படமாக இருக்கும் ?? என்று நாம் கேட்டபோது “ ஆம் , இது இயக்குநர் சுசீந்திரன் எனக்கு கொடுத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு என்று தான் நான் சொல்வேன் , என்னென்றால் என்னை இந்த “அறம் செய்து பழகு “ திரைப்படத்தை தயாரிக்க சொன்னதே இயக்குநர் சுசீந்திரன் தான். என்னை தயாரிப்பாளராக்கிய இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி.

“ அறம் செய்து பழகு “ திரைப்படம் இயக்குநர் சுசீந்திரனின் மாபெரும் வெற்றி படங்களான “ நான் மகான் அல்ல “ , “ பாண்டிய நாடு “ போன்ற ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்றார் தயாரிப்பாளர் ஆண்டனி.

பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என்னுடைய துறையில் பணியாற்றும் என் சக கலைஞர்களான பாவனா மற்றும் வரலக்ஷ்மி ஆகியோருக்கு நடந்த சம்பவங்கள், எனக்கு மிகுந்த மன வேதனையை அளித்து இருக்கின்றது. இந்த நேரத்தில் அவர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாய் இருப்பேன் என்பதைனை உறுதிப்படுத்தி கொள்ள விரும்புகின்றேன். எந்தவித பயமுமின்றி அவர்களுக்கு நடந்ததை வெளிப்படையாக தெரிவித்த அவர்களின் தைரியத்தை பாராட்டுகின்றேன்.

இத்தகைய பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், நம் சமூதாயத்தில் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. பாலியல் துஷ்பிரயோகம், பலாத்காரம் என நாட்டின் ஒவ்வொரு மூலைகளிலும் நடக்கும் கொடுமைகளை அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் பெரும்பாலான பாதிக்கப்பட்ட பெண்கள் அதனை வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். அதற்கு முக்கிய காரணம், எங்கே இந்த சமுதாயம் இத்தகைய செயல்களுக்கு பாதிக்கப்பட்ட பெண்களையே காரணம் காட்டி விடுமோ என்று பயந்து தான். ‘தார்மீக போதனையாளர்கள்’ என்று கூறி கொண்டு வலம் வரும் ஒரு சிலர், பெண்கள் இவ்வாறு தான் உடை அணிய வேண்டும், இந்த இடங்களுக்கு மட்டும் தான் செல்ல வேண்டும் என கோட்பாடுகள் விதித்து, அதன் அடிப்படையில் தான் பெண்களின் குணங்களை யூகிக்கின்றனர். தங்களுக்கு என்ன நடக்கின்றது என்பதை கூட தெரிந்து கொள்ள இயலாத இந்த பச்சிளம் குழந்தைகளிடம், இத்தகைய தரம் தாழ்ந்த செயலில் ஈடுபடுபவர்களை அவர்கள் என்ன செய்ய போகிறார்கள். இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இப்படி 3 வயது, 7 வயது குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, குப்பை தொட்டியில் தூக்கி வீச படுவதை நாம் வேடிக்கை பார்த்து கொண்டே இருக்க போகிறோம்? ஒன்னும் தெரியாத இந்த பச்சிளம் குழந்தைகளின் இத்தகைய புகைப்படங்களை பார்க்கும் பொழுது, எனது நெஞ்சம் சுக்கு நூறாக உடைந்துவிட்டது. ஒரு தாயாக அந்த குழந்தைகளின் பெற்றோர்களின் வலி என்ன என்பதனை என்னால் உணர முடிகின்றது.

‘மதர் இந்தியா’ என்று பெண்மையை போற்றும் நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெண்களின் பெயர்களை கொண்ட நதிகள் ஓடும் நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆண் தெய்வங்களுக்கு சமமாக பெண் தெய்வங்களை வணங்க கூடிய நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தன்னுடைய உயிரில் சரி பாதியை தன்னுடைய துணைவிக்கு கடவுள் கொடுத்த வரலாற்று சம்பவங்களை நாம் கேள்வி பட்டிருக்கின்றோம். தன் கணவருக்கு வழங்கப்பட்ட தவறான தீர்ப்பை எதிர்த்து ஒரு ஊரையே எரித்த பெண்மணியின் வாழ்க்கையை பற்றி நாம் புராண கதைகளில் படித்து இருக்கின்றோம். அப்படி பெண்மையை போற்றிய நாட்டில், இப்போது ஏதோ சரி இல்லாமல் ஆகி விட்டது. பெண்கள் மதிப்புடனும், மரியாதையுடனும் வாழ்ந்த காலங்கள் யாவும் அழிந்து விட்டது. இது நம் நாட்டிற்கு ஏற்பட்ட மிக பெரிய அவமானம்.

தற்போது அந்த நிலைமையை மாற்ற வேண்டிய நேரமும், கடமையும் நமக்கு இருக்கின்றது. இத்தகைய மிருகத்தனமான செய்லகளுக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும் – பெண்களுக்கு தங்களின் மரியாதயை திரும்ப பெற்று தர நாம் குரல் கொடுக்க வேண்டும் – முன்பை போல பெண்கள் பாதுகாப்பாக இருக்க நாம் குரல் கொடுக்க வேண்டும் – இவை அனைத்துக்கும் மேலாக, இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை சட்டம் வழங்க வேண்டும் என்பதற்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். இனி பெண் குழந்தைகளை தவறான எண்ணத்தோடு நெருங்கும் ஒவ்வொரு ஆணுக்கும், இந்த தண்டைனை அவர்களின் மனதில் பயத்தை விதைக்க வேண்டும். நிர்பயா, நந்தினி, ரித்திகா, ஹாசினி போன்றவர்களுக்கு ஏற்பட்ட கோர சம்பவங்கள் இனியும் நடக்க கூடாது. எங்களுக்கு நீதி வேண்டும். எங்களுக்கு மரியாதை வேண்டும்.

இந்த தருணத்தில் நான் ஒரு சிறிய முயற்சியை எடுக்கின்றேன். ஒரு அம்மாவாக, என்னுடைய மகனுக்கு பெண்களை மதிக்கவும், அவர்களை மரியாதையுடன் நடத்தவும் அவனுக்கு சொல்லி தருவேன் என உறுதி மொழி எடுக்கின்றேன்.

கனத்த இதயத்துடன்

சினேகா (ஒரு பெண்)

More Articles
Follows