எந்திரனை மிஞ்சும் ‘2.ஓ’… ரஜினி ரசிகர்களுக்கு அதிரடி தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 2.ஓ.

ஏஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை லைக்கா நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இதன் முதல் பாகமான எந்திரன் படத்தில் வசீகரன் மற்றும் சிட்டி என இருவேடங்களில் ரஜினி நடித்திருப்பார்.

ஆனால் தற்போது அதனை மிஞ்சும் வகையில் இதில் மூன்று வேடங்களில் நடித்து வருகிறாராம்.

முதல் பாகத்தில் இறந்த வில்லனின் மகனாக சுதன்ஷூ பாண்டே நடித்திருக்கிறார்.

இவர் சிட்டி ரோபோவின் CODE-களை வைத்து புதிதாக ஒரு பவர்புல் ரோபோவை உருவாக்குகிறார்.

அதன்பின்னர் கெட்ட சிட்டி மற்றும் அக்‌ஷய்குமார் ஆகிய இரு ரோபோக்களை நல்ல ரஜினி ரோபா எப்படி அழிக்கிறார்?

அதற்கு சயின்ஸ்ட் வசீகரன் எப்படி உதவுகிறார் என்பதுதான் இதன் கதைக்களம் எனவும் தெரிய வந்துள்ளது.

இதில் ஆறு பாடல்கள் இடம் பெற்றாலும் படத்தின் விறுவிறுப்பு குறையாமல் இருக்க ஒரே ஒரு பாடலைதான் படத்தில் வைக்கவிருக்கிறார் ஷங்கர் என சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயனுக்கு பெருமை சேர்த்த ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ கடந்த அக்டோபர் 7ஆம் தேதி வெளியானது.

இப்படத்தின் 25வது நாளை இவரது ரசிகர்கள் இணையத்தளங்களில் டிரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் இந்த வெற்றியை கருணை இல்லங்களில் கொண்டாடி உள்ளனர்.

அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் மற்றும் தீபாவளி பட்டாசுகளை வழங்கியுள்ளனர்.

இதுபோன்ற செயல்கள் நிச்சயம் அவர்களது அபிமான நடிகர்களை பெருமையடைய செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சீனுராமசாமி இயக்கத்தில் மம்மூட்டி-எஸ்.ஏ.சந்திரசேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதி நடிப்பில் உருவான ‘தர்மதுரை’ படத்தை சீனுராமசாமி இயக்கியருந்தார்.

இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் சீனுராமசாமி.

இதில் மம்மூட்டி மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கிறார்களாம்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் இதன் சூட்டிங்கை தொடங்க திட்டமிட்டு இருக்கிறாராம் இயக்குனர் சீனுராமசாமி.

மீண்டும் ‘பேராண்மை’ கேரக்டரில் ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயம் ரவி நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தை இயக்குனர் விஜய் இயக்கவிருக்கிறார்.

இப்படத்தை ‘தி திங்க் பிக் ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

நாயகியாக சாயிஷா சைகல் நடிக்கிறார். இவர் இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகரான திலீப் குமாரின் பேத்தி ஆவார்.

திரு ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைபக்கிறார்.

இதில் ஜெயம் ரவி பழங்குடி இனத்தவராக நடித்து வருகிறாராம்.

இதற்கு முன்பே, பேராண்மை படத்தில் இதுபோன்ற கேரக்டரில் ஜெயம் ரவி நடித்திருந்த்து தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தனுஷ்-சிவகார்த்திகேயன் பெயரில் ஹாட்ரிக் அடித்த டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான எதிர் நீச்சல் மற்றும் காக்கி சட்டை ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருந்தார்.

மாபெரும் வெற்றிப் பெற்ற இந்த இரு படங்களையும் தனுஷ் தயாரித்திருந்தார்.

அண்மையில் வெளியான தனுஷின் கொடி படத்தையும் துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார்.

இப்படத்தை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்திருந்தார்.

இப்படம் வெளியாகும் நாள் அன்று தனுஷ் மற்றும் இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொடி படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிக் கொடி நாட்டியுள்ளது.

இதன் மூலம் துரை செந்தில்குமார் இயக்கிய 3 படங்களும் தொடர் வெற்றியைப் பெற்றுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணையும் நயன்தாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ்சிவன் இயக்கிய ‘நானும் ரெளடிதான்’ படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்தனர்.

தனுஷ் தயாரித்து இருந்த இப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

இந்நிலையில் மீண்டும் இந்த ஜோடி இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

‘டிமாண்டி காலனி’ படத்தை தொடர்ந்து, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்து வருகின்றனர்.

இதில் கௌரவ தோற்றத்தில் நடிக்கவிருக்கிறாராம் விஜய்சேதுபதி.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் திரைக்கதை, வசனத்தை எழுதுகிறார்.

கேமியோ பிலிம்ஸ் இண்டியா இப்படத்தை தயாரித்து வருகிறது.

More Articles
Follows