மீண்டும் 2.ஓ சூட்டிங்கில் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடிப்பில் ஷங்கர் பிரம்மாண்டமாக 3டியில் இயக்கியுள்ள படம் ‘2.0’.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்தது.

இதில் உள்ள ஒரு பாடல் ஒன்றை ஆகஸ்ட் மாதத்தில் பிரம்மாண்ட அரங்குகளில் படமாக்க இருக்கிறார்களாம்.

தற்போது அப்பாடலில் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

பிரம்மாண்டமான அரங்கில் சுமார் 12 நாட்கள் இப்பாடலை படமாக்க ஷங்கர் முடிவு செய்துள்ளார்.

இதற்காக எமி ஜாக்சன் சுமார் 10 நாட்கள் பயிற்சி மேற்கொள்ளவுள்ளாராம்.

பாஸ்கோ நடன இயக்குநராக பணிபுரிய உள்ள இப்பாடலுக்கு அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் இப்பாடலின் இசையை இறுதி செய்யும் பணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவுக்கு கொடுக்கப்பட இருந்த பட்டம், அரசியல்வாதியால் ரத்தானதா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் டாப் மோஸ்ட் நடிகர்கள் பலருக்கும் ஒவ்வொரு பட்டம் உள்ளது.

ரஜினிக்கு சூப்பர் ஸ்டார், கமலுக்கு உலகநாயகன், விஜய்க்கு தளபதி என அடிக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் சூர்யாவுக்கு இதுவரை எந்த பட்டமும் இல்லை. அவரும் இதை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் சில வருடங்களுக்கு முன், ‘புரட்சிப்புயல்’ என்ற பட்டத்தை தன் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்ளவிருந்தாராம்.

ஆனால் புரட்சிப்புயல் என்று அழைக்கப்பட்ட ஒரு பிரபல அரசியல்வாதியின் எதிர்ப்பால் அது ரத்து ஆனதாக கிசுகசுக்கப்படுகிறது.

எது உண்மையோ?

எனக்கு கிடைத்த பொக்கிஷம் அவர்… விஷால் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் துப்பறிவாளன்.

அரோல் கரோலி இசையமைத்துள்ளார்.

இப்படக்குழுவினர் சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அதில் விஷால் பேசும்போது…

கடந்த 8 வருடங்களாக மிஷ்கினுடன் பணிபுரிய ஆசைப்பட்டு கடைசியில் மிஸ்ஸாகிவிடும்.

இப்போது நிறைவேறியுள்ளது. எனக்கு கிடைத்த பொக்கிஷம் மிஷ்கின்.” என்று பேசினார்.

மீண்டும் காதல் மன்னனாக அஜித்… தல ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து விரைவில் வெளியாகவுள்ள படம் விவேகம்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து இதுவரை 2 பாடல்கள் வெளியாகிவிட்டன.

இந்நிலையில் நாளை வெளியாகவிருக்கும் ‘காதலடா’ என்ற மூன்றாவது சிங்கிள் வெளியாகிறது.

இது, அருமையான க்ளாசிக் பாடலாக இருக்கும் என்று அனிருத் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதனையறிந்த அஜித் ரசிகர்கள் மீண்டும் ஒரு காதல் மன்னன் என டிரெண்ட்டிங் செய்து வருகின்றனர்

ட்விட்டரில் இருந்து குஷ்பூ விலக இதான் காரணம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை குஷ்பூ தற்போது காங்கிரஸ் கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.

இதனிடையில் டிவியில் சில நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

மேலும் ட்விட்டரில் அவ்வப்போது நாட்பு நடப்புகளை பதிவிட்டு தன் கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் திடீரென ட்விட்டரில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

ட்விட்டருக்கு தான் அடிமையாகிவிட்டதாகவும், சில காலம் ஒதுங்கிவிட்டு, பின்னர் வந்து இணைவதாகவும் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

khushbusundar‏Verified account @khushsundar
Ok friends..hve decided 2 go off Twitter 4 sumtime..want 2 do start reading again..dis platform is like addiction..promise 3 cme back soon.

khushbusundar‏Verified account @khushsundar
Bye friends..happy twèeting..use tjis platform to build this nation n not 2 divide..keep hate n vengeance out..spread love,joy n peace.

முதுகெலும்பு இல்லாத கோழை கமல்… எச். ராஜா கடும் தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவுகளால், தமிழக அரசியல் களம் பயங்கர சூடுபிடித்துள்ளது.

மக்கள் பிரச்சினைகள் பல இருந்தாலும், அரசியல்வாதிகள் பலரும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து தங்கள் பதிலடிகளை கொடுத்து வருகின்றனர்.

கமலை ஸ்டாலின், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்கள் ஆதரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜ கட்சியை சேர்ந்த எச். ராஜா கடுமையாக சாடியுள்ளார்.

முடிவெடுத்தால் நான் முதல்வர் என்று கமல் ட்விட்டர் போட்டு இருப்பதாக அறிந்தேன்.

எல்லாருக்கும் கனவு காண உரிமை உள்ளது. அதுபோல் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

ஆனால் முதல்வர் பதவியில் இருப்பவர்கள் அச்சமில்லாதவர்களாக இருக்க வேண்டும்.

விஸ்வரூபம் படத்தின் பிரச்சினையின் போது, அழுது புலம்பி கதறியவர் கமல்.

பிரச்சினையை சந்திக்க தைரியமில்லாமல் இந்த நாட்டை விட்டே ஓடி விடுவேன் என கூறியிருந்தார்.

முதுகெலும்பில்லாத கோழை கமல். அவரை மக்கள் ஏற்க மாட்டார்கள். என பேட்டியளித்துள்ளார் எச் ராஜா.

More Articles
Follows