‘கடவுளும் ரசிகர்களும் பண்டிகையா மாத்திடுறாங்க…’ – ரஜினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்து வரும் 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது…

“ஒரு சான்ஸ் கொடுத்திருந்தால் அக்‌ஷய்குமார் கேரக்டரை நான் செய்திருப்பேன். அவர்தான் படத்தின் ஹீரோ.

இப்படத்தை உற்சாகமாக செய்தேன். இதன் ஸ்டோரி மிகவும் கவர்ந்துவிட்டது.

2.ஓ படம் ஹாலிவுட் படத்திற்கு நிகரானது. இந்திய சினிமாவே இப்படத்திற்காக பெருமைப்படும்.

ஷங்கருடன் பணிபுரிவது ரொம்ப கஷ்டம். அவர் மிகச்சிறந்த திறமைசாலி.

இவ்விழாவுக்கு வந்துள்ள சல்மான் கான் சம்மதித்தால் நாளைக்கே அவருடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கத் தயார்.

என் படங்களின் ரிலீஸை கடவுளும் ரசிகர்களும் ஒரு பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்.” என்று பேசினார்.

சல்மான்கான் செய்த காரியத்தால் ரஜினி ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் கான்களே நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களின் ரிலீசுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்பார்கள்.

காரணம் ரஜினிக்கு இந்தியளவில் மாபெரும் வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் தற்போது மும்பையில் நடைபெற்று வரும் ரஜினியின் 2.ஓ பர்ஸ்ட் லுக்குக்கு பாலிவுட் ஸ்டார் சல்மான்கான் வந்தார்.

அப்போது மேடையறிய சல்மான்கான், தான் அழைக்கப்படாமல் இங்கே வந்தேன். ரஜினி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவருக்காக இங்கே வந்தேன்” என பேசினார்.

அதன்பின்னர் ரஜினி பேசும்போது, சல்மான்கான் சம்மதித்தால், அவருடன் இணைந்து நடிக்க தயார் என்று கூறினார்.

பாலிவுட்டில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் சல்மான்கான், ஒரு விழாவுக்கு அழைக்கப்படாமலே ரஜினிக்காக வந்திருந்தது ரஜினி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

ரஜினியின் ‘2.0’ பட பர்ஸ்ட் லுக்கிலே பன்ச் சொன்ன ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.ஓ படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதில் ரஜினிகாந்துடன் எமி ஜாக்சன், அக்ஷய்குமார், சுதன்ஷு பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

பெரும்பாலும் ரஜினி படத்தில் பன்ச் டயலாக்ஸ்க்கு பஞ்சம் இருக்காது.

தற்போது 2.0 படத்தின் பர்ஸ்ட் லுக்கிலே பன்ச் இடம் பெற்றுள்ளது.

அதாவது… ‘உலகம் மனிதர்களுக்கு மட்டும் கிடையாது…’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

இதன் வெளியீட்டு விழாவை நேரடியாக யூடியுப் பக்கத்தில் ஒளிப்பரப்பு செய்யப்படும் என தெரிவித்தனர்.

ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் அது தடைப்பட்டுள்ளது.

ரஜினி-சிவகார்த்திகேயன் இடத்தைப் பிடித்த விஜய்ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் பல திரையரங்குகள் இருந்தாலும், முக்கியமான திரையரங்கமாக கருத்தப்படுவது சத்யம் சினிமாஸ்.

இந்த காம்ப்ளக்ஸில் பல தியேட்டர்கள் உள்ளன.

இதன் முகப்பில் பெரிய பேனர் வைக்கும் அளவுக்கு பெரிய இடம் உள்ளது.

இங்கு வெகுநாட்களாக கபாலி பேனர் இடம்பெற்றது.

இதே பேனர் ரெமோ படத்திலும் காட்டப்பட்டது.

அதுபோல் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ பட பேனரும் அங்கே வைக்கப்பட்டது.

தற்போது அந்த இடத்தில் விஜய் ஆண்டனியின் சைத்தான் பட பேனர் வைக்கப்பட்டுள்ளது.

 

வெளியானது 2.0 பர்ஸ்ட் லுக்… டெரர் வில்லன் அக்‌ஷய்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.ஓ படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதில் ரஜினிகாந்துடன் எமி ஜாக்சன், அக்ஷய்குமார், சுதன்ஷு பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

இதன் வெளியீட்டு விழாவை நேரடியாக யூடியுப் பக்கத்தில் ஒளிப்பரப்பு செய்து வருகின்றனர்.

இன்று மதியம், ரஜினி, அக்‌ஷய்குமார் முறைத்து கொள்வது போல் உள்ள படத்தை வெளியிட்டனர்.
அப்போதே இதன் மீதான எதிர்பார்ப்பு உருவானது.

தற்போது டெரர் முகம்காட்டும் அக்‌ஷய்குமாரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து பல பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது. இதற்காக 6 மணி நேரம் மேக்அப் போட்டு இருக்கிறாராம் அக்‌ஷய்குமார்.

இப்படம் அடுத்த வருடம் 2017 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

தொடர்பில் இருங்கள்…

 

தனுஷ்-கௌதம்மேனன் பட பர்ஸ்ட் லுக் பற்றிய தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன்.

இதில் மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார்.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தனது ஒன்றாக எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறார் கௌதம்.

விரைவில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நவம்பர் 27ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்களாம்.

இத்தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். ஆனால் இதில் வெளியீட்டுக்கான நேரம் குறிப்பிடப்படவில்லை.

More Articles
Follows