‘பாகுபலி’க்காக ஒரே மேடையில் ரஜினி-விஜய்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜமௌலி இயக்கியுள்ள ‘பாகுபலி 2’ படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி யூடிப்பில் சாதனை படைத்தது.

இப்படத்தின் தமிழ் பதிப்பு பாடல்கள் சென்னையில் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பதை பார்த்தோம்.

இதற்கான விழாவில் ரஜினி கலந்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக வந்த தகவல்களை பார்த்தோம்.

இந்நிலையில் விஜய்யும் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இது உறுதியாகும் பட்சத்தில், ரஜினியும் விஜய்யும் ஒரே மேடையில் இணையக்கூடும்.

Rajini and Vijay may participate in Baahubali 2 audio launch

விஜய்-முருகதாஸ் கூட்டணி உறுதி..? தயாரிப்பாளர் யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் தன் 61வது படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

அட்லி இப்படத்தை விறுவிறுப்பாக இயக்கி வருகிறார்.

இந்நிலையில் விஜய்யின் 62வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவது தற்போது உறுதியாகியுள்ளது.

இதற்கு முன்பு இவர்கள் இணைந்த துப்பாக்கி, கத்தி ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை பிரபல நிறுவனமான லைக்கா தயாரிக்க உள்ளதாம்.

2018ஆம் ஆண்டின் தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதால், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Vijay 62 movie will be directed by AR Murugadoss

‘ரஜினி இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு…’ திருமாவளவன் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

லைக்கா நிறுவன தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை பெயரில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் இவை.

இந்த வீடுகளை ஈழத்தமிழர்க்கு வழங்கும் விழா வருகிற ஏப்ரல் 9ம் தேதி யாழ்ப்பாணத்தில் நடக்கிறது.

இதில் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு வீடுகளை வழங்கவிருக்கிறார் என்பதை முன்பே பார்த்தோம்.

இந்நிலையில் ரஜினி இலங்கை செல்லக்கூடாது என பல்வேறு தரப்பினர் கூறிவருகின்றனர்.

மேலும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனும் இது குறித்து கூறியுள்ளார்.

இலங்கை சென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினி சிக்கலில் சிக்கிக் கொள்வார். எனவே அவர் செல்வதை தவிர்க்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

Rajini should not go to Srilanka for Lyca function says Thirumavalavan

சிம்பு-தனுஷ் படங்களுக்கு கௌதம் மேனன் ஏற்படுத்திய ஒற்றுமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தை தொடர்ந்து, தனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை இயக்கி வருகிறார் கௌதம் மேனன்.

மற்ற படங்களுக்கு எல்லாம் டைட்டில்தான் பிரச்சினையாக இருக்கும்.

ஆனால் தனுஷின் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யார்? என்பதை இன்னும் கௌதம் தெரிவிக்கவில்லை.

இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன் வெளியானது.

இது அச்சம் என்பது மடமையடா படத்தில் தனுஷ் நடித்திருக்கிறார் என்று பல ரசிகர்களும் தங்கள் கருத்துக்களை கூறிவருகின்றனர்.

இந்நிலையில் நாளை நான் பிழைப்பேனா என்ற 2வது பாடலை வெளியிடவிருக்கிறாராம் கௌதம்.

இப்பாடலும் அச்சம் என்பது மடமையடா படப்பாடலும் சில ஒற்றுமைகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதாவது… கீழே உள்ள படத்தை பார்த்தாலே பாடகர்கள் பற்றிய ஒற்றுமை உங்களுக்கு தெரியும்..

‘நடிக்கத் தெரியல; அதான் விலக முடிவு பண்ணிட்டேன்…’ ஆர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவுக்கும் தமிழக அரசியலுக்கும் உள்ள தொடர்பு கடந்த 50 ஆண்டு காலமாக இருந்து வருகிறது.

இதனால் திரை நட்சத்திரங்கள் அவ்வப்போது அரசியலில் தலை காட்டுவதுண்டு.

காமெடி நடிகையான ஆர்த்தி அதிமுக கட்சியில் நட்சத்திர பேச்சாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் திடீரென தன் அரசியல் பயணத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது…

சினிமாவிலும் சீரியலிலும் பிஸியாக நடித்து வருகிறேன். ஆனால் அரசியல் மூலமாக நடித்து மக்களை ஏமாற்றத் தெரியவில்லை.

அதனை நான் விரும்பவில்லை. எனவே, அதிமுக கட்சியில் இருந்து விலகுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Comedy Actress Aarthi decision about her status in Politics

‘கடுகு’ பார்த்து கதறி அழுத ராஜகுமாரன்-தேவயானி மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்கத்தில் ராஜகுமாரன், பரத் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கடுகு.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்ற நடிகர் சூர்யா இன்று இப்படத்தை நிறைய அரங்குகளில் வெளியிட்டார்.

இப்படத்தை நடிகை தேவயானி-ராஜகுமாரன் தம்பதிகளின் இரண்டு மகள்களும் பார்த்துள்ளனர்.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் உணர்வுப்பூர்வமாக இருக்கும்.

மேலும் அதில் ராஜகுமாரன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

தன் அப்பாவின் சிறந்த நடிப்பை பார்த்த இவர்களின் மூத்த மகள் கண்ணீர் விட்டு கதறி அழுதே விட்டாராம்.

மேலும் இப்படம் குறித்து தேவயானி கூறியதாவது…

கடுகு படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலே இப்படத்திற்கு கிடைத்த வெற்றிதான்” என்று தெரிவித்தார்.

Rajakumaran and Devayani ‘s elder daughter cried after watching Kadugu movie

More Articles
Follows