ஒரே மேடையில் முப்பெரும் விழாவை நடத்திய ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம்கி, இனியா நடித்த ‘மாசாணி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமான எம்.எஸ்.சரவணன், தனது ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் நிருவனம் மூலம் ‘சலீம்’, ‘ஜாக்சன் துரை’ ஆகியப் படங்களை தயாரித்ததோடு, ‘புலி’, ‘வேதாளம்’, ‘பாகுபலி 2’, ’போகன்’, ‘காக்கி சட்டை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்தவர் தொடர்ந்து பல படங்களை தயாரித்தும் விநியோகமும் செய்து வருகிறார்.

தற்போது ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் ஜி.வி.பிரகாஷ்குமார், சரத்குமார் நடிப்பில் உருவாகும் ‘அடங்காதே’, சிபிராஜ் நடிப்பில், இளையராஜா இசையமைப்பில் உருவாகும் ‘மாயோன்’ மற்றும் ரகுமான், அறிமுக ஹீரோ ஹவிஸ், நந்திதா சுவேதா ஆகியோரது நடிப்பில் உருவாகும் ‘செவன்’ ஆகிய மூன்று படங்களை தயாரித்து வருகிறது.

இந்த மூன்று படங்களின் விழாவும் சென்னை கலைவாணர் அரங்கில் முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

முதலில் ‘செவன்’ படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியிடப்பட்டது.

அதை தொடர்ந்து ‘மாயோன்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக ‘அடங்காதே’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ்குமார், சரத்குமார், யோகி பாபு, பாலிவுட் நடிகை மந்த்ரா பேடி, நடிகைகள் சுரபி, நந்திதா சுவேதா, சிபிராஜ், தயாரிப்பாளர்கள் ஆர்.கே.சுரேஷ், கதிரேஷன், டி.தியாகராஜன், இசையமைப்பாளர் ராஹனா, இயக்குநர்கள் பாண்டிராஜ், தங்கர் பச்சான் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்துக்கொண்டார்கள்.

ரகுமான், ஹவிஸ், ரெஜினா கெசண்ட்ரா, நந்திதா சுவேதா, டிரிடா செளத்ரி, அதித்தி ஆர்யா, புஜிதா பொன்னடா, அனிஷா ஆம்ரோஸ் ஆகியோரது நடிப்பில் நடிப்பில் ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் எம்.எஸ்.சரவணன் தயாரித்திருக்கும் ‘செவன்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்து, கூடுதல் திரைக்கதை அமைத்து வசனம் எழுதி நிஷார் ஷரீப் இயக்கியிருக்கிறார்.

கதை மற்றும் திரைக்கதையை ரமேஷ் வர்மா எழுத, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்திருக்கிறார். சய்தன் பரத்வாஜ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

சிபிராஜ் நடிப்பில் டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ’மாயோன்’ படத்தை கிஷோர் இயக்க, இளையராஜா இசையமைத்திருக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பு செய்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார், சுரபி, சரத்குமார், மந்த்ரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, பிளேட் சங்கர், அபிஷேக் சங்கர் ஆகியோரது நடிப்பில் ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் ‘அடங்காதே’ படத்தை சண்முகம் முத்துசுவாமி தயாரித்திருக்கிறார்.

பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார்.

Sri Green Production Saravanan conducted 3 movies events on Single stage

எல்லாருக்கும் பிடித்த *மேற்குத் தொடர்ச்சி மலை* படம் விஜய்சேதுபதிக்கே பிடிக்கலையாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜா இசையில் நடிகர் விஜய்சேதுபதி தயாரிப்பில் உருவாகி அனைவரது பாராட்டையும் பெற்ற படம் மேற்குத் தொடர்ச்சி மலை.

லெனின்பாரதி இயக்கிய இப்படம் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியானது.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்திருந்தார்.

இதில் ஆண்டனி, காயத்ரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்ட நடிகர் விஜய்சேதுபதி பேசும்போது…

இன்று உங்கள் அனைவரின் பாராட்டையும் இந்த மேற்குத் தொடர்ச்சி மலை பெற்றுள்ளது.

ஆனால் இந்த படத்தை முதலில் பார்த்த எனக்கு திருப்தி இல்லை. நான் என்னை அறிவாளியாக சினிமாவை முழுவதுமாக தெரிந்துக் கொண்டவனாக நினைத்து கொண்டுவிட்டேன்.

ஆனால் தற்போதுதான் என் முடிவு தவறு என தெரிகிறது. உங்களின் விமர்சனம் என்னுடைய பார்வையை மாற்றியுள்ளது.

இந்த படத்தை தயாரிக்க 2013ஆம் ஆண்டிலேயே என்னிடம் கேட்டார் லெனின் பாரதி. நான் இந்த படத்தில் நடிக்கட்டுமா? என்று கூட அவரிடம் கேட்டேன்.

அந்த சமயத்தில் நான் நடிக்கும் படங்களில் என் சம்பளம் 25லட்சம்தான். எனவே அப்போது முடியாது என்று கூறி வேறு தயாரிப்பாளரை அனுக சொல்லி விட்டேன்.

ஆனால் அவர் இத்தனை வருடங்கள் காத்திருந்தார்.

இந்த பெருமை அனைத்தும் இயக்குநர் லெனின் பாரதியை தான் சேரும். படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை.

இது வியாபார உலகம், யாரையும் நாம் குறை சொல்ல தேவையில்லை. ஒரு பொருளுக்கு டிமாண்ட் இருந்தால் தான் வியாபாரிகள் தேடி வருவார்கள். தற்போது பத்திரிகை விமர்சனங்கள் மூலம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ டிமாண்ட் உள்ள பொருளாக மாறியிருக்கிறது. இனி வியாபாரிகள் தேடி வருவார்கள்” என்று பேசினார் விஜய்சேதுபதி.

I am not satisfied with Merku Thodarchi Malai movie says Producer Vijay Sethupathi

விநாயகர் சதுர்த்தியன்று ரஜினிகாந்த் தரும் மெகா டீசர் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 2.0.

இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக அக்‌ஷய்குமாரும் ஹீரோயினாக எமி ஜாக்‌ஷனும் நடித்துள்ளனர்.

நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த வருட இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. முழுக்க 3டி கேமிரா தொழில்நுட்பத்தில் படம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் கிராபிக்ஸ் காட்சிகள் செய்வதில் கடினமாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

இறுதியாக நவம்பர் மாதம் 29-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ரூ. 500 கோடி பொருட்செலவில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகியுள்ள இப்படம் 13 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை விநாயகர் சதுர்த்தியன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2Point0 teaser will be released on 13th September as Vinayakar Chathuruthi special

5 நாட்களுக்கு தினமும் *சர்கார்* விருந்து; விஜய் ரசிகர்கள் குஷி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் சர்கார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் வரும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் இசையை வருகிற அக்டோபர் 2ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் உள்ள ஒர்க்கிங் ஸ்டில்ஸை தினமும் வெளியிட்டு வருகின்றனர்.

இது 5 நாட்களுக்கு மட்டுமே. இதனால் விஜய் ரசிகர்கள் அந்த படங்கள் உற்சாகத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Sarkar Team is releasing working stills every day

ஜோதிகாவின் “காற்றின் மொழி” படத்திற்காக டப்பிங் பேசிய சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காற்றின் மொழி ‘ படத்தில் நடிகர் சிலம்பரசன் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

நேற்று இப்படத்திற்கு சிம்பு டப்பிங் பேசி முடித்தார். பெரும் எதிர்பார்புக்குள்ளான இப்படத்தில் ஜோதிகா நடிக்க பாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், S விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ளார்கள் .

இப்படத்தில் FM ரேடியோ ஷோ ஒன்றில் கதாநாயகி ஜோதிகாவுடன் திரைப்பட நட்சத்திரமாக சிம்பு தோன்றுவது போல் காட்சி இடம் பெறுகிறது.

அவர் வரும் சீன்களை கேட்டதும் சிம்புவுக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஜோதிகாவுடன் திரையில் தோன்றுவதில் மகிழ்ச்சி. அவர் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. கண்டிப்பாக நடிக்கிறேன் என்று நடித்துக்கொடுத்தார் சிம்பு.

டப்பிங் பேசி முடித்த சிம்பு தன்னுடைய காட்சி சிறப்பாக வந்துள்ளதாக என்னை அழைத்து கூறினார். அவர் இந்த படத்தில் பணியாற்றியது படத்துக்கு பெரிய பலம். அவருக்கும் இந்த படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி என்றார் தாயாரிப்பாளர் தனஞ்ஜெயன்.

காற்றின் மொழி போஸ்ட் புரொடக்சன் வேலைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

வருகிற அக்டோபர் 18 ஆயுத பூஜை சிறப்பு வெளியீடாக வெளியாகவுள்ளது இத்திரைப்படம். அக்டோபர் 18 நாயகி ஜோதிகாவின் பிறந்த நாள் என்பது கூடுதல் தகவல்.

STR dubs for his portions in Jyotika starrer Kaatrin Mozhi

சூர்யாவை சுற்றி வளைத்து ராஜு பாய் என கோஷமிட்ட ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா மற்றும் இயக்குனர் செல்வராகவனின் என்ஜிகே படத்தின் படப்பிடிப்பு ராஜாமுந்திரியில் வைத்து நடைபெற்று வருகிறது.

இதில் சூர்யா பங்குபெற்று நடித்து வருகிறார். அவர் நடிக்கும் காட்சிகள் வேகமாக அங்கு படமாக்கப்பட்டு வருகிறது.

சூர்யாவின் என்ஜிகே படப்பிடிப்பு அங்கே நடைபெறுகிறது என்று இயக்குனர் செல்வராகவன் ட்விட்டரில் பதிவிட்டதிலிருந்து. அங்குள்ள ரசிகர்கள் அவரை காண படப்பிடிப்பு தளத்துக்கு வந்தவண்ணம் இருந்தனர்.

நேற்று சூர்யாவை காண படப்பிடிப்பு தளத்துக்கு வந்த ரசிகர்கள் கேரவனில் இருந்து வெளியே வந்த சூர்யாவை சூழ்ந்தனர்.

சூர்யாவை சூழ்ந்து ராஜு பாய், சூர்யா என்று கோஷங்கள் எழுப்பிய வண்ணம் அவருக்கு அன்பு வரவேற்பு அளித்தனர்.

சூர்யாவும் அவர்களுக்கு கையசைத்து அவர்களின் அன்பை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

தெலுங்கில் தமிழுக்கு நிகராக சூர்யாவுக்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்பது நாம் அறிந்த ஒன்று. அவரை நேற்று ரசிகர்கள் சூழ்ந்து கோஷங்கள் எழுப்பியது ஏதோ தமிழ் நாட்டில் நடக்கிறதா ? அல்லது ஆந்திராவில்லா ? என்று ஒரு யோசிக்க வைத்தது என்று தான் கூறவேண்டும்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் சூர்யாவின் என்ஜிகே திரைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்க ட்ரீம் வாரியார் பிச்சர்ஸ் S.R. பிரகாஷ் பாபு , S.R. பிரபு தயாரிக்கிறார்கள்.

Suriya fans crowd Rajamundry at NGK shooting

More Articles
Follows